மேலும் அறிய

திருவண்ணாமலை: முதியோர் உதவித்தொகை பெற்றுத் தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் - பெண் வருவாய் ஆய்வாளர் கைது

திருவண்ணாமலை அருகே முதியோர் உதவித்தொகை பெற்றுத் தர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் கையும் காலவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த உள்ள ஊசாம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் புதுராமன். இவருடைய மனைவி சுலோச்சனா. இவர்களுடைய ‌மகன் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றார்.சுலோச்சனாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து சுலோச்சனா கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு முதல் விதவை உதவித் தொகை பெற்று குடும்பம் நடத்தி வருகிறார். இதனிடையே சுலோச்சனா, கனகா, குப்பு ஆகிய மூன்று பெண்கள் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். அவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. மீண்டும் முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 நபர்களும் மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் புது மல்லவாடி வருவாய் ஆய்வாளரான ஷாயாஜி பேகத்தை விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 


திருவண்ணாமலை: முதியோர் உதவித்தொகை பெற்றுத் தர  ரூ.5 ஆயிரம் லஞ்சம் -  பெண் வருவாய் ஆய்வாளர் கைது

 

அப்போது வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், மனு கொடுத்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது மீண்டும் உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் லஞ்சமாக தலா 15 ஆயிரம் தர வேண்டும் என  அவர்களிடம் கேட்டுள்ளார். அதன்படி 3 நபர்களும் முதற்கட்டமாக தலா 5 ஆயிரம் என 15 ஆயிரத்தை லஞ்சப் பணமாக கடந்த 15-ந்து நாட்களுக்கு முன்பு கொடுத்துள்ளனர். அதனை வாங்கிக்கொண்ட ஷாயாஜி பேகம் மீதமுள்ள பணத்தை நீங்கள் மூன்று நபர்களும் கொடுத்தால் தான் முதியோர் உதவித்தொகை வழங்க பரிந்துரைப்பேன் என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இவர்களிடம் லஞ்சம் கொடுக்க வசதி இல்லாததால், சுலோச்சனா திருவண்ணாமலை லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரியை அணுகியுள்ளார். அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

 


திருவண்ணாமலை: முதியோர் உதவித்தொகை பெற்றுத் தர  ரூ.5 ஆயிரம் லஞ்சம் -  பெண் வருவாய் ஆய்வாளர் கைது

 

பின்னர் லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரி ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புதுமல்லவாடி கிராமத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகத்திடம் அவரது அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை, லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகத்தினை கையும் களவுமாக பிடித்து கைது செய்து அங்கேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது  ஷாயாஜி பேகத்தின் பையில் வைத்திருந்த 40 ஆயிரம் ரொக்கத்தையும் கைப்பற்றி இந்த பணம் நீங்கள் லஞ்சமாக பெற்ற பணமா என  லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget