மேலும் அறிய

Crime: தென்காசி அருகே பயங்கரம்.. பெண் கட்டிலில் கட்டி வைத்து கொடூர கொலை - கணவர் கைது

கட்டிலில் சித்ராவின் கை, கால்களை கட்டிவைத்த நிலையில் முகம் சிதலமடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

தென்காசி நகரப்பகுதியில் உள்ள நடுமாதாங்கோயில் தெருவில் உள்ளது சுப்பிரமணியன் என்பவரது வீடு. இவ்வீட்டில்  கடந்த 10 வருடங்களாக சந்திரன்-சித்ரா தம்பதியினர்  வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். இதில் கணவர் சந்திரன் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி சித்ரா பீடி சுற்றும் தொழில் செய்து  குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக  இவர்களது வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. சித்ராவின் சகோதரர் சந்திரனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது சித்ராவிற்கு உடல் நிலை சரியில்லை என்றும் இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்து விட்டு போனை வைத்துள்ளார். தொடர்ந்து மீண்டும் அவரை தொடர்பு கொண்ட போது போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த சித்ராவின் தம்பி தனது அக்கா வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது  வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில் வீட்டினுள் துர்நாற்றமும் அடித்துள்ளது. இதுகுறித்து சித்ராவின் சகோதரர்  தென்காசி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார், அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துர்நாற்றம் வீசிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, கட்டிலில் சித்ராவின் கை, கால்களை கட்டிவைத்த நிலையில் முகம் சிதலமடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். தொடர்ந்து, அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்த வீட்டில் மனைவி கை, கால்கள் கட்டப்பட்டு முகம் சிதலமடைந்த நிலையில் நேற்று இறந்து கிடப்பததால், சித்ராவை அவரது கணவன் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பில் சந்தேகமடைந்தனர்.  மேலும் கணவர் சந்திரனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது சித்ராவின் கணவர் சந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். எதற்காக கொலை செய்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கட்டி வைத்து கொடூரமாக கணவனே கொலை செய்த சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Embed widget