மேலும் அறிய

பெரியம்மாவை உலக்கையால் அடித்து கொன்ற இளைஞர் - நெல்லையில் அதிர்ச்சி

சொத்திற்காக இளைஞர் ஒருவர் தனது பெரியம்மாவை உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம்  நெல்லையில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் மேல திருவேங்கடநாதபுரத்தை சார்ந்தவர் சுடலை. இவரது மனைவி முப்பிடாதி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத  நிலையில் முப்பிடாதியின் கணவர் சுடலையும் வயது முதிர்வு காரணமாக ஏற்கனவே உயிரிழந்து உள்ளார். இதனால் முப்படாதி தனது சொந்த கிராமமான திருவேங்கடநாதபுரத்தை விட்டு  விட்டு  நெல்லை நகர் பகுதிக்கு வந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் முப்பிடாதி - சுடலைக்கு சொந்தமான பூர்வீக இடம் மேல திருவேங்கடநாதபுரம் பகுதியில் இரண்டு ஏக்கர் நன்செய் நிலமாக இருந்து உள்ளது. இந்த இடத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு சுடலையின் சகோதரர் மகன் பாலமுருகன் என்பவர் அடிக்கடி தனது பெரியம்மாவான முப்பிடாதியிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் சொத்தை கணவரின் சகோதரர் மகன் பாலமுருகனுக்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி மேல திருவேங்கடநாதபுரத்தில் ஒரு திருமண நிகழ்வு  நடந்துள்ளது. அதற்கு முப்பிடாதியால் செல்ல முடியாத நிலையில் மறுநாள்  திருமண வீட்டிற்கு சென்று மணமக்களை நேரில் வாழ்த்துவதற்காக கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது திருமண வீட்டிற்கு செல்லும் வழியில் தனது வீட்டருகே காத்திருந்த பாலமுருகன் பெரியம்மா முப்புடாதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  சொத்தை தனக்கு எழுதி தர வேண்டும் என கேட்டு பிரச்சினை செய்த நிலையில் முப்பிடாதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  அப்போது சொத்தை தனக்கு தர மறுத்த ஆத்திரத்தில் பெரியம்மாவை  வீட்டின் அருகே கிடந்த உலக்கையை எடுத்து அவரது தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அப்போது தலையில் இருந்து இரத்தம் வழியவே நிலைகுலைந்து கீழே விழுந்தார் முப்பிடாதி.  உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்து உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முப்பிடாதிக்கு நேற்று மாலை முதல் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று  உயிரிழந்தார்.  இதனிடையே இது தொடர்பாக தகவலறிந்த சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக பாலமுருகனை பிடித்து விசாரித்து வந்த நிலையில் தற்போது முப்பிடாதி உயிரிழந்ததும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  சொத்திற்காக இளைஞர் ஒருவர் தனது பெரியம்மாவை உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம்  நெல்லையில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Embed widget