மேலும் அறிய

Crime: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர்; காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தை

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  காவல் நிலையம் முன்பு பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தெற்குக்காடு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரது மகள் அருணா(20). இவர் பி.ஏ எகனாமிக்ஸ் படித்து வருகிறார். இன்னும் ஆறு மாதத்தில் படிப்பு இவருக்கு முடிகிறது. இந்தநிலையில் அருணாவும் அதே பகுதியில் வசிக்கும் பால்சாமி என்பவரது மகன் மதன்ராஜ் (35) என்பவரும் சுமார் 4 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது காதல் குறித்தும் இருவரது பெற்றோருக்கும் தெரிந்துவந்துள்ளது. இதனால் இரு வீட்டாரும் பேசி இன்னும் ஆறு மாதத்தில் அருணாவின் படிப்பு முடிந்ததும்  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் வாலிபர் மதன்ராஜ் அருணாவை பலமுறை ஹோட்டலில் அறை எடுத்து எடுத்து தங்க வைத்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மதன் ராஜ் வெளிநாடு சென்று விட்டு சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஊருக்கு வந்தவுடன் அருணாவுடன் வழக்கம்போல் பழகிய மதன்ராஜ் கடந்த எட்டாம் தேதி அருணாவுடன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது
Crime: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர்; காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தை

 

அதன் பின்னர் மறுநாள் 9 ந்தேதி ஞாயிறுக்கிழமை வாலிபர் மதன்ராஜ் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்ய தனது உறவினர்களுடன் சென்று பெண் பார்த்து வந்துவிட்டு வந்து இளம்பெண் அருணாவிடம் 'நான் எனது அக்கா அத்தான் சொல்கிற பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். உன்னை திருமணம் செய்ய மாட்டேன். நான் அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்ய போகிறேன்.. நீ செத்து போயிடு..' என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அருணா, வாலிபர் மதன்ராஜுடன்  இருக்கும் புகைப்படங்களை  முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவும் செய்ய வில்லை எனவும் சம்பந்தப்பட்ட மதன்ராஜை கைது செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 5 தினங்களாக மன உளைச்சலில் இருந்த அருணா அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் காவல் நிலையம் வந்து அலைந்து திரிந்துள்ளனர். 


Crime: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர்; காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தை

 

இந்தநிலையில் நேற்று 6-வது நாளாக முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையம் வந்த அருணா மற்றும் உறவினர்கள் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை நகல் தரும்படி கூறியுள்ளனர். ஆனால் அங்கு இருந்த மகளிர் போலீசார் உரிய பதிலை கூறாமல் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அருணா மற்றும் அவரது உறவினர்கள் மகளிர் காவல் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்குவந்த டிஎஸ்பி விவேகானந்தன் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மகளிர் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உடன் வழக்கு பதிவு செய்து எப்ஐஆர் நகல் தருகிறோம் தலைமறைவாக உள்ள மதன் ராஜை இன்னும்  இரண்டு நாளில் கைது செய்துவிடுகிறோம் என்று உறுதி கூறினார்கள். முன்னதாக முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த அருணா அவர் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் வந்தபோது அருணாவின் தந்தை திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget