மேலும் அறிய

போதையில் இருந்த சரத்குமார்... காலையில் எழுந்ததும் அதிர்ச்சி - நடந்தது என்ன?

குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொள்ள மறுநாள் காலை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்: குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொள்ள மறுநாள் காலை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இளம் தம்பதியின் தற்கொலைக்கு பின்னணியாக இருந்தது போதைதான். காதலித்து திருமணம் செய்த இந்த இளம் தம்பதியின் தற்கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (34).  லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. லாரி டிரைவர் என்பதால் நகரத்திற்கு அருகில் வசிக்கலாம் என்று இருவரும் முடிவு செய்து திருமணத்திற்கு பிறகு சரத்குமார் மற்றும் மோகனசுந்தரி இருவரும் தஞ்சை மாரியம்மன்கோவில் காமாட்சியம்மன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சரத்குமார் தனது மாமியார் வீடான திருவாரூர் மாவட்டம் நெப்புகோவில் பகுதிக்கு மனைவி மோகனசுந்தரியுடன் சென்று ஒரு வாரம் தங்கினார். பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை சரத்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மோகனசுந்தரி தட்டி கேட்டார். சரத்குமாருக்கு இதனால் கோபம் ஏற்பட்டு மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அன்றைய தினம் இரவில் இருவரும் வீட்டில் தூங்கினர். ஆனால் கணவர் குடித்துவிட்டு வருவது பிடிக்காத மோகனசுந்தரி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் அன்றைய இரவு  மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் இது போதையில் இருந்த சரத்குமாருக்கு தெரியவில்லை. காலையில் எழுந்த சரத்குமார் மோகனசுந்தரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்டவள் தன்னை விட்டு தற்கொலை செய்து கொண்டது சரத்குமாருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் போலீஸ் விசாரணை, மனைவியின் குடும்பத்தினர் என்ன செய்வார்களோ என்ற அச்சம் என பயந்து போன சரத்குமார் அதே சேலையில் மின்விசிறியில் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலை வெகுநேரம் வரை சரத்குமாரின் வீட்டு கதவு திறக்கப்படாதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் சரத்குமார், மோகனசுந்தரி ஆகியோர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ.வும் தனி விசாரணை நடத்தி வருகிறார். இளம் தம்பதி தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ள பின்னணியில் இருந்தது போதைதான். இப்போது பல குடும்பங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதும் போதைதான். இளம் பருவத்திலேயே மதுவிற்கும், போதைப் பொருட்களுக்கும் பலரும் அடிமையாகி வருகின்றனர். அது குடும்பத்தை எப்படி சிதைத்து விடுகிறது என்பதற்கு சரத்குமாரும், மோகனசுந்தரியும் உதாரணம் என்று மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தலைப்பு செய்திகள்

" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget