மேலும் அறிய

பர்வதமலை உச்சியில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை-கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலைத்துறை

உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருடு போயுள்ளது என்று இதுவரையில் காவல் துறையினரிடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் புகார் செய்யாமலும் வெளியில் சொல்லாமலும் உள்ளதாக கூறப்படுகிறது

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பருவதமலை உச்சியில்  மல்லிகார்ஜுனர் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பவுர்ணமி நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து சாமி தரிசனம் செல்கின்றனர். அதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகத்துடன் கூடிய தங்கும் அறை பக்தர்கள் உணவு கூடம் கழிவறை ஆகியவைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் இருந்து மலை அடிவாரம் வரை தார் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோயிலின் உச்சியில் சாமியின் எதிரில் வைக்கப்பட்டுள்ள கோயில் உண்டியல் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

பர்வதமலை உச்சியில் உண்டியல் உடைத்து  பணம் கொள்ளை-கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலைத்துறை

அதே போல் நேற்று முன்தினம் இரவு கோயில் உண்டியல் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதனை வெளியில் சொல்லாமல் மறைப்பதற்காக இந்து சமய  அறநிலையத்துறை அதிகாரிகள் காட்டன் துணி மூலம் திருடுபோன உண்டியலை மூடி வைத்துள்ளனர். மேலும் உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருடு போயுள்ளது என்று இதுவரையில் காவல் துறையினரிடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் புகார் செய்யாமலும் வெளியில் சொல்லாமலும் இருந்து வருகின்றனர். மேலும் பருவதமலை உச்சிக்குச் செல்லும் பக்தர்களில் 100 நபர்களில் 70% சதவிகிதம் நபர்கள் போதைக்கு அடிமையானவர்கள் மட்டுமே சென்று வருவதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் உண்மையான பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகின்றது. அதோடு மட்டுமல்லாமல் மலையின் உச்சியில் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மது பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது.

பர்வதமலை உச்சியில் உண்டியல் உடைத்து  பணம் கொள்ளை-கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலைத்துறை

இதனை தொடர்ந்து குடிபோதையில் செல்பவர்களை தடுத்து நிறுத்த வனத்துறையில் போதிய ஆட்கள் இல்லாததால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. கள்ளக்காதலர்கள் வந்து தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் இடமாகவும் தற்போது பருவதமலை மாறி உள்ளது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய தொடங்கி உள்ளது. மேலும் வரும் சித்ரா பௌர்ணமி அன்று பல லட்சம் பக்தர்கள் வருகை தரலாம் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து இதுவரை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் எந்த ஒரு கூட்டமும் நடத்தாதது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பருவதமலை உச்சியில் உள்ள கோயில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடி சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Embed widget