மேலும் அறிய

திருவண்ணாமலை: கொள்ளை நடந்த 48 மணி நேரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட 3 வடமாநில இளைஞர்கள் கைது

ஆரணி பகுதியில் உள்ள தொலைபேசி கடையில் உள்ள ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த 3 வடமாநில இளைஞர்களை காவல்துறையினர் 48 நேரத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் உள்ள மார்க்கெட் வீதியில் தனியார் காம்பளக்ஸ் ஒன்று இயங்கி வருகிறது. இதில் பல வகையான கடைகள் இயங்கி வருகிறது. இதில் ஒரு பகுதியில் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் கிராமத்தை சேர்ந்த திலிப்சிங் (40) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக ஆரணி பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகின்றார். மேலும் இவர் இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு. சென்றுள்ளார் அதன் பிறகு காலையில் வீட்டில் இருந்து தனது செல்போன் கடையை திறப்பதற்காக வந்துள்ளார்  அப்போது  கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உள்ளிட்ட சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்யைடித்து சென்றது தெரிய வந்தன.

மேலும் இச்சம்பவம் குறித்து திலிப்சிங் ஆரணி நகர காவல்நிலையத்திற்கு  தகவல் அளித்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து கொள்ளை நடந்த இடத்தில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடையங்களை சேகரித்தனர். அதன் பின்னர்  ஆரணி நகர காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து காந்தி ரோடில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

திருவண்ணாமலை: கொள்ளை நடந்த 48 மணி நேரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட 3 வடமாநில இளைஞர்கள் கைது

இந்த கொள்ளையில் துப்பு துலக்க மாவட்ட காவல் கண்காணிக்காப்பாளர் பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் ஆரணி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் மேற்பார்வையில் ஆரணி நகர காவல்நிலைய  ஆய்வாளர் கோகுவராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து தனிப்படை காவலர்கள் மேற்படி சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும் திருவண்ணாமலை சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் சோனாபோர்டாவை சேர்ந்த ஜாலம்சிங் ரத்தோர் வயது (27), விக்ரம்சிங் வயது  (34), ரகுல்சிங் வயது (30) ஆகிய மூவரும் ஆற்காடு தனியார் கல்லூரி பேருந்து நிலையத்தின் அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விரைந்து சென்ற தனிப்படையினர் குற்றவாளிகளை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். 

திருவண்ணாமலை: கொள்ளை நடந்த 48 மணி நேரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட 3 வடமாநில இளைஞர்கள் கைது

மேலும் அவர்களிடம் இருந்து மொபைல் காம்போ எல்பிடி 525, மொபைல் டச் ஸ்கிரின் 1100 மற்றும் மொபைல் டிஸ்பிளே ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 நபர்களும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். அதனை தொடர்ந்து  திருவண்ணாமலை காவல்துறையினர் கொள்ளை அடிக்கப்பட்ட 48 மணிநேரத்தில் திருட்டில் இடுப்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர். இதனால் ஆரணி பகுதியில் உள்ள பொதுமக்கள் வெகுவாக காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த வழிப்பறி மற்றும் டாஸ்மாக் ஊழியர் கொலை தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி இரண்டு நாட்களாக காட்டு பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளையர்களில் ஒருவனை என்கௌண்ட்டர் செய்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையன் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவனோடு கொள்ளையில் ஈடுபட்ட பிற கொள்யையனும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்படதக்கது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வட மாநில கொள்ளையர்களின் ஆதிக்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Embed widget