மேலும் அறிய

Crime: தனது குடும்பத்திற்கு செய்வினை செய்வதாக ஊராட்சி மன்றத் தலைவர் கொலை - இளைஞர் கைது

பன்னீர்செல்வம் தனது குடும்பத்திற்கு செய்வினை செய்திருப்பதாக கருதி பன்னீர்செல்வம் மது அருந்து கொண்டிருந்தபோது போதையில் சென்ற விஜய் அவரை தலையில் இரண்டு இடங்களில் வெட்டியுள்ளார். 

தனது குடும்பத்திற்கு செய்வினை செய்வதாக கருதி ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட அரையூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பன்னீர்செல்வம். இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் 26 வயதான விஜய். இவருக்கும் பன்னீர் செல்வத்திற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் புது வீடு கட்டியும் நிம்மதி இல்லாமல் இருந்ததால் விஜயின் தாய், தந்தை வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் 18 வயது தங்கையை பன்னீர்செல்வத்தின் சகோதரர் அழைத்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பன்னீர்செல்வம் தனது குடும்பத்திற்கு செய்வினை செய்திருப்பதாக கருதி நேற்று நள்ளிரவு கொட்டையூர் என்கிற இடத்தில் பன்னீர்செல்வம் மது அருந்து கொண்டிருந்தபோது போதையில் சென்ற விஜய் அவரை தலையில் இரண்டு இடங்களில் வெட்டியுள்ளார். 


Crime: தனது குடும்பத்திற்கு செய்வினை செய்வதாக ஊராட்சி மன்றத் தலைவர் கொலை - இளைஞர் கைது

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வத்தை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். தொடர்ந்து விஜய் அந்தப் பகுதியில் இருந்தால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தனது இரு சக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார். தொடர்ந்து திருவாரூர் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து காவல்துறையில் சரணடைவதற்காக வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு யாரும் இல்லாததால் திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என வந்துள்ளார். அங்கும் யாரும் இல்லை நீதிமன்றம் பூட்டி இருந்ததால் திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளார். அவரை நன்னிலம் காவல் ஆய்வாளர் சுகுணாவிடம் விஜயை ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து விஜயிடம் வலங்கைமான் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Crime: தனது குடும்பத்திற்கு செய்வினை செய்வதாக ஊராட்சி மன்றத் தலைவர் கொலை - இளைஞர் கைது

காவல்துறையினர் விசாரணையில் விஜய் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், தனது 18 வயது தங்கையை ஆசை வார்த்தை கூறி பன்னீர்செல்வத்தின் சகோதரர் அழைத்துச் சென்று விட்டதால் எங்கள் குடும்பத்தில் அதிக பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு காரணம் பன்னீர்செல்வம் தான் அது மட்டும் இன்றி எங்களுடைய பூர்வீக நிலத்தில் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார். அது மட்டுமின்றி மாந்திரீகம் உள்ளிட்ட செயலில் தொடர்ந்து அவர் எங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததால் எங்கள் குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்ததால் அவரை கொலை செய்வது என திட்டமிட்டு முடிவு செய்தேன்.

அதனையடுத்து அவர் தொடர்ந்து மது அருந்தும் இடத்திற்கு சென்று அவரை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்தேன் என வாக்கு மூலம் அளித்துள்ளார். அதனையடுத்து அவர்கள் மீது வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாந்திரீகம் செய்ததாக கூறி தனது வீட்டில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என நினைத்து மது போதையில் ஊராட்சி மன்ற தலைவரை இளைஞர் கொலை செய்த சம்பவம் வலங்கைமான் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவறு செய்த நபருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்த பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Embed widget