ஹோட்டலை திறக்கலாமே... வற்புறுத்திய மனைவி... வயிற்றை கிழித்து கொலை செய்த கணவன்!
ஆத்திரமடைந்த செல்வராஜ் போதையில் மனைவி கண்ணகியின் வயிற்றில் கத்தியால் கிழித்துள்ளார். வலி தாங்க முடியாமல் கண்ணகி அலற, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது...

சென்னை, வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் 52 வயதான செல்வராஜ், இவரது மனைவி கண்ணகி (49). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், செல்வராஜ் கடந்த 5 நாட்களாக உணவகத்தை திறக்காமல் போதையில் சுற்றியதால் கணவன்- மனைவிக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. உணவகத்தை திறந்து வியாபாரம் பார்க்குமாறு மனைவி கூறியுள்ளார். அதற்கு செல்வராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது செல்வராஜை மனைவி கண்ணகி, கடுமையாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் போதையில் மனைவி கண்ணகியின் வயிற்றில் கத்தியால் கிழித்துள்ளார். வலிதாங்க முடியாமல் கண்ணகி அலற, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கண்ணகியின் வயிற்றில் ரத்தம் வருவதை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் கண்ணகியை உடனடியாக அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் கத்தியால் கிழித்த வயிற்றுப்பகுதியில் தையல் போட் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து நேற்று காலை வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை திடீரென கண்ணகி மரணமடைந்தார்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன் செல்வராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
என்னைப் போலவே செக்ஸ் பொம்மையா? கொதித்தெழுந்த மாடல்!!
செண்ட்ரல் விஸ்டா திட்டத்தினால், காற்று மாசுபாடா? - உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேட்கும் கேள்வி என்ன?
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















