மேலும் அறிய

Savukku Shankar: சவுக்கு சங்கர் ஆஃபிஸ் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸ்! கஞ்சா வழக்கில் சூடுபிடிக்கும் விசாரணை!

சென்னையில் உள்ள சவுக்கு சங்கர் அலுவலகத்தில் தேனி போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தமிழ்நாடு அரசு பற்றியும் யூ டியூபில் பரபரப்பான தகவல்களையும், குற்றச்சாட்டையும் கூறி வருபவர் சவுக்கு சங்கர். இவர் யூ டியூப் ஒன்றில் தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

உடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் அலுவலகம் பூட்டு:

மேலும், அவர் கைது செய்யப்பட்டபோது அவரது காரில் இருந்து கஞ்சாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர், அவரது கார் ஓட்டுனர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, தேனியில் உள்ள பழனிசெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கஞ்சா வழக்கு தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக தேனி போலீசார் சென்னையில் உள்ள சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு வந்தனர். சென்னை, தி.நகரில் உள்ள ராஜா பாதர் தெருவில் சவுக்கு சங்கரின் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு பழனிசெட்டிப்பட்டி  காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலீசார் சென்றனர். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்த காரணத்தால், பூட்டை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்தனர். சவுக்கு சங்கர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் ஏதும் கிடைத்ததா? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கஞ்சா வழக்கு:

சவுக்கு சங்கர் அலுவலகத்தில் இருந்து கஞ்சா உள்பட வேறு ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், சவுக்கு சங்கருக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக கூறி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கைது செய்ய்பட்டார். தற்போது, சவுக்கு சங்கர் கோவையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில் சவுக்கு சங்கரை கைது செய்துள்ள கோவை போலீசார், அவர் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்ற காவலில் சவுக்கு:

நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது, சவுக்கு சங்கர் முதலமைச்சர் குடும்பம் கொள்ளையடிப்பதற்கு தான் தடையாக இருப்பதன் காரணமாகவே, தன் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோஷம் எழுப்பினார். தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை, தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வரும்போது போலீஸ் வேன் விபத்திற்குள்ளாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவையினர் மீது தொடர் குற்றச்சாட்டுக்களை கூறி வந்த சவுக்கு சங்கரின் கைது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கைதுக்கு சசிகலா உள்ளிட்ட சில தலைவர்கள் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!

மேலும் படிக்க: TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
ஹேர்கட் பண்ண லேட்டானா அடிப்பீங்களா? - சலூன் கடை உரிமையாளரை வெளுத்து வாங்கும் கொடூர வீடியோ
ஹேர்கட் பண்ண லேட்டானா அடிப்பீங்களா? - சலூன் கடை உரிமையாளரை வெளுத்து வாங்கும் கொடூர வீடியோ
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
Annamalai Politics : அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
Embed widget