மேலும் அறிய

போதையில் இருந்த சரத்குமார்... காலையில் எழுந்ததும் அதிர்ச்சி - நடந்தது என்ன?

குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொள்ள மறுநாள் காலை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்: குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொள்ள மறுநாள் காலை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இளம் தம்பதியின் தற்கொலைக்கு பின்னணியாக இருந்தது போதைதான். காதலித்து திருமணம் செய்த இந்த இளம் தம்பதியின் தற்கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (34).  லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. லாரி டிரைவர் என்பதால் நகரத்திற்கு அருகில் வசிக்கலாம் என்று இருவரும் முடிவு செய்து திருமணத்திற்கு பிறகு சரத்குமார் மற்றும் மோகனசுந்தரி இருவரும் தஞ்சை மாரியம்மன்கோவில் காமாட்சியம்மன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சரத்குமார் தனது மாமியார் வீடான திருவாரூர் மாவட்டம் நெப்புகோவில் பகுதிக்கு மனைவி மோகனசுந்தரியுடன் சென்று ஒரு வாரம் தங்கினார். பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை சரத்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மோகனசுந்தரி தட்டி கேட்டார். சரத்குமாருக்கு இதனால் கோபம் ஏற்பட்டு மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அன்றைய தினம் இரவில் இருவரும் வீட்டில் தூங்கினர். ஆனால் கணவர் குடித்துவிட்டு வருவது பிடிக்காத மோகனசுந்தரி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் அன்றைய இரவு  மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் இது போதையில் இருந்த சரத்குமாருக்கு தெரியவில்லை. காலையில் எழுந்த சரத்குமார் மோகனசுந்தரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்டவள் தன்னை விட்டு தற்கொலை செய்து கொண்டது சரத்குமாருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் போலீஸ் விசாரணை, மனைவியின் குடும்பத்தினர் என்ன செய்வார்களோ என்ற அச்சம் என பயந்து போன சரத்குமார் அதே சேலையில் மின்விசிறியில் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலை வெகுநேரம் வரை சரத்குமாரின் வீட்டு கதவு திறக்கப்படாதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் சரத்குமார், மோகனசுந்தரி ஆகியோர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ.வும் தனி விசாரணை நடத்தி வருகிறார். இளம் தம்பதி தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ள பின்னணியில் இருந்தது போதைதான். இப்போது பல குடும்பங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதும் போதைதான். இளம் பருவத்திலேயே மதுவிற்கும், போதைப் பொருட்களுக்கும் பலரும் அடிமையாகி வருகின்றனர். அது குடும்பத்தை எப்படி சிதைத்து விடுகிறது என்பதற்கு சரத்குமாரும், மோகனசுந்தரியும் உதாரணம் என்று மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget