![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
தலையில் கல்லைப்போட்டு இளைஞரை கொன்ற திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது
’’திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த மனோஜ், மனு மற்றும் விக்னேஷ் ஆகியோர் கைதான நிலையில் கார்திக் என்பவர் தலைமறைவு’’
![தலையில் கல்லைப்போட்டு இளைஞரை கொன்ற திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது Thiruvannamalai: Three persons, including DMK lawyers, have been arrested for killing a youth by throwing stones at his head தலையில் கல்லைப்போட்டு இளைஞரை கொன்ற திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/fa5d9a7bae656cea13e189d8ebf1384b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் போத்து என்கின்ற மணிகண்டன் (26) இவர் காஞ்சீபுரத்தில் தந்தை பன்னீர்செல்வம், தாய் ராதா ஆகியோருடன் காய்கறி வியாபாரம் செய்துவருகின்றார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்காக சொந்த கிராமத்திற்கு ஆரணிக்கு மணிகண்டன் வந்தார். அங்கு அவரது அண்ணன் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் தர்மராஜா கோவில் தெருவில் இருந்து சாந்தா தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவருடன் சிறுவயதிலிருந்து பழகி வந்த கரிமா என்ற விக்னேஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக ஏண்டா என்னிடம் பேச மாட்டாயா என்று குரல் கொடுத்துள்ளார். மேலும் அவருடன் இருந்த மனோஜ் என்பவர் மணிகண்டனை கன்னத்தில் அறைந்து கீழே தள்ளியுள்ளார்.
அப்போது விக்னேஷ் கீழே கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். மேலும் அங்கு வந்த சிறுவயது நண்பரும் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகியுமான கார்த்தி மற்றும் மனு ஆகியோர் அருகில் இருந்த செங்கற்களை எடுத்து மணிகண்டன் தலை மீது ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற பார்த்திபன், சங்கர், சேகர், செல்வராஜ் ஆகியோர் விலக்கிவிட முயன்றனர். ஆனால் விக்னேஷ் அருகில் இருந்த பெரிய கற்களை எடுத்து மீண்டும் மணிகண்டன் தலை மீது போட்டதில் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த மணிகன்டனின் அண்ணி சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த மணிகன்டனை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆரணி டவுன் காவல்துறை துணை ஆய்வாளர் வெங்கடேசன் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று அதிகாலை மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஆரணி துணை காவல் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், ஆய்வாளர் கோகுல்ராஜன், துணை ஆய்வாளர், தருமன், ரகு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மணிகன்டனை தாக்கிய விக்னேஷ், மனோஜ், மனு ஆகிய 3 நபர்களையும் தனிப்பட்டையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான வழக்கறிஞர் கார்த்தியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ambani family | இங்கிலாந்து போறோமா? அந்த 300 ஏக்கர் ஏன் தெரியுமா? விளக்கம் அளித்த அம்பானி குடும்பம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)