மேலும் அறிய

Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் கீழ்புறம் காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி கனகமணி (வயது 62). இவர்களது மகன் வேல்முருகன் (36). இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார், கடந்த 11-ந் தேதி மீண்டும் அவர் தனது தாயிடம் தகராறு செய்தததாக கூறப்படுகிறது.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இந்நிலையில் 12-ந் தேதி காலையில் வேல்முருகன் திடீரென இறந்து விட்டதாக கனகமணி அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வேல்முருகன் சாவில் சந்தேகம் இருப்பதாக உத்தமபுரம் கிராம நிர்வாக அதிகாரி கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் வேல்முருகனின் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து தீவிர  விசாரணை நடத்தினர். அதில் கனகமணி, தனது சகோதரர் குமார் (45), உறவினர்கள் கண்ணன் (57), கருப்பையா (45) ஆகியோருடன் சேர்ந்து வேல்முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் காவல் நிலையத்தில்  அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து தாய் என்றும் பாராமல் அவரை அவதூறாக பேசி வந்தார்.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இதனால் மனவேதனை அடைந்த கனகமணி, வேல்முருகனை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தனது தாயிடம் வேல்முருகன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கனகமணி, குமார், கண்ணன், கருப்பையாவுடன் சேர்ந்து நைலான் துணியால் வேல்முருகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். குடும்ப தகராறில் மகனை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget