மேலும் அறிய

அடுத்தடுத்து பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - திருவண்ணாமலையில் சோகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாப பலி. இதில் ஒருவர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை அடுத்த களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மாமன் மகன் முருகன். இவர்கள் இருவரும் நேற்று இரவு திருவண்ணாமலை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தில் இருந்து தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் செம்மண் குட்டை அருகே இரவு சென்றுள்ளனர். அப்போது திருவண்ணாமலை அடுத்த கிளியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ் மற்றும் காளிதாஸ் இவர்கள் இருவரும் மங்கலம் கிராமத்தில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்ப்பதற்காக தங்களுக்கு சொந்தமான பல்சர் பைக்கில் செம்மண் குட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்பொழுது எதிரே வந்து கொண்டிருந்த ரமேஷின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் வேகமாக பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். 

ICC: அனைத்து வகை பள்ளிகளிலும்‌ உள்ளக புகார் குழு கட்டாயம்; விதிமுறைகள் வெளியீடு- என்னென்ன?

 


அடுத்தடுத்து பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - திருவண்ணாமலையில் சோகம்

ABP Nadu Exclusive: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு

பைக் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி ஒருவர் கவலைக்கிடம்

இரவு நேரத்தில் இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் கிளியாபட்டு கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த முருகன் மற்றும் காளிதாஸ் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முருகன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் காளிதாஸ் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த கோர விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


அடுத்தடுத்து பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - திருவண்ணாமலையில் சோகம்

வந்தவாசியில் பைக் நேருக்கு நேர் மோதி 3 இளைஞர் பரிதாப பலி 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குமரன் மகன் ஆகாஷ் வயது (22). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலை வெண்குன்றம் அருகே சென்றபோது, எதிரே வந்தவாசி நோக்கி வந்த ஆகாஷ் ஓட்டி வந்த பைக்குடன் நேருக்குநேர் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்தில் சிக்கிய மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரட்டைவாடை செட்டி தெருவை சேர்ந்த மெக்கானிக் விஜயன் வயது (33), அவருடன் வந்த சென்ட்ரிங் தொழிலாளி சிவா வயது (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்குகொண்டு செல்லும் வழியிலேயே அடுத்தடுத்து இருவரும் இறந்தனர். இதுகுறித்து வந்தவாசி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இருசக்கர வாகன விபத்து ‌ சம்பவம் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தால் திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
Embed widget