மேலும் அறிய

கொலையாக மாறிய கள்ளக்காதல் தகராறு: சடலத்தை டூவிலரில் எடுத்துச் சென்ற கொலையாளிகள்!

உடலை மறைக்க இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று, திருப்பூர் கல்லாங்காடு பாறைக்குழி பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்து மண்ணைப் போட்டு மூடி விட்டு சென்று விட்டனர்.

திருப்பூரில் கள்ளத் தொடர்பினால் ஏற்பட்ட தகராறில் பனியன் தொழிலாளி அடித்துக் கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கில், 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் கல்லாங்காடு அருகே உள்ள பயன்படுத்தப்படாத கற்குவாரி உள்ளது. இங்கு மழை நீர் தேங்கிய பாறைக்குழியில், அவ்வப்போது குப்பைகள் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவது வழக்கம். இந்நிலையில் பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதை அப்பகுதியினர் பார்த்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை காவல் துறையினர் ஆராய்ந்தனர்.


கொலையாக மாறிய கள்ளக்காதல் தகராறு: சடலத்தை டூவிலரில் எடுத்துச் சென்ற கொலையாளிகள்!

அப்போது திருவாரூர் மாவட்டம் ஆரணியம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 37) என்பவரை காணவில்லை என்ற புகார் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சந்தோஷ்குமார் தனது மனைவி கீதா மற்றும் இரண்டு குழந்தையுடன் திருப்பூர் காலேஜ் ரோட்டில் வாடகை வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள பிரின்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் தனது கணவரை காணவில்லை என கீதா, வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.


கொலையாக மாறிய கள்ளக்காதல் தகராறு: சடலத்தை டூவிலரில் எடுத்துச் சென்ற கொலையாளிகள்!

திருப்பூர் கல்லாங்காடு திருகுமரன் நகர் பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி (வயது 50) என்ற பெண்ணுடன் சந்தோஷ்குமார் பல நாட்களாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். தேனியை சேர்ந்த முருகேஸ்வரி தனது கணவரை பிரிந்து திருப்பூரில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.  முருகேஸ்வரி தொடர்பில் இருந்த சந்தோஷ்குமாரிடம் பல முறை பணம் பெற்றுள்ளார். இந்நிலையில்  17ஆம் தேதி முருகேஸ்வரி வீட்டுக்குச் சென்ற சந்தோஷ்குமார், கொடுத்த பணத்தை வட்டியுடன்  கேட்டு தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேஸ்வரியின் மகன் ஆரோக்கியதாஸ் (வயது 25) மற்றும் அவருடைய நண்பர் பாலசுப்பிரமணியன் (வயது 26) ஆகியோர் சந்தோஷ்குமாரை தனியே மது அருந்த அழைத்து  இரும்பு கம்பியை எடுத்து தலையில் பலமாக அடித்து கொலை செய்துள்ளனர். பின்பு உடலை மறைக்க இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று, திருப்பூர் கல்லாங்காடு பாறைக்குழி பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்து மண்ணைப் போட்டு மூடி விட்டு சென்று விட்டனர்.


கொலையாக மாறிய கள்ளக்காதல் தகராறு: சடலத்தை டூவிலரில் எடுத்துச் சென்ற கொலையாளிகள்!

போலீசார் விசாரணையில் ஆரோக்கியதாஸ் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தனது அம்மா முருகேஸ்வரி தூண்டுதலின் பேரில் அடித்து கொலை செய்ததாகவும், கொலை செய்த சந்தோஷ் குமாரை பாறைக்குழியில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget