மேலும் அறிய

நெல்லையில் அடுத்தடுத்து தப்பியோடிய சிறை கைதிகள் - கலக்கத்தில் சிறை அதிகாரிகள்

”பாளையங்கோட்டை சிறை கைதிகள் மூன்று பேர் கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது”

நெல்லை பாளையங்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணைக் கைதிகள் சுமார் 1300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க சுமார் 150 சிறை காவலர்கள், அலுவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். இதில் நன்னடத்தை கைதிகள் சிறை வளாகத்தில் உள்ள தோட்டம், ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பு, அங்காடி, டீ கடை, பெட்டிக்கடை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு சிறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 


நெல்லையில் அடுத்தடுத்து தப்பியோடிய சிறை கைதிகள் - கலக்கத்தில் சிறை அதிகாரிகள்

இந்நிலையில், கடந்த 25ம் தேதி தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ஜீவா என்ற கைதி பிணையை மீறிய காரணத்துக்காக போலீசார் அவரை மீண்டும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு வந்த நிலையில் மஞ்சள் காமாலை இருப்பதாக கூறியதால் காவலர்கள் அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது ஜீவா போலீசார் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த டேவிட் என்ற ஆயுள் கைதி சிறை அங்காடியில் டீ மாஸ்டராகவும், பரோட்டா மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தார். அப்போது கடந்த 27ம் தேதி சிறை அங்காடி பணியில் இருந்த காவலர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாவி போட்டு தப்பி ஓடினார். சிறை அங்காடி கல்லாவில் இருந்த 4 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தப்பிச்சென்ற டேவிட்டை காவலரின் வாகன எண்ணை வைத்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்து தேடி வருகின்றனர்.


நெல்லையில் அடுத்தடுத்து தப்பியோடிய சிறை கைதிகள் - கலக்கத்தில் சிறை அதிகாரிகள்

இரண்டு கைதிகள் தப்பிச் சென்றது காவல்துறை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் நெல்லை சீவலப்பேரியை சேர்ந்த கொலை வழக்கு கைதி சீனித்துரை பரோலில் வெளியே சென்ற நிலையில் நேற்றுடன் அவருக்கு பரோல் முடிந்தது. நேற்று மாலைக்குள் அவர் சிறைக்கு திரும்ப இருந்த நிலையில் திடீரென தலைமறைவானதால் போலீசார் அவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறை அலுவலர்கள் மற்றும் உளவுத்துறையின் அலட்சியம் காரணமாகவே கைதிகள் தப்பி செல்வதாக புகாரும் எழுந்துள்ளது. குறிப்பாக டீ மாஸ்டர் டேவிட் ஏற்கனவே ஒருமுறை தப்ப முயற்சி செய்தது தெரியவந்த பிறகும் சிறை அலுவலர்கள் மீண்டும் அவரை சிறை அங்காடி பணியில் அமர்த்தியுள்ளனர். அங்காடி போக்குவரத்து சாலை ஓரம் அமைந்திருப்பதால் கைதிகள் எளிதில் தப்ப முடியும். எனவே ஒருமுறைக்கு பலமுறை கைதிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து நற்சான்று பெற்ற கைதிகளை மட்டுமே இதுபோன்று அங்காடி பணியில் அமர்த்துவது வழக்கம். ஆனால் தப்ப நினைக்கும் கைதியை எப்படி அங்காடி பணியில் வைத்தார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது சிறை தலைமை காவலர் கந்தசாமியை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். தப்பிய மூன்று பேரில் புளியங்குடியை சேர்ந்த ஜீவா என்ற கைதியை மட்டும் போலீசார் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாளையங்கோட்டை சிறை கைதிகள் மூன்று பேர் கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Embed widget