மேலும் அறிய

Crime: திட்டம் போட்டு புல்லட்டுகளை மட்டும் திருடிய கும்பல் - தஞ்சையில் சிக்கிய இளைஞர்

திட்டம் போட்டு புல்லட் மோட்டார் சைக்கிள்களை மட்டும் திருடிய வந்த இளைஞர் தஞ்சாவூரில் சிக்கினார். அவரிடம் இருந்து 20 புல்லட் மோட்டார் சைகச்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்: திட்டம் போட்டு புல்லட் மோட்டார் சைக்கிள்களை மட்டும் திருடிய வந்த இளைஞர் தஞ்சாவூரில் சிக்கினார். அவரிடம் இருந்து 20 புல்லட் மோட்டார் சைகச்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் பகுதியில் திருடப்பட்ட 20 புல்லட் மோட்டார் சைக்கிள்களை திருடிய இளைஞரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மூவரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் நகரம், வல்லம், ஒரத்தநாடு காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடைகள், வீடுகள் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த புல்லட் மோட்டார் சைக்கிள்களில் அவ்வப்போது திருட்டு போனது. குறிப்பாக புல்லட்டுகள் மட்டுமே திருட்டு போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் புல்லட்டுகளாக குறி வைத்து ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்து. இதற்கிடையில் இது தொடர்பாக புல்லட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து விலை உயர்ந்த புல்லட்டை திருடும் கும்பலை கைது செய்ய, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி, தஞ்சாவூர் நகர டி.எஸ்.பி. ராஜா தலைமையிலும், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் மேற்பார்வையிலும் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் குறைந்த விலையில் புல்லட் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்வது குறித்தும் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்ட புல்லட் மோட்டார் சைக்கிளை ஒரு இளைஞரிடம் குறைந்த விலைக்கு விற்க முயலும் போது, போலீஸாரிடம் ஒருவர் சிக்கினார். பின்னர் அவரை போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் தஞ்சாவூர் பூக்கார முதல்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அரவிந்த் (30) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தஞ்சாவூர் பகுதியில் புல்லட் மோட்டார் சைக்கிள்களை மட்டும் நான்கு பேர் சேர்ந்து திருடுவதாகவும், அதில் உள்ள பதிவு எண்களை மாற்றி, குறைந்த விலைக்கு தஞ்சாவூர் பகுதியிலேயே விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி குறைந்த விலைக்கு விற்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான 20 புல்லட் மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த புல்லட் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடைய காசவளநாடு புதூரைச் சேர்ந்த அர்ஜூன், அரவிந்த், தஞ்சாவூர் கீழவாசலைச் சேர்ந்த அலெக்ஸ் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர். மேலும் அந்தந்த புல்லட் வாகன உரிமையாளர்களிடம் அவற்றை ஒப்படைத்தனர். 

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், விலை உயர்ந்த புல்லட் மோட்டார் சைக்கிள்களை திருடும் கும்பலை போலீசார் கைது செய்து புல்லட்டுகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளது பாராட்டுக்குரியது. இதுபோன்ற திருட்டுக் கும்பலை சேர்ந்த மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
Metro Train: சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால்  ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Embed widget