மேலும் அறிய

கூட்டாஞ்சோறு சமைக்க சானிடைசர்: சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

ஸ்ரீதரன் தன் கையில் கொண்டு வந்திருந்த சானிடைசரை அடுப்பில் ஊற்றி பற்ற வைக்க முயற்சித்தப்பொழுது தான் எதிர்பாராதவிதமாக  தீடிரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

திருச்சியில் நண்பர்களுடன் கூட்டாஞ்சோறு சமைப்பதற்காக அடுப்பினைப்பற்ற வைத்த சிறுவன் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கி வந்த நிலையில் தான், நம்மில் பலர் நோய் எதிர்ப்புசக்தியினை அதிகப்படுத்த பாரம்பரிய உணவுமுறைக்கு மாற ஆரம்பித்தோம். இதோடு மட்டுமில்லாமல் ஊரடங்கு காலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை எல்லாம் மேற்கொண்டோம்.  தற்பொழுது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வழக்கம் போல பணிக்கு திரும்பி செல்ல ஆரம்பித்து விட்டோம். ஆனால்,பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எப்பொழுது பள்ளிக்கு செல்வார்கள் என்பது புரியாத புதிராக தான் உள்ளது. எப்பொழுதும் விளையாடுவதற்கு கூட நேரம் இல்லாத பள்ளி மாணவர்களுக்கு இப்பொழுது விளையாட்டு மட்டும் தான் முதற்பணியாக உள்ளது. எத்தனை நாட்கள் தான் செல்போனில் கேம் விளையாடுவது என நண்பர்களுடன் குளம் ,கிணறு ஆறு போன்ற இடங்களுக்கு குளிக்கச் சென்று எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழக்கின்ற சம்பவமும் அரங்கேறிவருகிறது.

  • கூட்டாஞ்சோறு சமைக்க சானிடைசர்: சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

அப்படித்தான், திருச்சியைச்சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ஸ்ரீதரன் என்பவர் தனது பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளார். வழக்கம் போல், கிரிக்கெட்டை விளையாடாமல் சம்பவம் நடந்த நாளன்று கூட்டாஞ்சோறு சமைக்க முடிவு எடுத்துள்ளனர். இதற்காக சிறுவர்கள் அவரவர் வீட்டில் இருந்து கொஞ்சம் அரிசி, பருப்பு, காய்கறிகளை எடுத்து வந்து சமைக்க ஆரம்பித்துள்ளனர். இதற்காக அதே பகுதியில் உள்ள முருகேசன் என்பவரின் வீட்டின் முன்பு கற்களால் அடுப்பைத் தயார் செய்து மண் சட்டியால் சமைப்பதற்காக பல முறை அடுப்பினைப் பற்ற வைக்க முயன்றும் சிறுவர்களால் முடியவில்லை. எனவே  சிறுவன் ஸ்ரீதரன் தன் கையில் கொண்டு வந்திருந்த சானிடைசரை அடுப்பில் ஊற்றி பற்ற வைக்க முயற்சித்தப்பொழுது தான் எதிர்பாராதவிதமாக  தீடிரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனையடுத்து அருகில் இருந்த சிறுவனின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக்கண்டு பயத்தில் மற்ற சிறுவர்கள் சத்தமிட்டுள்ளனர். இந்த சிறுவர்களின் அலறல் சத்தத்தினைக்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயினை அணைத்து பாதிக்கப்பட்ட சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  • கூட்டாஞ்சோறு சமைக்க சானிடைசர்: சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, தொடர் சிகிச்சையளித்தப்போதும், இதில் பலனின்றி சிறுவன் ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்சி கோட்டைப்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதோடு ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் நிலையில் விளையாட்டு அவர்களுக்கு கொஞ்சம் மனநிறைவாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகள் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

மேலும் படிக்க: 

தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது; நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! 

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget