மேலும் அறிய

திருவண்ணாமலை: பிரபல ஓட்டலில் பிரியாணியை உண்ணும் எலி: வெளியான அதிர்ச்சி வீடியோ

திருவண்ணாமலையில் பிரியாணி கடையில் உணவு பரிமாறும் பாத்திரத்தில், எலி ஒன்று உணவு உண்ணும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலையில் வேங்கிகால் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் உணவு பரிமாறும் பாத்திரத்தில், எலி ஒன்று உணவு உண்ணும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பிரியாணி கடையில் பிரியாணி வைத்து உணவு பரிமாறும் பாத்திரத்தில் இருக்கும் எஞ்சிய உணவை எலி ஒன்று தின்று கொண்டிருந்தது. இதனை செல்போனில் வீடியோ எடுத்தவர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கடையில் பிரியாணி சாப்பிட்டவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 

கடைகளை முறையாக பராமரிக்காததால் எலி உணவை உண்ணும் அளவுக்கு அந்த கடையின் நிலை உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதில் உள்ள விஷம் அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு பரவி உடல் நிலைமை மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் அசைவ உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உட்பட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துமணையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அசைவ உணவக உரிமையாளர் மற்றும் சமையல் செய்தவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.



திருவண்ணாமலை: பிரபல ஓட்டலில் பிரியாணியை உண்ணும் எலி: வெளியான அதிர்ச்சி வீடியோ

அசைவ உணவு பிரியர்கள் கூறுகையில் இதற்கெல்லாம் காரணம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தான் எனவும் ஏனென்றால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் உள்ளது. அதில் திருவண்ணாமலை நகர்பகுதியில் அதிக அளவில் சுற்றுலா பயிணிகள் வருகின்றனர். நகர்ப்புற பகுதிகளில் உள்ள சைவ,அசைவ உணவகங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட கடை மட்டுமன்றி அனைத்து கடைகளிலும் உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பரிமாறப்படும் பாத்திரங்கள் போன்றவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 



திருவண்ணாமலை: பிரபல ஓட்டலில் பிரியாணியை உண்ணும் எலி: வெளியான அதிர்ச்சி வீடியோ

 

அதனைத் தொடர்ந்து ஓட்டலில் பாத்திரத்தில் உள்ள பிரியாணியை எலி சாப்பிடுவது போன்ற வீடியோ இணையதளத்தில் வைரலானது அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார் இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ராமகிருஷ்ணன் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளையராஜா சிவபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர் குறிப்பிட்ட அந்த ஓட்டலில்  அதிரடி சோதனை நடத்தினர். அதில் சமையலறை உணவுப் பொருட்கள் வைக்கும் அறை சுகாதாரம் அற்ற நிலையிலும் கழிவு நீர் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஓட்டலுக்கு நோட்டீஸ் வினியோகித்து அதிகாரிகள் இந்த குறைபாடுகளை சரிசெய்ய 5 நாட்கள் அவகாசம் கொடுத்து உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget