மேலும் அறிய

கள்ளக்காதலிக்காக டிரைவர்கள் சண்டை; மோதலில் தொடங்கி கொலையில் முடிந்த சம்பவம்..!

திருச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை. இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனியை சேர்ந்தவர் சதீஷ் என்ற சக்திகுமார் (வயது 34). வேன் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். சக்திகுமாரின் மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். இதையடுத்து பெற்றோருடன் அவரது மகன் வசித்து வருகிறான். சக்திகுமார் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் திருவெறும்பூர் காந்திநகர், சுருளி கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32). இவர் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் டாக்டர்களுக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.  சக்திகுமார் மற்றும் முத்துப்பாண்டிக்கு பெண் சகவாசம் இருந்துள்ளது. மேலும் சக்திகுமார் வீட்டின் அருகே இருந்த ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன், முத்துப்பாண்டிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணுக்கும், சக்திகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணுடன் பழகுவது தொடர்பாக முத்துப்பாண்டியை சக்திகுமார் கண்டித்துள்ளார்.


கள்ளக்காதலிக்காக டிரைவர்கள்  சண்டை;  மோதலில் தொடங்கி கொலையில் முடிந்த சம்பவம்..!

மேலும், அதை கேட்காமல் முத்துப்பாண்டி தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனால் இதுபற்றி அந்த பெண்ணின் அண்ணனிடம் கூறிவிடுவதாக முத்துப்பாண்டியை சக்திகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து முத்துப்பாண்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் சக்திகுமாரின் வீட்டிற்கு சென்று அவரிடம் இனி அந்த பெண்ணுடன் பழகமாட்டேன் என்றும், அதனால் இப்பிரச்சினை குறித்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் கூற வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அப்போது முத்துப்பாண்டிக்கும், சக்திகுமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார், சக்திகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget