மேலும் அறிய

திருவண்ணாமலை: உண்டு உறைவிடப் பள்ளி மாணவன் திடீர் மரணம் - ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை

போளூர் அடுத்த உள்ள ஜவ்வாது மலையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளி மாணவர் திடீர் உயிரிழப்பு பள்ளி ஆசிரியர்களிடம் காவல்துறையினர் விசாரணை.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாதுமலையில் அரசவெளி என்ற மலைக்கிராமத்தில் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நம்மியம்பட்டை சேர்ந்த செவத்தான் என்பவரின் மகன் சிவகாசி வயது (15)  10ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவன் சிவகாசியின் முகத்தில் முகப்பரு கட்டி  இருந்துள்ளது. இதனால் மாணவன் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி பள்ளியின் சார்பில் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்,  சிவகாசியின் தந்தைக்கு இரவு 9 மணியளவில் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு சிவகாசியின் முகம் வீங்கி  உடல்நிலை மோசமாக உள்ளது‌. இதனால் நீங்கள் வந்து உங்களுடைய மகனை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
 
 

திருவண்ணாமலை: உண்டு உறைவிடப் பள்ளி மாணவன் திடீர் மரணம் - ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை
 
 
அதன் பிறகு சிவாகாசியின் தந்தை சேவத்தான் பள்ளிக்கு சென்று மகனை பார்த்துள்ளார். அப்போது மாணவனின் முகம் வீங்கி பேசமுடியாத நிலையில் இருந்துள்ளார். இதனைக்கண்ட தந்தை சேவத்தான் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிவகாசி தந்தையிடம் பேசியபோது, மாணவன் மெதுவாக தன்னுடைய முகத்தில் இருந்த முகப்பரு கட்டியணை ஆசிரியர் மகாலட்சுமி ஊசியால் குத்தினார். இதனால் தன்னுடைய முகத்தில் இருந்த கட்டியில் ரத்தம் வந்தது. சில மணி நேரத்திற்கு பிறகு முகம் விங்கியது என்று தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து,  சிவகாசியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மறுநாள் காலையில்  நம்மியம்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவனுக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
 


திருவண்ணாமலை: உண்டு உறைவிடப் பள்ளி மாணவன் திடீர் மரணம் - ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை
 
அதன் பின்னர் மாணவனின் முகம் மிக மோசமான நிலைக்கு சென்றதாலும், மாணவனால் நடக்கமுடியாமல் இருந்ததால்  உடனடியாக பெற்றோர் சிவகாசியை மேல் சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கும் மாணவனின் உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றதால் ஆம்புலன்ஸ் மூலமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். பின்னர் சில மணிநேரங்களில் சிவகாசி  சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து  ஜமனாமரத்தூர் காவல்நிலையத்தில் மாணவனின் தந்தை செவத்தான் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜமுனா மரத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


திருவண்ணாமலை: உண்டு உறைவிடப் பள்ளி மாணவன் திடீர் மரணம் - ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை
 
 
இந்த சம்பவம் குறித்து ஆசிரியரி மகாலட்சுமியிடம் பேசுகையில்,
 
பள்ளியில் பயின்று வரும் சிவகாசிக்கு சில நாட்களாக சூடு கட்டி வந்தது. அதில் இருந்து சிவகாசி அவதிப்பட்டு வந்தார். சிவகாசி சூடு கட்டியில் இருந்து சீவு போன்றது வெளியேறியது. அதனை நான் துணியின் ‌மூலம் தான் துடைத்தேன். அதன் பிறகு  சிவகாசி தனது தந்தைக்கு போன் செய்தான். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை, சிறிது நேரம் கழித்து சிவகாசியின் தந்தை அழைத்தார். அப்போது நான் சிவகாசிக்கு உடல் நிலை மோசமாக உள்ளது என்று தெரிவித்தேன். அப்போது மாணவனின் அண்ணன் பள்ளிக்கு வந்து மாணவனை வீட்டிற்கு அழைத்து சென்றார். சிவகாசியை வீட்டிற்கு அழைத்து சென்று மறுநாள் கழித்து தான் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவனின் உடல் நிலை மோசமாக சென்றதால் வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் மாணவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
 
 

திருவண்ணாமலை: உண்டு உறைவிடப் பள்ளி மாணவன் திடீர் மரணம் - ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை
 
இதை கேட்ட எனக்கு ‌மிகவும் மனது வலித்தது. நன்றாக இருந்த மாணவன் உயிரிழந்தது வருத்தமாக உள்ளது. மாணவன் சிவகாசிக்கு முகத்தில் சூடு கட்டி தான் இருந்தது முகப்பரு இல்லை, அதனை நான் ஊசியால் குத்தவில்லை சூடு கட்டியில் இருந்து சீவு போன்றது வெளியேறியது. அதனைதான் துணியால் துடைத்தேன் அப்போது சகமாணவர்களும் இருந்தனர். ஆனால்  நான் ஊசி வைத்து குத்தியதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர். இவர்கள் இப்படி புகார் அளிப்பதற்கு காரணம் அப்பகுதியில் உள்ள அதிமுக கட்சியில் உள்ள பிரமுகர்கள் தான் மாணவன் இறப்பை வைத்து அரசியல் செய்கிறார்கள். எப்படியாவது நான் என்னை இங்கு இருந்து வெளியேற்றி விடலாம் என பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார். 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget