மேலும் அறிய

திருவண்ணாமலை அரசு அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு - பூட்டிய அறைக்குள் சிக்கிய பட்டாசுக்கள்...!

’’தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு அலுவலங்களில் பரிசுப்பொருட்கள் குவிவதாக லஞ்சஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றவண்ணம் இருந்தன’’

தீபாவளி பண்டிகை வருகின்ற 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ஒரு சில அரசு அலுவலகங்களில் பரிசு பொருட்கள் குவிந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து அரசு அலுவலகங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை முதல் தீபாவளி பண்டிகைகளுக்காக பரிசு பொருட்கள் அதிகாரிகள் பெறுகிறார்களா என பார்த்து வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர் அலுவலகத்தில் பட்டாசு உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் அடுத்தடுத்து சிலர் சென்று வருவதை கண்காணித்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல்கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் ஆய்வாளர் மைதிலி உள்ளிட்ட காவல்துறையினர், நேற்று மாலை 4:30 மணிமுதல் தொடங்கி இரவு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் யாரும்வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த, மேசைகள் பீரோ உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்  தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அரசு அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு - பூட்டிய அறைக்குள் சிக்கிய பட்டாசுக்கள்...!

மேலும், அலுவலகத்தில் இருந்த ஒரு அறை மட்டும் பூட்டிய நிலையில் இருந்தது அதன் பின்னர் அறையின் சாவியை கேட்ட காவல்துறையினரிடம் அறையை திறக்க அங்கிருந்தவர்கள் மறுத்துவிட்டனர். அதனை தொடர்ந்து சாவி வைத்துள்ள அலுவலர் வெளியில் சென்றதாக தெரிவித்தனர். பின்னர், அவர் வருவதற்கு  நீண்ட நேரம் ஆனாலும் சரி அந்த அறையை பார்க்காமல் செல்வதில்லை என்ற முயற்சியுடன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அங்கேயே மற்ற இடங்களில் சோதனை நடத்தினர்.  சிறிது நேர முயற்சிக்கு பிறகு அந்த அறை திறக்கப்பட்டது. அந்த அறையில், ஏராளமான பட்டாசு பாக்ஸ்கள் மற்றும் பரிசு பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், ஒரு சில பட்டாசு பாக்ஸ்களில் அதை அன்பளிப்பாக வழங்கியவரின் பெயர் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்டு பட்டாசு பாக்ஸ் மீது ஒட்டப்பட்டு இருந்து. மேலும் அவைகளை, அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை அரசு அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு - பூட்டிய அறைக்குள் சிக்கிய பட்டாசுக்கள்...!

இந்த ரெய்டு சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில்:- மாவட்ட ஆட்சியர் பெருதிடல் அலுவலகத்தில் இயங்கி வரும் வணிகவரித்துறை அலுவலகத்தில் நடத்திய சோதனையின்போது பரிசுப் பொருட்களையோ, பணத்தையோ யாரும் நேரடியாக வாங்கும் போது கையும் களவுமாக பிடிபடவில்லை. எனவே, கைது நடவடிக்கை நாங்கள் எடுக்கவில்லை, ஆனாலும், அரசு அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து பரிசாக பொருட்களையோ, பணத்தையோ வாங்குவதும் லஞ்சம் வாங்கியது குற்றம் என்றே கருதப்படும்.  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்படும். மேலும் இந்த அலுவலகத்தில் ஒரு ஊழியரிடம் 20 ஆயிரம் இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் வங்கி ஏடிஎம்மில் எடுத்ததற்கான ஆதாரத்தை ஒப்படைத்தார். எனவே, அந்த பணம் அவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பரிசு பொருட்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை யொட்டி வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்த திடீர் சோதனை அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget