மேலும் அறிய

திருச்சி அருகே மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை - ஒருவர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளை அடித்த ஒருவர் அதிரடியாக கைது. மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவில், நாகப்பன் மனைவி கல்யாணி என்பவர் அவரது கணவருடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 03 ஆம் தேதி காலை கல்யாணியின் கணவர் நாகப்பன் முத்தன் தெருவில் உள்ள வள்ளியப்பா எலக்ட்ரிக்ஸ் என்ற தனது கடைக்கு வழக்கம்போல் சென்றுள்ளார்.

அப்போது கல்யாணியின் மகன் ராமநாதன் என்பவர் அன்று மதியம் மதிய உணவு வாங்க வந்தபோது வீட்டின் சமையலறையில் கல்யாணியின் உடலில் எவ்வித காயங்களுமின்றி இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட உடன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவரது கழுத்தில் இருந்த தாலி செயின் -09 பவுன், காதில் ஒரு ஜோடி வைரதோடு-01 பவுன், வளையல் 08 பவுன், மோதிரம் 1/2 பவுன் நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் ரூ. 30,000 ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது.

மேலும் தனது தாயின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக மகன் ராமநாதன் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் சந்தேக மரண வழக்கு பதிவு செய்தனர்.


திருச்சி அருகே மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை - ஒருவர் கைது

நகை - பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்தோம் - பரபரப்பு வாக்குமூலம்

இந்த சந்தேக மரணம் வழக்கு தொடர்பாக, மணப்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் மரியமுத்து  தலைமையில் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் விவேக் கண்ணன் மற்றும் மணப்பாறை காவல் ஆய்வாளர் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு, இறந்துபோன கல்யாணி என்பவரின் வீட்டிற்கு தண்ணீர் கேன் போடும் கேசவன் என்பவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்து சென்றதாக தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்படி சம்பவ இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை கூர்ந்து ஆய்வு செய்தனர். கேசவன் என்பவர் வந்து சென்றது உண்மையென தெரியவந்ததால், தனிப்படையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாணையில், கேசவன், தனது நண்பர்களான ராமசந்திரன், ராமன், வெங்கடேஷ் ஆகியோர்களுடன் சேர்ந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடிக்கும் நோக்கில்  கல்யாணியின் வாய் மற்றும் மூக்கினை கையால் பொத்தி கொலை செய்து உள்ளனர். பின்பு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்தாக கேசவன் வாக்குமூலம் கொடுத்தார். ஆகையால்  வழக்கானது ஆதாய கொலை குற்ற சட்ட பிரிவாக மாற்றம் செய்யபட்டு, குற்றவாளி கேசவன் என்பவரை  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கபட்டார்.

மேலும், கொலையுண்டு இறந்துபோன கல்யாணியின் வழக்கில் தொடர்புடைய ராமசந்திரன், வெங்கடேஷ், ராமன் மற்றும் சிலரை தனிப்படையினர் தேடிவருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget