மேலும் அறிய

திருவண்ணாமலையில் வழிப்பறி கொள்ளையில் பிரச்னை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

திருவண்ணாமலையில் 4க்கும் மேற்பட்ட தரப்பினர் வழிப்பறி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2 பேர் வெட்டுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த கிளியாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் வயது (27). அதேபோன்று திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் வயது (24). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பச்சையப்பனும், அஜித் ஆகிய இருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பச்சையப்பன் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த சுமார் 4 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் பச்சையப்பனை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர். அதனை அவர் தடுத்தபோது அவரது கையில் அரிவாளால் வெட்டு விழுந்து உள்ளது. 

 


திருவண்ணாமலையில் வழிப்பறி கொள்ளையில் பிரச்னை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

பின்னர் சுதாரித்துக் கொண்ட பச்சையப்பன் அருகில் உள்ள கடைக்குள் ஓடி மறைந்துக்கொள்ள சென்றார். அப்போது அந்த மர்ம நபர்கள் பச்சையப்பன் மறைந்த இடத்தை கண்டதும் பச்சையப்பனை ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பச்சையப்பனுக்கு தலையில் வெட்டு விழந்தது. இதனால் பலத்த காயம் ஏற்பட்டது. அதபோன்று அஜித் என்பவர் அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதிக்கு அருகே வரும் பொழுது இதே கும்பலை சேர்ந்த மர்ம நபர்கள் அஜித்தையும் வழிமறித்து அரிவாளால் கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் அஜித்திற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள நபர்கள் திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சையப்பனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 


திருவண்ணாமலையில் வழிப்பறி கொள்ளையில் பிரச்னை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

 

மேலும், மருத்துவமனையில் பச்சையப்பனுக்கு தலை மற்றும் கைப்பகுதியை சேர்த்து என மொத்தம் 20-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவித்தனர். வெட்டுக்காயம் அடைந்த அஜித்தையும் போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவர்களுக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு வாலிபாரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் வட்டாரத்தில் கூறுகையில், திருவண்ணாமலையில் 4-க்கும் மேற்பட்ட தரப்பினர் வழிப்பறி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget