மேலும் அறிய

போதையில் இருந்த சரத்குமார்... காலையில் எழுந்ததும் அதிர்ச்சி - நடந்தது என்ன?

குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொள்ள மறுநாள் காலை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்: குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொள்ள மறுநாள் காலை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இளம் தம்பதியின் தற்கொலைக்கு பின்னணியாக இருந்தது போதைதான். காதலித்து திருமணம் செய்த இந்த இளம் தம்பதியின் தற்கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (34).  லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. லாரி டிரைவர் என்பதால் நகரத்திற்கு அருகில் வசிக்கலாம் என்று இருவரும் முடிவு செய்து திருமணத்திற்கு பிறகு சரத்குமார் மற்றும் மோகனசுந்தரி இருவரும் தஞ்சை மாரியம்மன்கோவில் காமாட்சியம்மன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சரத்குமார் தனது மாமியார் வீடான திருவாரூர் மாவட்டம் நெப்புகோவில் பகுதிக்கு மனைவி மோகனசுந்தரியுடன் சென்று ஒரு வாரம் தங்கினார். பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை சரத்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மோகனசுந்தரி தட்டி கேட்டார். சரத்குமாருக்கு இதனால் கோபம் ஏற்பட்டு மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அன்றைய தினம் இரவில் இருவரும் வீட்டில் தூங்கினர். ஆனால் கணவர் குடித்துவிட்டு வருவது பிடிக்காத மோகனசுந்தரி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் அன்றைய இரவு  மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் இது போதையில் இருந்த சரத்குமாருக்கு தெரியவில்லை. காலையில் எழுந்த சரத்குமார் மோகனசுந்தரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்டவள் தன்னை விட்டு தற்கொலை செய்து கொண்டது சரத்குமாருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் போலீஸ் விசாரணை, மனைவியின் குடும்பத்தினர் என்ன செய்வார்களோ என்ற அச்சம் என பயந்து போன சரத்குமார் அதே சேலையில் மின்விசிறியில் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலை வெகுநேரம் வரை சரத்குமாரின் வீட்டு கதவு திறக்கப்படாதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் சரத்குமார், மோகனசுந்தரி ஆகியோர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ.வும் தனி விசாரணை நடத்தி வருகிறார். இளம் தம்பதி தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ள பின்னணியில் இருந்தது போதைதான். இப்போது பல குடும்பங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதும் போதைதான். இளம் பருவத்திலேயே மதுவிற்கும், போதைப் பொருட்களுக்கும் பலரும் அடிமையாகி வருகின்றனர். அது குடும்பத்தை எப்படி சிதைத்து விடுகிறது என்பதற்கு சரத்குமாரும், மோகனசுந்தரியும் உதாரணம் என்று மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
கத்தினால் குத்துவேன்! - பெண்ணின் வாயை பொத்தி வாலிபர்கள் அட்டூழியம் - திருப்பத்தூரில் நடந்த பகீர் சம்பவம்
கத்தினால் குத்துவேன்! - பெண்ணின் வாயை பொத்தி வாலிபர்கள் அட்டூழியம் - திருப்பத்தூரில் நடந்த பகீர் சம்பவம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget