மேலும் அறிய

கள்ளச்சாராயம்னாலே மகேஸ்வரிதான்.. 27 வருஷ சாராய சாம்ராஜ்யத்தை தட்டித்தூக்கிய போலீஸ்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 27 ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை செய்துவந்த மகேஸ்வரியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகேஸ்வரி என்ற பெண், திரைப்படங்களில் வரும் பெண் ரவுடி போல அந்த பகுதி முழுவதும் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார். இவர் சிறு சிறு பாக்கெட்டுகளில் ஸ்பிரிட் எனப்படும் எரிசாராயத்தை நிரப்பி கூலித் தொழிலாளிகளை குறி வைத்து விற்பனை செய்து வந்ததாகவும், இதன் மூலம் கூலி தொழிலாளிகள் பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு அந்த பகுதியில் ரகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து, இந்த பாக்கெட் சாராய பழக்கத்தால் அப்பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவம் நிகழ்ந்து வந்துள்ளததாகவும் கூறப்பட்டது.  இதையடுத்து, பாக்கெட் சாராயம் குறித்து காவல்துறையில் புகாரளித்த இளைஞர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடப்பட்டும், ஒரு சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. 90களில் காலக்கட்டம் தொடங்கியது முதலே மகேஸ்வரியின் கள்ளச்சாராய விற்பனை பெரும் வளர்ச்சியை பெற்று வந்துள்ளது. 

கடந்த 27 ஆண்டுகளாக வாணியம்பாடியில் கள்ளச்சாராயம் தொழில் செய்துவந்த மகேஸ்வரியின் மீது இதுவரை 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், ஏழு முறை அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. இருந்தும் மகேஸ்வரி சட்டத்திற்கு பயப்படாமல் இன்றுவரை தைரியமாக கள்ளசாராய தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். 


கள்ளச்சாராயம்னாலே மகேஸ்வரிதான்.. 27 வருஷ சாராய சாம்ராஜ்யத்தை தட்டித்தூக்கிய போலீஸ்!

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன் திருவிழா கூட்டத்தில் கள்ளச்சாராயம் விற்றவர்களைத் தட்டிக் கேட்க முயன்ற இளைஞர்கள் மீது மகேஸ்வரியின் ஆட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டித்து வாணியம்பாடி நேதாஜி நகர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து இளைஞர்களே களமிறங்கி 30க்கும் அதிகமான சாராய மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

அங்குவந்த காவல்துறையினர் சாராய பாக்கெட்களை எடுக்க முயன்றபோது, மகேஸ்வரி கும்பலை கைது செய்தால்தான் சாராய பாக்கெட்டுகளை விடுவிப்போம் என அவர்கள் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் பொறுமை இழந்து போராட்டங்களை அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவாக வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா வாணியம்பாடி சென்று, தாலுகா காவல் நிலையத்தில் மகேஸ்வரி மீதான வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். விரைந்து அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதையடுத்து. டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் மகேஸ்வரியை பிடிக்க களமிறங்கினர்.

மகேஸ்வரி திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும், வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் பதுங்கி இருந்த மகேஸ்வரியின் அடியாட்கள் 20க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

சாராய கும்பலிடம் நடத்திய விசாரணையில் நேதாதி நகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சாராய கேண்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற மகேஸ்வரியின் மகன் சின்னராஜ், அவனது கூட்டாளி மோகன் ஆகியோர் அருகில் இருந்த பாறைகளுக்கு நடுவே விழுந்ததாகவும், அதில், சின்னராஜ்க்கு கை முறிவும், மோகனுக்கு கால் முறிவும் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget