மேலும் அறிய

சொத்திற்காக பெற்ற தாயை கட்டையால் தாக்கி கொன்ற மகன்; ஆரணி அருகே பயங்கரம்

ஆரணி அருகே சொத்திற்காக பெற்ற தாயை கட்டையால் தாக்கி அடித்து கொலை செய்த மகன் கைது.

திருவண்ணாமலை ( Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கேளுர் கிராமத்தை சேர்ந்த சக்கராபாணி. இவருடைய மனைவி சிவகாமி வயது (69). இவருடைய கணவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சக்கரபாணி நோய்வாய் பட்டு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு மகன் ராஜா வயது (39), மகள் உமாமகேஸ்வரி வயது (34), என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் உமாமகேஸ்வரி திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். சிவகாமியும், மகன் ராஜாவும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். ராஜா வேலைக்கு எங்கும் சரிவர செல்வதில்லை, இதனால் சொத்தை பிரித்து தரகோரி தாயார் சிவகாமியிடம் சண்டையிட்டுவருவது வழக்கமாக கொண்டுள்ளார். காலையில் சிவகாமி வழக்கம்போல் நூறுநாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சிவகாமி வந்துள்ளார். அப்போது அவரது மகன் ராஜா சொத்து பிரித்து தர வேண்டும் எனக்கூறி வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சிவகாமிக்கும் மகன் ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, தாய் சிவகாமியை கட்டையால் தாக்கியும், வாசபடியில் தலையை இடித்து தள்ளிவிட்டு மகன் ராஜா தப்பித்து சென்றுள்ளார்.

 


சொத்திற்காக பெற்ற தாயை கட்டையால் தாக்கி கொன்ற மகன்; ஆரணி அருகே பயங்கரம்

 சொத்திற்காக தாயை கொலை செய்த மகன் 

இதையடுத்து மகன் தாக்கியதில் மயக்கமடைந்த சிவகாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கேளுர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக தூக்கி சென்றனர். சிவகாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவகாமியின் தலை கதவில் மோதி அதிகளவில் ரத்தம் வெளியேறி சிவகாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சந்தவாசல் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தகவலிறந்த வந்த ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையில் காவல்துறையினர் கேளுரில் தலைமறைவாக இருந்த மகன் ராஜாவை கைது செய்தனர்.

 


சொத்திற்காக பெற்ற தாயை கட்டையால் தாக்கி கொன்ற மகன்; ஆரணி அருகே பயங்கரம்

காவல்துறையினர் விசாரணை 

அப்போது, தனது தாய் தவறி விழுந்ததாக கூறி ராஜா நாடகமாடியுள்ளார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜா தனது தாயை அடித்து தள்ளியதால் தான் இறந்தார் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகள் உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில்வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலையிலிருந்து கைரேகை நிபுணர் குழுதுணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் தலைமையில் கைரேகை நிபுணர்கள் கைரேகை தடயத்தை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரணி அருகே சொத்திற்காக பெற்றதாயை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
Fathers Day History: இன்று தந்தையர் தினமா? முதன்முறையாக எப்போது கொண்டாடப்பட்டது..? வரலாறு தெரியுமா?
இன்று தந்தையர் தினமா? முதன்முறையாக எப்போது கொண்டாடப்பட்டது..? வரலாறு தெரியுமா?
Salem Leopard: திருப்பத்தூரில் பிடிபட்டது சேலத்தில் நடமாடிய சிறுத்தையா? அதிர்ச்சி தகவல்.
திருப்பத்தூரில் பிடிபட்டது சேலத்தில் நடமாடிய சிறுத்தையா? அதிர்ச்சி தகவல்.
Embed widget