மேலும் அறிய

Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் கீழ்புறம் காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி கனகமணி (வயது 62). இவர்களது மகன் வேல்முருகன் (36). இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார், கடந்த 11-ந் தேதி மீண்டும் அவர் தனது தாயிடம் தகராறு செய்தததாக கூறப்படுகிறது.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இந்நிலையில் 12-ந் தேதி காலையில் வேல்முருகன் திடீரென இறந்து விட்டதாக கனகமணி அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வேல்முருகன் சாவில் சந்தேகம் இருப்பதாக உத்தமபுரம் கிராம நிர்வாக அதிகாரி கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் வேல்முருகனின் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து தீவிர  விசாரணை நடத்தினர். அதில் கனகமணி, தனது சகோதரர் குமார் (45), உறவினர்கள் கண்ணன் (57), கருப்பையா (45) ஆகியோருடன் சேர்ந்து வேல்முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் காவல் நிலையத்தில்  அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து தாய் என்றும் பாராமல் அவரை அவதூறாக பேசி வந்தார்.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இதனால் மனவேதனை அடைந்த கனகமணி, வேல்முருகனை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தனது தாயிடம் வேல்முருகன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கனகமணி, குமார், கண்ணன், கருப்பையாவுடன் சேர்ந்து நைலான் துணியால் வேல்முருகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். குடும்ப தகராறில் மகனை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Congress Candidate List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
TN Election 2026 Survey: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா? தவெகவுக்கு சர்ப்ரைஸ்- 3 சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
TN Election 2026 Survey: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா? தவெகவுக்கு சர்ப்ரைஸ்- 3 சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
Anbumani: விஜய்க்கு எதிராக இறங்கும் அன்புமணி! பெரம்பூரில் எப்போ பரப்புரை?
Anbumani: விஜய்க்கு எதிராக இறங்கும் அன்புமணி! பெரம்பூரில் எப்போ பரப்புரை?
Iran Hit List: பழிக்குப் பழி, பாலத்துக்கு பாலம்.! வளைகுடாவில் 8 டார்கெட்டுகளை அறிவித்த ஈரான்; உச்சகட்ட பதற்றம்
பழிக்குப் பழி, பாலத்துக்கு பாலம்.! வளைகுடாவில் 8 டார்கெட்டுகளை அறிவித்த ஈரான்; உச்சகட்ட பதற்றம்
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
Embed widget