![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தூத்துக்குடி அருகே பயங்கரம்... ஒரு தலை காதலால் பிளஸ் 2 மாணவியை வெட்டிய வாலிபர் கைது
மாணவிக்கு ஆகஸ்ட் மாதம் 18 வயது ஆனதும், திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தார்களாம்.
![தூத்துக்குடி அருகே பயங்கரம்... ஒரு தலை காதலால் பிளஸ் 2 மாணவியை வெட்டிய வாலிபர் கைது Thoothukudi crime news Police arrested and interrogated the youth who slashed a Plus 2 student near Tuticorin TNN தூத்துக்குடி அருகே பயங்கரம்... ஒரு தலை காதலால் பிளஸ் 2 மாணவியை வெட்டிய வாலிபர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/9461091eaa80528b4c4c664a439da5751680527668067109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி இறுதி தேர்வு எழுதி விட்டு வந்த நிலையில் ஒரு தலை பட்சமாக காதலித்து வந்த இளைஞர் கத்தியால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் தற்போது +2 தேர்வு நடந்து இன்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் தாலுகா செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இன்று தேர்வு நடந்தது. இதில் 12ம் வகுப்பு வரலாறு பிரிவில் படித்து வந்த செக்காரக்குடியை சேர்ந்த கருப்பசாமி மகள் வரலாறு தேர்வு எழுதிவிட்டு பள்ளியை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது அந்த மாணவியை ஒருதலையாக ஒரு வருடமாக காதலித்து வந்த செக்காரக்குடியை சார்ந்த ஆண்டி மகன் சோலையப்பன் (21), என்பவர் நான் உன்னை காதலித்து வருகிறேன் நீ எதுவும் சொல்ல மாட்டிக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார் . பின்னர், எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கூறியவாறு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அருகில் இருந்த மாணவர்கள் சோலையப்பனை பிடித்து தடுத்து பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி உள்ளார்.
பின்னர், உடனடியாக தலைமை ஆசிரியர் மாணவியை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், தட்டப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாணவிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் விசாரணையில் சோலையப்பன் (23), அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தாராம். அந்த மாணவி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். ஆகஸ்ட் மாதம் அவருக்கு 18 வயது ஆனதும், திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தார்களாம். இதையறிந்த சோலையப்பன் தனக்கு கிடைக்காத அந்த பெண் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற ஆத்திரத்தில அவரை கொலை செய்ய முடிவு செய்தாராம்.
மேலும் சம்பவம் தொடர்பாக தட்டபாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் சரணடைந்த சோலையப்பனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)