மேலும் அறிய

‛அடிச்சிடுவியா... சாதாரண ஆள் கிடையாது; சட்டை வாங்கிக்கொடு’ -டிராபிக் போலீசிடம் போதை ஆசாமி ரகளை!

இங்கு ஒருத்தர், போலீஸ் என்றே தெரிந்தும் அவரிடம் செம ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேல் போலீஸ் அதிகாரி என்று தெரியாமல் ஒருவரிடம் ரகளையில் ஈடுபடுவார்.  “என்னாது போய் தொலையா... நாங்க போவோம்.. இல்லைன்னா இங்கேயே பாய் போட்டு மல்லாக்க படுத்து தூங்குவோம்.. உனக்கென்ன?” என்பார் வடிவேல். வேண்டாம் என போலீஸ் கூற ‘என்ன கொடுத்தாங்க உனக்கு வேணாம்ங்கிற’ என்று அதற்கும் நக்கல் அடிப்பார். மேலும் “நாங்க ரொம்ப மோஷமான ஆளு... எந்த லெவலுக்கு இறங்கி அடிமட்டம் வரைக்கும் சென்று அலசுவோம்” என உதார் விடுவார் வடிவேல். என்ன சண்டைக்கு வரியா என போலீஸ் கேட்க, மண்ட பத்திரம் எனக்கூறி வடிவேல் சைகையிலேயே அவரை போகச்சொல்வார். “பாளையங்கோட்டை ஜெயில்லதான் படிச்சதே... வேலூர் ஜெயில்ல வெள்ளையடிச்சி வாடகைக்கு விட்டுட்டு திரியிறோம். பல ஆண்டுகளாக மதுரை ஜெயில்ல மைதானம் அமைச்சி மல்யுத்தம் நடத்தன பரம்பரை எங்க பரம்பரை” என இஷ்டத்துக்கு அடிச்சி விடுவார்.   இறுதியில் அவர் போலீஸ் எனத் தெரிஞ்சதும் அப்படியே பம்பி விடுவார். 

ஆனால் இங்கு ஒருத்தர், போலீஸ் என்றே தெரிந்தும் அவரிடம் செம ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேரூராட்சி ஏரிக்கரைமூலைப்பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தப்பேட்டையிலிருந்து ஏரிக்கரைமூலைப்பகுதிக்கு 3 பேர் பதிவு எண் இல்லாத இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த போக்குவரத்து தலைமை காவலர் செல்வக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார். 

உடனே வாகனத்தில் வந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் ஒருவரை செல்வக்குமார் சட்டையை பிடித்து இழுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதில் அந்த நபரின் சட்டை பட்டன் பிய்ந்துள்ளது. இதனால் அந்த நபர் ஆத்திரமடைந்து போலீசாரிடம் செம ரகளையில் ஈடுபட்டார். ஒழுங்கா போ என போலீஸ் சொல்ல, அதற்கு வடிவேல் போல் “என்னை அடிச்சிடுவியா.. அடிச்சிடுவியா... ஊர்க்காரன். சட்டையை பிடித்து இழுக்குற. என் மானம் என்ன ஆகுறது. சட்டை பட்டனை பிச்சிட்ட. என் சட்டைய பிடிச்சவன் தலை இங்கேயே துண்டாகிருக்கும்” என சத்தம் போட்டுள்ளார். பட்டனை தச்சிக்கலாம் என போலீஸ் சொல்ல, அதெல்லாம் முடியாது... புது சட்டை வாங்கிக்கொடு என கூறுகிறார் அந்த நபர். 

இதையடுத்து தகவலறிந்து வந்த உதவி ஆய்வாளர் சிவசந்திரன் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை சட்டை வாங்கித்தருவதாக கூறி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், ரகளையில் ஈடுபட்ட நபர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பதும் அவர் போதையில் இருந்ததும் தெரியவந்தது. 

தொடர்ந்து போக்குவரத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
" சொத்துக்காக விஷ ஊசி போட்டு கொலை " மாரடைப்பு என நாடகம் !! இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Embed widget