மேலும் அறிய

போதையில் இருந்த சரத்குமார்... காலையில் எழுந்ததும் அதிர்ச்சி - நடந்தது என்ன?

குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொள்ள மறுநாள் காலை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்: குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொள்ள மறுநாள் காலை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இளம் தம்பதியின் தற்கொலைக்கு பின்னணியாக இருந்தது போதைதான். காதலித்து திருமணம் செய்த இந்த இளம் தம்பதியின் தற்கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (34).  லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. லாரி டிரைவர் என்பதால் நகரத்திற்கு அருகில் வசிக்கலாம் என்று இருவரும் முடிவு செய்து திருமணத்திற்கு பிறகு சரத்குமார் மற்றும் மோகனசுந்தரி இருவரும் தஞ்சை மாரியம்மன்கோவில் காமாட்சியம்மன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சரத்குமார் தனது மாமியார் வீடான திருவாரூர் மாவட்டம் நெப்புகோவில் பகுதிக்கு மனைவி மோகனசுந்தரியுடன் சென்று ஒரு வாரம் தங்கினார். பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை சரத்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மோகனசுந்தரி தட்டி கேட்டார். சரத்குமாருக்கு இதனால் கோபம் ஏற்பட்டு மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அன்றைய தினம் இரவில் இருவரும் வீட்டில் தூங்கினர். ஆனால் கணவர் குடித்துவிட்டு வருவது பிடிக்காத மோகனசுந்தரி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் அன்றைய இரவு  மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் இது போதையில் இருந்த சரத்குமாருக்கு தெரியவில்லை. காலையில் எழுந்த சரத்குமார் மோகனசுந்தரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்டவள் தன்னை விட்டு தற்கொலை செய்து கொண்டது சரத்குமாருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் போலீஸ் விசாரணை, மனைவியின் குடும்பத்தினர் என்ன செய்வார்களோ என்ற அச்சம் என பயந்து போன சரத்குமார் அதே சேலையில் மின்விசிறியில் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலை வெகுநேரம் வரை சரத்குமாரின் வீட்டு கதவு திறக்கப்படாதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் சரத்குமார், மோகனசுந்தரி ஆகியோர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ.வும் தனி விசாரணை நடத்தி வருகிறார். இளம் தம்பதி தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ள பின்னணியில் இருந்தது போதைதான். இப்போது பல குடும்பங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதும் போதைதான். இளம் பருவத்திலேயே மதுவிற்கும், போதைப் பொருட்களுக்கும் பலரும் அடிமையாகி வருகின்றனர். அது குடும்பத்தை எப்படி சிதைத்து விடுகிறது என்பதற்கு சரத்குமாரும், மோகனசுந்தரியும் உதாரணம் என்று மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Embed widget