மேலும் அறிய

திமுக எம்.எல்.ஏ., மகனின் கார் விபத்திற்கு காரணம் என்ன? பெங்களூரு போலீஸ் விளக்கம்!

பெங்களூரு கோரமங்களாவில் நடந்த கொடூர விபத்தில் ஆடி கார் கட்டுப்பாடு இழந்து, சாலையோரத் தடுப்புகளிலும் கட்டடம் ஒன்றை இடித்து நின்றதில், திமுக எல்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பெங்களூரு கோரமங்களாவில் நடந்த கொடூர விபத்தில் ஆடி கார் கட்டுப்பாடு இழந்து, சாலையோரத் தடுப்புகளிலும் கட்டடம் ஒன்றை இடித்து நின்றதில், 20 முதல் 30 வயது வரை உட்பட்ட 7 பேர் பலியாகினர். திமுகவைச் சேர்ந்தவரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர் இந்த விபத்தில் பலியாகினார். இஷிடா, தனுஷ், அக்‌ஷய் கோயல், ரோஹித் என்ற மற்ற பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். 

சாலைப் பாதுகாப்பு இணை காவல் ஆணையர் ரவிகந்தே கௌடா இந்த விபத்து குறித்து அளித்த பேட்டியில், ”7 பேர் பயணித்த சொகுசு ஆடி கார் ஒன்று, வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து நள்ளிரவு சுமார் 1.45 மணிக்கு அங்கிருந்த கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் முழுவதும் உடைந்து நொறுங்கியுள்ளது. காரில் பயணித்த யாருமே சீட் பெல்ட் அணியாததால், அதில் இருந்து ஏர் பேக் எதுவும் திறக்கவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் அவர் விபத்து நடந்த இடத்திலேயே 6 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மட்டும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த 15 நிமிடத்தில் சாலைப் பாதுகாப்பு காவல்துறையினர் கூடி, உயிருடன் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். 

திமுக எம்.எல்.ஏ., மகனின் கார் விபத்திற்கு காரணம் என்ன? பெங்களூரு போலீஸ் விளக்கம்!
Audi Q3 35 TDI Quattro

 

விபத்திற்குள்ளான காரில் இருந்த வசதிகள் என்ன?

5 சீட்களைக் கொண்டுள்ள Audi Q3 35 TDI Quattro கார் சுமார் 40 லட்ச ரூபாய் விலை மதிப்பு கொண்டது. இதில் 4 ஏர் பேக் வசதி உண்டு. எனினும், காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால், காரைப் பொறுத்த வரை, யாரும் பயணிக்கவில்லை என்று புரிந்துகொள்ளப்பட்டு, விபத்து நேர்ந்தால் ஏர் பேக் எதுவும் திறக்காது. சீட் பெல்ட் போடப்பட்டிருந்தால், விபத்து நேரும் போது, ஏர் பேக் திறந்து காரின் மற்ற பகுதிகளின் மேல் பயணிகள் மோதாமல் பாதுகாக்கும். இதன் மூலம் பயணிகள் பாதுகாப்புடன் விபத்தில் இருந்து உயிருடன் தப்பிக்க முடியும். மேலும் 4 பேர் பயணிக்க வேண்டிய வாகனத்தில் 6 பேர் பயணித்திருப்பதும் இந்த விபத்து நேர்வதற்குக் காரணமாக இருந்துள்ளன. கவனமின்றி வாகனத்தை இயக்கியதால், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக எம்.எல்.ஏ., மகனின் கார் விபத்திற்கு காரணம் என்ன? பெங்களூரு போலீஸ் விளக்கம்!

பொதுப் பாதையில் கவனமற்று பயணித்ததற்காக 279வது சட்டப்பிரிவு, கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் 304வது சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ”முதல் கட்ட விசாரணையின்படி, இந்த விபத்தின் காரணம் அதீத வேகமும், கவனக்குறைவுடன் வாகனத்தை இயக்கியதும் ஆகும். வாகனத்தை ஓட்டியவர் மது அருந்தியிருந்தாரா என்பது உடல் கூராய்வுக்குப் பிறகு தெரிய வரும்” என்று காவல் ஆணையர் ரவிகந்தே கௌடா தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget