மேலும் அறிய

திருச்சி அருகே மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை - ஒருவர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளை அடித்த ஒருவர் அதிரடியாக கைது. மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவில், நாகப்பன் மனைவி கல்யாணி என்பவர் அவரது கணவருடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 03 ஆம் தேதி காலை கல்யாணியின் கணவர் நாகப்பன் முத்தன் தெருவில் உள்ள வள்ளியப்பா எலக்ட்ரிக்ஸ் என்ற தனது கடைக்கு வழக்கம்போல் சென்றுள்ளார்.

அப்போது கல்யாணியின் மகன் ராமநாதன் என்பவர் அன்று மதியம் மதிய உணவு வாங்க வந்தபோது வீட்டின் சமையலறையில் கல்யாணியின் உடலில் எவ்வித காயங்களுமின்றி இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட உடன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவரது கழுத்தில் இருந்த தாலி செயின் -09 பவுன், காதில் ஒரு ஜோடி வைரதோடு-01 பவுன், வளையல் 08 பவுன், மோதிரம் 1/2 பவுன் நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் ரூ. 30,000 ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது.

மேலும் தனது தாயின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக மகன் ராமநாதன் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் சந்தேக மரண வழக்கு பதிவு செய்தனர்.


திருச்சி அருகே மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை - ஒருவர் கைது

நகை - பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்தோம் - பரபரப்பு வாக்குமூலம்

இந்த சந்தேக மரணம் வழக்கு தொடர்பாக, மணப்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் மரியமுத்து  தலைமையில் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் விவேக் கண்ணன் மற்றும் மணப்பாறை காவல் ஆய்வாளர் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு, இறந்துபோன கல்யாணி என்பவரின் வீட்டிற்கு தண்ணீர் கேன் போடும் கேசவன் என்பவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்து சென்றதாக தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்படி சம்பவ இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை கூர்ந்து ஆய்வு செய்தனர். கேசவன் என்பவர் வந்து சென்றது உண்மையென தெரியவந்ததால், தனிப்படையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாணையில், கேசவன், தனது நண்பர்களான ராமசந்திரன், ராமன், வெங்கடேஷ் ஆகியோர்களுடன் சேர்ந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடிக்கும் நோக்கில்  கல்யாணியின் வாய் மற்றும் மூக்கினை கையால் பொத்தி கொலை செய்து உள்ளனர். பின்பு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்தாக கேசவன் வாக்குமூலம் கொடுத்தார். ஆகையால்  வழக்கானது ஆதாய கொலை குற்ற சட்ட பிரிவாக மாற்றம் செய்யபட்டு, குற்றவாளி கேசவன் என்பவரை  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கபட்டார்.

மேலும், கொலையுண்டு இறந்துபோன கல்யாணியின் வழக்கில் தொடர்புடைய ராமசந்திரன், வெங்கடேஷ், ராமன் மற்றும் சிலரை தனிப்படையினர் தேடிவருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget