மேலும் அறிய

பர்வதமலை உச்சியில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை-கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலைத்துறை

உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருடு போயுள்ளது என்று இதுவரையில் காவல் துறையினரிடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் புகார் செய்யாமலும் வெளியில் சொல்லாமலும் உள்ளதாக கூறப்படுகிறது

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பருவதமலை உச்சியில்  மல்லிகார்ஜுனர் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பவுர்ணமி நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து சாமி தரிசனம் செல்கின்றனர். அதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகத்துடன் கூடிய தங்கும் அறை பக்தர்கள் உணவு கூடம் கழிவறை ஆகியவைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் இருந்து மலை அடிவாரம் வரை தார் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோயிலின் உச்சியில் சாமியின் எதிரில் வைக்கப்பட்டுள்ள கோயில் உண்டியல் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

பர்வதமலை உச்சியில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை-கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலைத்துறை

அதே போல் நேற்று முன்தினம் இரவு கோயில் உண்டியல் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதனை வெளியில் சொல்லாமல் மறைப்பதற்காக இந்து சமய  அறநிலையத்துறை அதிகாரிகள் காட்டன் துணி மூலம் திருடுபோன உண்டியலை மூடி வைத்துள்ளனர். மேலும் உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருடு போயுள்ளது என்று இதுவரையில் காவல் துறையினரிடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் புகார் செய்யாமலும் வெளியில் சொல்லாமலும் இருந்து வருகின்றனர். மேலும் பருவதமலை உச்சிக்குச் செல்லும் பக்தர்களில் 100 நபர்களில் 70% சதவிகிதம் நபர்கள் போதைக்கு அடிமையானவர்கள் மட்டுமே சென்று வருவதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் உண்மையான பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகின்றது. அதோடு மட்டுமல்லாமல் மலையின் உச்சியில் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மது பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது.

பர்வதமலை உச்சியில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை-கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலைத்துறை

இதனை தொடர்ந்து குடிபோதையில் செல்பவர்களை தடுத்து நிறுத்த வனத்துறையில் போதிய ஆட்கள் இல்லாததால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. கள்ளக்காதலர்கள் வந்து தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் இடமாகவும் தற்போது பருவதமலை மாறி உள்ளது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய தொடங்கி உள்ளது. மேலும் வரும் சித்ரா பௌர்ணமி அன்று பல லட்சம் பக்தர்கள் வருகை தரலாம் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து இதுவரை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் எந்த ஒரு கூட்டமும் நடத்தாதது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பருவதமலை உச்சியில் உள்ள கோயில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடி சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
விஜய் VS நயினார்:
விஜய் VS நயினார்: "அய்யோ பாவம் தம்பி" - விழுப்புரத்தில் தெறித்த அரசியல் தீப்பொறி!
Embed widget