மேலும் அறிய

Crime: 2 வயது குழந்தை சூடுவைத்து சித்ரவதை செய்து கொலை - 2வது கணவர் கைது

ஆரணி அருகே 2 வயது குழந்தையை இரும்பு கம்பியால் தாக்கியும், சூடு வைத்தும் சித்ரவதை செய்து வந்த கட்டிட மேஸ்திரி, சுடுகஞ்சியை ஊற்றி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் மாணிக்கம் வயது (31). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். மாணிக்கத்தின் உறவினரான ஆரணி அடுத்த சந்தவாசல் பகுதியை சேர்ந்த ஜெயசுதா வயது (29), இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தபோது பூந்தமல்லியை சேர்ந்த குணசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது 2 வயது மகன் ஏனோக்ராஜ் வயது (2). குடும்ப தகராறு காரணமாக குணசேகரனை பிரிந்து, ஜெயசுதா குழந்தையுடன் சந்தவாசல் பகுதியில் தனியாக வசித்து வருகிறார் .

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜெயசுதாவை மாணிக்கம் 2வது திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் ஜெயசுதா கர்ப்பமாகியுள்ளார். மாணிக்கத்திற்கு தெரியாமல் அவர் கர்ப்பத்தை கலைத்து விட்டாராம்.  மாணிக்கம் வீட்டில் ஏனோக்ராஜ் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் மாணிக்கம், ஜெயசுதாவிடம் யாருக்கோ பிறந்த குழந்தையை நான் ஏன் வைத்து வளர்க்க வேண்டும்? எனக் கேட்டு வந்ததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, அவர்களுக்கு இடையே தொடர்ந்து தகராறும் நடந்து வந்தது. மேலும் கோபத்தில் இருந்து வந்த மாணிக்கம், சிறுவன் ஏனோக்ராஜ் மீது வெந்நீரை எடுத்து ஊற்றுவது, சாதம் வடித்த சுடு கஞ்சியை அவன் மீது ஊற்றுவது, சூடாக இருக்கும் கஞ்சி பாத்திரத்தை அவன் மீது வைப்பது என சூடுவைத்து கொடுமை செய்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு கொடுமைப்படுத்தி வந்ததில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதற்காக சிறுவனை கடந்த அக்டோபர் மாதம் 23-ந்தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீடு திரும்பினர்.

 


Crime: 2 வயது குழந்தை சூடுவைத்து சித்ரவதை செய்து கொலை -  2வது கணவர் கைது

மேற்கண்ட சம்பவம் தொடர்பாக ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுவன் ஏனோக்ராஜுக்கு வலி அதிகமாகியது. உடலில் பல இடங்களில் கொப்புளங்கள் உருவாகின. மேலும் சிறுவனை மீண்டும், ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஏனோக்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து ஜெயசுதாவின் 2-வது கணவராக குடும்பம் நடத்தி வந்த மேஸ்திரி மாணிக்கத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Jagan Moorthy: எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு!  வாக்கு கொடுத்த அமித்ஷா..  மாநில அரசியல் ஸ்கெட்ச்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா.. மாநில அரசியல் ஸ்கெட்ச்
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்
EPS Vs Amit Shah : ’கூட்டணி ஆட்சிக்கு இடையூறு!முதல்வர் வேட்பாளரை மாற்றுவேன்’’அமித்ஷா மிரட்டல்?
பல பெண்களுடன் சுற்றிய ஸ்ரீகாந்த்?டாட்டா காட்டிய மனைவி வந்தனா | Vandhana Srikanth Arrested Issue

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jagan Moorthy: எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு!  வாக்கு கொடுத்த அமித்ஷா..  மாநில அரசியல் ஸ்கெட்ச்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா.. மாநில அரசியல் ஸ்கெட்ச்
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
"என் மகனுக்கு பதவி வேணும்” துரைமுருகன் கண்டிஷன்- தீவிர அரசியலுக்கு முற்றுப்புள்ளி?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி  மீது அமித்ஷா குற்றச்சாட்டு
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி மீது அமித்ஷா குற்றச்சாட்டு
LIVE | Kerala Lottery Result Today (27.06.2025): வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
Embed widget