மேலும் அறிய

ஆர்கெஸ்ட்ராவில் மதுபோதை நடனம்...! தட்டிக்கேட்ட காவலருக்கு பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு

காவலரை தாக்கிய இளைஞர் மணிகண்டனை அழைத்து சென்று அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பேரளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மேனாங்குடியில் உள்ள சீத்தளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. தீமிதி திருவிழா முடிந்தவுடன்  ஆர்கெஸ்ட்ரா நடைபெற்றது. இந்த விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெற்றாமல் இருக்க பேரளம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது இளைஞர்கள் கூட்டம் மது போதையில் பாடலை கேட்டு  ஒருவருக்கொருவர் தள்ளிவிட்டு நடனமாடினர்.

ஆர்கெஸ்ட்ராவில் மதுபோதை நடனம்...! தட்டிக்கேட்ட காவலருக்கு பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு
 
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் குமரவேல் என்பவர் மது போதையில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டிருந்த இளைஞர்களை தரையில் அமர்ந்து பாருங்க என கூறி உள்ளார். அதனை அடுத்து பாலூர் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் மணிகண்டன் (28) என்பவர் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து காவலர் குமரவேல் தலையில் அடித்துள்ளார். இதில் கண்ணம் கிழிந்து ரத்தம் சொட்டிய காவலர் குமரவேலை காவல்துறையினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு காவலர் குமரவேலுக்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை மதுபோதையில் இளைஞர் பீர் பாட்டிலால் தலையில் தாக்கிய சம்பவம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆர்கெஸ்ட்ராவில் மதுபோதை நடனம்...! தட்டிக்கேட்ட காவலருக்கு பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு
 
இந்தநிலையில் பீர் பாட்டிலால் தன்னை குத்திய நிலையிலும் அந்த காவலர் தன்னை பீர் பாட்டிலால் குத்திய இளைஞரை பிடித்து சக காவலர்களிடம் ஒப்படைத்துள்ளார் அதனை அடுத்து பேரளம் காவல் நிலையத்திற்கு மணிகண்டனை அழைத்து சென்று அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பேரளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேரளம் காவல் நிலைய வளாகத்தில் கொடுத்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இளைஞர் ஒருவர் மண்ணெண்ணையை ஊற்றிக் தீ வைத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அதேபோன்று பேரளம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் கைதி தப்பியோடிய நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரை மீண்டும் பிடித்து சிறையில் அடுத்த சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது காவலரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget