மேலும் அறிய

நெல்லையில் பல்கலை., பேராசியர்களை தாக்கிய கும்பல்..! கூலிப்படையா? பணம் பறிக்கும் நோக்கமா? - தீவிர விசாரணை

ரமேஷ், ஏடிஎம் அட்டையின் பின் நம்பரை வேண்டுமென்றே மாற்றிக் கூறியதால் பணம் தப்பியுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறை இணை பேராசிரியர் ரமேஷ் ( 51 ) என்பவரும் அதே துறையில் உதவி பேராசிரியர் ஜெனிதா ( 43 ) என்பவரும் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலையில் பல்கலைகழகம் முடிந்ததும் பேராசிரியர் ஜெனிதாவின் காரில் பேராசிரியர் ரமேஷ் உடன் சென்றுள்ளார். அப்போது நாகர்கோவில் சாலையில் டக்கரம்மாள்புரம் பகுதியில் ஜெனிதா வீட்டு முன்பாக காரில் இருந்து இறங்கிய போது ஏற்கனவே அங்கு டூவீலரில் வந்து காத்திருந்த மர்ம நபர்கள் மூன்று பேர் பேராசிரியர் ஜெனிதாவை தாக்கி உள்ளனர். தடுப்பதற்காக காரில் இருந்து இறங்கிய ரமேஷையும் அந்த கும்பல் தாக்கி உள்ளனர். கத்தியின் பின்புறத்தால் ரமேஷ் கழுத்திலும், முதுகிலும் குத்தியுள்ளனர்.

இருவரையும் கொலை செய்ய ஒரு தரப்பினர் பணம் தந்ததாகவும், நீங்கள் பணம் தந்தால் உங்களை விட்டு விடுகிறோம் எனக் கூறி பணம் கேட்டு உள்ளதாகவும், ஜெனிதா பணம் இல்லை என கூறி வளையல்களை கழற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கும்பல் அவரிடமிருந்து ஏடிஎம் அட்டையையும் வாங்கி பின் நம்பரையும் குறித்துக் கொண்டுள்ளனர். பேராசிரியர் ரமேஷை கீழே தள்ளி தாக்கியதோடு அவரது மொபைல் போனையும் ஏடிஎம் அட்டையையும் பறித்துக் கொண்டுள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பேராசிரியர் ரமேஷ், மெயின் ரோட்டில் ரோந்து சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளார். போலீசார் அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். பேராசிரியர் ஜெனிதா புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரும் ஜெனிதா ஏ.டி.எம், கார்டை பயன்படுத்தி ரூ 5 ஆயிரம் வீதம் ரூ 15 ஆயிரம் வீதம் எடுத்துள்ளனர். ரமேஷ், ஏடிஎம் அட்டையின் பின் நம்பரை வேண்டுமென்றே மாற்றிக் கூறியதால் பணம் தப்பியுள்ளது.


நெல்லையில் பல்கலை., பேராசியர்களை தாக்கிய கும்பல்..! கூலிப்படையா? பணம் பறிக்கும் நோக்கமா? - தீவிர விசாரணை

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரமேஷ் கூறுகையில், ”எங்களை கொலை செய்யும் நோக்கோடு வந்த 3 பேரும் திருநெல்வேலியை சேர்ந்த கூலிப்படையினர் தான்.  இருவர் பல்சர் டூவீலர்களில் வந்திருந்தனர். ஒருவருக்கு 60 வயதும், மற்றவருக்கு 47, 35 வயது இருக்கும். எங்களுக்கிடையே தகராறு நடந்த போது நான் ஒரு கட்டையை எடுத்து அவர்களில் ஒருவனை தலையில் அடித்தேன். இதில் அவனுக்கு ரத்தம் வந்தது. ஜாதியை கூறி என்னையே அடித்து விட்டாயா என என்னை கத்தியால் குத்த வந்தான். அதில் எனக்கு காயம் ஏற்பட்டது. பிறகு மூவரும் எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் பேசினர். திருநெல்வேலி பல்கலையில் நடந்த முந்தைய மோசடி குறித்த வழக்கில் நான் சாட்சியாக உள்ளேன். எனவே என்னை மிரட்டுவதற்கு யாராவது கூலியாட்களை அனுப்பி இருக்கலாம்” எனக் கூறினார்.

தலைப்பு செய்திகள்

தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget