மேலும் அறிய

4 வயது சிறுமி பாலியல் வழக்கு: 4 திருமணம் செய்த தனியார் பள்ளியின் போக்குவரத்து மேலாளர் கைது

இந்த விசாரணையில் இப்பள்ளியின் வாகன போக்குவரத்து மேலாளரான கார்த்தீபன் வயது (50) என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டு அருகில் உள்ள கெங்கைசூடாமணி கிராமத்தில் தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படிக்கும் சிறுமிக்கு கடந்த 25 தினங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு பள்ளியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான சிறுமியிடம் பெற்றோர் , காவல் துறையினர் அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு நபர்களின் புகைப்படத்தை வைத்து கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி பள்ளி தாளாளரின் கணவர் காமராஜை அடையாளம் காட்டியதாகவும் பலமுறை புகைப்படத்தை மாற்றி வைத்தும் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்தை எடுத்துவிட்டு கேட்ட போதும், பள்ளியின் தாளாளரின் கணவரின் புகைப்படத்தை பாதிப்புக்குள்ளாகிய சிறுமி அடையாளம் காட்டியுள்ளார். அதனையடுத்து காவல்துறையினர் காமராஜின் செல்போன் சிக்னலை வைத்து திருச்செந்தூர் அருகில் எட்டையபுரம் பகுதியில் கைது செய்து ஞாயிறுக்கிழமை அதிகாலை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.

இதற்கு முன்னதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் காமராஜ் சேத்பட் அருகே உலகப்பட்டு கிராமத்தில் உள்ள அரசுபள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவது தெரிய வந்தது. காமராஜின் மனைவி தாளாளராக உள்ள பள்ளிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் 4 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போளுர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் சம்பவ இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு மாணவியின் வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் கைரேகைகளையும் சேகரித்துள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

 


4 வயது சிறுமி  பாலியல் வழக்கு:  4 திருமணம் செய்த தனியார் பள்ளியின் போக்குவரத்து மேலாளர் கைது

பின்னர் இந்த சம்பவமாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பள்ளி ஆசிரியர் காமராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காமராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். ஞாயிறு கிழமை இரவு காமராஜை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று பின்னர் திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதி அரசர் முன்பாக ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த விசாரணையில் இப்பள்ளியின் வாகன போக்குவரத்து மேலாளரான கார்த்தீபன் வயது (50) என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் பெரணமல்லூர் ஒன்றியம் கெங்காபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவருக்கு 4 மனைவிகள். அனைவரும் பிரிந்து சென்றுவிட்டனர். பாலியல் வன்கொடுமைக்கு கார்த்தீபனும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்ததால் அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget