மேலும் அறிய

திருவண்ணாமலை அரசு அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு - பூட்டிய அறைக்குள் சிக்கிய பட்டாசுக்கள்...!

’’தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு அலுவலங்களில் பரிசுப்பொருட்கள் குவிவதாக லஞ்சஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றவண்ணம் இருந்தன’’

தீபாவளி பண்டிகை வருகின்ற 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ஒரு சில அரசு அலுவலகங்களில் பரிசு பொருட்கள் குவிந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து அரசு அலுவலகங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை முதல் தீபாவளி பண்டிகைகளுக்காக பரிசு பொருட்கள் அதிகாரிகள் பெறுகிறார்களா என பார்த்து வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர் அலுவலகத்தில் பட்டாசு உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் அடுத்தடுத்து சிலர் சென்று வருவதை கண்காணித்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல்கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் ஆய்வாளர் மைதிலி உள்ளிட்ட காவல்துறையினர், நேற்று மாலை 4:30 மணிமுதல் தொடங்கி இரவு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் யாரும்வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த, மேசைகள் பீரோ உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்  தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அரசு அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு - பூட்டிய அறைக்குள் சிக்கிய பட்டாசுக்கள்...!

மேலும், அலுவலகத்தில் இருந்த ஒரு அறை மட்டும் பூட்டிய நிலையில் இருந்தது அதன் பின்னர் அறையின் சாவியை கேட்ட காவல்துறையினரிடம் அறையை திறக்க அங்கிருந்தவர்கள் மறுத்துவிட்டனர். அதனை தொடர்ந்து சாவி வைத்துள்ள அலுவலர் வெளியில் சென்றதாக தெரிவித்தனர். பின்னர், அவர் வருவதற்கு  நீண்ட நேரம் ஆனாலும் சரி அந்த அறையை பார்க்காமல் செல்வதில்லை என்ற முயற்சியுடன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அங்கேயே மற்ற இடங்களில் சோதனை நடத்தினர்.  சிறிது நேர முயற்சிக்கு பிறகு அந்த அறை திறக்கப்பட்டது. அந்த அறையில், ஏராளமான பட்டாசு பாக்ஸ்கள் மற்றும் பரிசு பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், ஒரு சில பட்டாசு பாக்ஸ்களில் அதை அன்பளிப்பாக வழங்கியவரின் பெயர் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்டு பட்டாசு பாக்ஸ் மீது ஒட்டப்பட்டு இருந்து. மேலும் அவைகளை, அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை அரசு அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு - பூட்டிய அறைக்குள் சிக்கிய பட்டாசுக்கள்...!

இந்த ரெய்டு சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில்:- மாவட்ட ஆட்சியர் பெருதிடல் அலுவலகத்தில் இயங்கி வரும் வணிகவரித்துறை அலுவலகத்தில் நடத்திய சோதனையின்போது பரிசுப் பொருட்களையோ, பணத்தையோ யாரும் நேரடியாக வாங்கும் போது கையும் களவுமாக பிடிபடவில்லை. எனவே, கைது நடவடிக்கை நாங்கள் எடுக்கவில்லை, ஆனாலும், அரசு அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து பரிசாக பொருட்களையோ, பணத்தையோ வாங்குவதும் லஞ்சம் வாங்கியது குற்றம் என்றே கருதப்படும்.  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்படும். மேலும் இந்த அலுவலகத்தில் ஒரு ஊழியரிடம் 20 ஆயிரம் இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் வங்கி ஏடிஎம்மில் எடுத்ததற்கான ஆதாரத்தை ஒப்படைத்தார். எனவே, அந்த பணம் அவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பரிசு பொருட்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை யொட்டி வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்த திடீர் சோதனை அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Coimbatore Shutdown: கோவையில் பல இடங்களில் மின்தடை (20.02.2025 ): லிஸ்ட் இதோ.!
Coimbatore Shutdown: கோவையில் பல இடங்களில் மின்தடை (20.02.2025 ): லிஸ்ட் இதோ.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Loan Agent Harassment | ’’ரோட்டுல தள்ளி அடிச்சாங்க குழந்தை ABORTION ஆகிடுச்சு’’ கலங்கி நிற்கும் தாய் | VPMNamakkal Collector : ’’பாதையை அடைச்சா அவ்ளோதான்’’அதிகாரிகளை அலறவிட்ட கலெக்டர்..காலில் விழுந்த மக்கள்H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Coimbatore Shutdown: கோவையில் பல இடங்களில் மின்தடை (20.02.2025 ): லிஸ்ட் இதோ.!
Coimbatore Shutdown: கோவையில் பல இடங்களில் மின்தடை (20.02.2025 ): லிஸ்ட் இதோ.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
வில்லனாக  நடிக்கமாட்டேன் என்ற வித்யுத் ஜம்வால்..சிவகார்த்திகேயன் படத்திற்கு ஓக்கே சொன்னது எப்டி
வில்லனாக நடிக்கமாட்டேன் என்ற வித்யுத் ஜம்வால்..சிவகார்த்திகேயன் படத்திற்கு ஓக்கே சொன்னது எப்டி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்!  அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.