மேலும் அறிய

Crime: கோவையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது ; தப்பி ஓட முயன்ற போது கால் உடைந்தது

சத்தியபாண்டி கொலை வழக்கில் கடந்த 3 மாதங்களாக டெல்லி, மும்பை கொல்கத்தா என வெளிமாநிலங்களில் தலைமறைவாக இருந்து வந்தார்.

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சத்திய பாண்டி. 32 வயதான இவர், டிரைவராக பணி புரிந்து வந்தார். ரவுடியாக இருந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 12 ம் தேதியன்று இரவு நவ இந்தியா பகுதியில் இருந்து ஆவராம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடைக்கு அருகே தனது நண்பர்களுடன் சத்திய பாண்டி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் தலைகவசம் அணிந்தபடி, 2 மோட்டர் சைக்கிளில் வந்தனர். அந்த கும்பல் அங்கு நின்று கொண்டிருந்த சத்திய பாண்டியை திடீரென அரிவாளால் வெட்டினர். இதனால் அச்சம் அடைந்த சத்திய பாண்டி உயிர் பிழைக்க அங்கிருந்து ஓடத் துவங்கினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தி சென்றது. இதையடுத்து அக்கும்பலிடம் இருந்து தப்பிக்க சத்திய பாண்டி சாலையோரம் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று அந்த வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் சத்திய பாண்டிக்கு தலை, கை, கால், உடல் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சத்திய பாண்டி துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக காஜா உசேன், சஞ்சய் குமார், ஆல்வின், சல்பர் கான், சஞ்சய் ராஜா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனிடையே கரட்டுமேடு பகுதியில் மறைத்து வைத்திருந்த கொலைக்கு பயன்படுத்திய கை துப்பாக்கியை காவல் துறையினர் கண்டறிய சென்ற போது, சஞ்சய்ராஜா துப்பாக்கியால் காவல் ஆய்வாளரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் தற்காப்பிற்காக காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் சஞ்சய்ராஜா காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், சஞ்சய் ராஜா தனது நண்பரான கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும் கோவையில் தங்கி இருந்த தில்ஜித் (44) என்பவருடன் சேர்ந்து தித்திட்டம் தீட்டி சத்தியபாண்டியை கொலை செய்தது தெரியவந்தது. இந்தநிலையில், தலைமறைவாக இருந்த தில்ஜித்தை காவல் துறையினர் தேடி வந்தனர். அவர் கடந்த 3 மாதங்களாக டெல்லி, மும்பை கொல்கத்தா என வெளிமாநிலங்களில் தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் தில்ஜித் கோவை வந்து இருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவரை நேற்றிரவு பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்ய சென்றனர். காவல் துறையினரைப் பார்த்ததும் தில்ஜித் தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது நிலை தடுமாறி கீழே விழிந்ததில் கால் எலும்பு உடைந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட தில்ஜித்தை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் காவல் துறையினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு காவல் துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget