மேலும் அறிய

அய்யய்யோ.. முகத்தில் கேக் பூசியதால் 3 பேர் சுட்டுக்கொலை.. நண்பர்கள் செய்த கொடூரம்!

ஜித்து என்ற இளைஞரின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடும் பொருட்டு நண்பர்கள் அங்கு கூடியிருந்தனர். வழக்கம்போல மகிழ்ச்சியாகவே அந்த நிகழ்ச்சி தொடங்கியது.

உத்தரப்பிரதேசத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசியதால் நடந்த வாக்குவாதத்தில் 3 நண்பர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஆரம்ப காலங்களில் ஒரு சாக்லேட்டும், வாழ்த்துகளோடும் நிறைவு பெறும். பிற்காலத்தில் கேக் வெட்டுவது, விருந்து வைப்பது போன்று ஆடம்பரமான முறையில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது. பிறந்தநாள் அன்று மாலை மரியாதை செய்வது, போஸ்டர், பேனர் வைப்பது, முட்டை, மிளகாய்தூள், தோசை மாவு போன்றவற்றால் அபிஷேகம் செய்வது, மது விருந்து வைப்பது என இவைகளெல்லாம் காலத்தின் கட்டாயமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தவறானவை என்பது காலம் தான் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உணர்த்தும். அப்படியான ஒரு நிகழ்வு தான் உத்தரப் பிரதேசத்தின் புலந்தஷார் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. 

அங்குள்ள குர்ஜா நகர் பகுதியில் உள்ள நேருபூர் சுங்கி சுபாஷ் சாலையில் அமைந்துள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. ஜித்து என்ற இளைஞரின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடும் பொருட்டு நண்பர்கள் அங்கு கூடியிருந்தனர். வழக்கம்போல மகிழ்ச்சியாகவே அந்த நிகழ்ச்சி தொடங்கியது. விழாவில் கேக் வெட்டப்பட்டு முதலில் நண்பர்கள் அனைவரும் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்கள் முகத்தில் மாறி மாறி பூசியுள்ளனர். 

அதில் சில நண்பர்கள் வேடிக்கையாக ஜித்துவின் முகத்தில் கேக் பூசத் தொடங்கியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஜித்து தனது நண்பர்களை கண்டித்துள்ளார். இது அவர்களிடையே வாக்குவாதமாக மாறியது. இதனால் மேலும் கோபமடைந்த நண்பர்களில் சிலர் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் துப்பாக்கிச் சத்தம் கேட்டு சிதறி ஓடினர். ஆனால் இந்த துப்பாக்கிச் சூட்டில், மனிஷ் சைனி, ஆகாஷ் சைனி மற்றும் அமர்தீப் ஆகிய மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. போலீசார் அப்பகுதியை தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். கேக் பூசியது தொடர்பான தகராறில் இந்தக் கொலைகள் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருவதாகவும், இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
Annamalai: பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
Embed widget