மேலும் அறிய

Crime: 2 வயது குழந்தை சூடுவைத்து சித்ரவதை செய்து கொலை - 2வது கணவர் கைது

ஆரணி அருகே 2 வயது குழந்தையை இரும்பு கம்பியால் தாக்கியும், சூடு வைத்தும் சித்ரவதை செய்து வந்த கட்டிட மேஸ்திரி, சுடுகஞ்சியை ஊற்றி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் மாணிக்கம் வயது (31). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். மாணிக்கத்தின் உறவினரான ஆரணி அடுத்த சந்தவாசல் பகுதியை சேர்ந்த ஜெயசுதா வயது (29), இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தபோது பூந்தமல்லியை சேர்ந்த குணசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது 2 வயது மகன் ஏனோக்ராஜ் வயது (2). குடும்ப தகராறு காரணமாக குணசேகரனை பிரிந்து, ஜெயசுதா குழந்தையுடன் சந்தவாசல் பகுதியில் தனியாக வசித்து வருகிறார் .

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜெயசுதாவை மாணிக்கம் 2வது திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் ஜெயசுதா கர்ப்பமாகியுள்ளார். மாணிக்கத்திற்கு தெரியாமல் அவர் கர்ப்பத்தை கலைத்து விட்டாராம்.  மாணிக்கம் வீட்டில் ஏனோக்ராஜ் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் மாணிக்கம், ஜெயசுதாவிடம் யாருக்கோ பிறந்த குழந்தையை நான் ஏன் வைத்து வளர்க்க வேண்டும்? எனக் கேட்டு வந்ததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, அவர்களுக்கு இடையே தொடர்ந்து தகராறும் நடந்து வந்தது. மேலும் கோபத்தில் இருந்து வந்த மாணிக்கம், சிறுவன் ஏனோக்ராஜ் மீது வெந்நீரை எடுத்து ஊற்றுவது, சாதம் வடித்த சுடு கஞ்சியை அவன் மீது ஊற்றுவது, சூடாக இருக்கும் கஞ்சி பாத்திரத்தை அவன் மீது வைப்பது என சூடுவைத்து கொடுமை செய்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு கொடுமைப்படுத்தி வந்ததில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதற்காக சிறுவனை கடந்த அக்டோபர் மாதம் 23-ந்தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீடு திரும்பினர்.

 


Crime: 2 வயது குழந்தை சூடுவைத்து சித்ரவதை செய்து கொலை -  2வது கணவர் கைது

மேற்கண்ட சம்பவம் தொடர்பாக ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுவன் ஏனோக்ராஜுக்கு வலி அதிகமாகியது. உடலில் பல இடங்களில் கொப்புளங்கள் உருவாகின. மேலும் சிறுவனை மீண்டும், ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஏனோக்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து ஜெயசுதாவின் 2-வது கணவராக குடும்பம் நடத்தி வந்த மேஸ்திரி மாணிக்கத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Breaking News LIVE:மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Congress MP:
Congress MP: "தமிழ்க் கடவுள் முருகன் மீது" திரும்பி பார்க்க வைத்த மயிலாடுதுறை எம்.பி.யின் பதவியேற்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Breaking News LIVE:மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Congress MP:
Congress MP: "தமிழ்க் கடவுள் முருகன் மீது" திரும்பி பார்க்க வைத்த மயிலாடுதுறை எம்.பி.யின் பதவியேற்பு!
Madurai:
Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?
Kalki 2898 AD: ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா பிரபாஸின் கல்கி? ரசிகர்கள் ஆர்வம்
Kalki 2898 AD: ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா பிரபாஸின் கல்கி? ரசிகர்கள் ஆர்வம்
தென்காசி: அரசு பேருந்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்..! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!
தென்காசி: அரசு பேருந்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்..! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து
Embed widget