மேலும் அறிய

மனைவிக்கு மணமகன் தேடிய கணவர்... விவகாரத்து தராததால் வில்லங்க முடிவெடுத்த கணவர் கைது!

விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்டது தெரியவந்துள்ளது. குற்றவாளி ஓம்குமார் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

வெளிநாடு வாழ் இந்தியர் திருமணப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள தனது மனைவி விவாகரத்து வழங்காத காரணத்தினால்,பிரபல மேட்ரிமோனி வளைதள ஒன்றில் அவருக்கு மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.  

இந்த முரண்பாடான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஓம்குமார். திருவள்ளூர் வட்டாரத்தில் அமைந்துள்ள  வெள்ளியூர் ஊராட்சியில் வசித்து வருகிறார். பட்டதாரி என்று அறியப்படுகிறது. இவருக்கும்,  திருவள்ளூர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த ஜான்சி என்பவருக்கும் கடந்த கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவி கணிணி மென்பொருள் பொறியாளராக பணி செய்து வருகிறார்.  இந்நிலையில், ஜான்சிக்கு அமெரிக்காவில் பணி செய்ய வாய்ப்புக்  கிடைத்ததையடுத்து, கணவன் – மனைவி இருவரும் அமெரிக்கா சென்றனர். இருப்பினும், அமெரிக்காவில் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கிய காரணத்தினால், ஓம்குமார் அமெரிக்காவில் இருந்து தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து சொந்த ஊரான வெள்ளியூருக்குத் திரும்பினார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஓம்குமார் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கூடுதலாக பால் வியாபாரமும் செய்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜான்சியிடம் இருந்து விவகாரத்து கேட்டு ஓம்குமார்  பூந்தமல்லியில் உள்ள சப்-கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில், பிரபல மேட்ரிமோனி வளைத்தளத்தில் ஜான்சிக்கு நல்ல மணமகன் தேவை என்ற தகவலை ஓம்குமார் விளம்பரப்படுத்தியுள்ளார். ஆன்லைன் தளத்தில் இந்த தகவலை பார்த்த சிலர், ஜான்சியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அவரது தந்தையான பத்மநாபனை தொடர்பு கொண்டனர். 

பத்மபாபன் முதலில் இந்த அழைப்புகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் எந்த இணையதளத்திலும் விளம்பரம் செய்யவில்லை என்று எடுத்துக் கூறி வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. பெருங்கோபமும்,விரக்தியும் அடைந்த அவர் பிரச்சனையின் தீவிரத்தன்மையையும் உணர ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து, இணையத்தில் தனது மகளின் திருமண நிலையை விளம்பரப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் சைபர் கிரைம் காவல்நிலைத்தில் புகார் செய்தார்.

திருவள்ளூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் லில்லி, இதுகுறித்து கூறுகையில், "விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்டது தெரியவந்துள்ளது. குற்றவாளி ஓம்குமார் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
CMS 03 Satellite: இன்னும் சில மணி நேரத்தில் விண்ணில் பாயவுள்ள CMS 03 செயற்கைக்கோள்; இது இவ்வளவு சிறப்பானதா.?
இன்னும் சில மணி நேரத்தில் விண்ணில் பாயவுள்ள CMS 03 செயற்கைக்கோள்; இது இவ்வளவு சிறப்பானதா.?
Exam tips: தேர்வு பயம் வேண்டாம்; மாணவர்கள் செய்யும் பொதுவான 7 தவறுகள்- தவிர்ப்பது எப்படி? டிப்ஸ்!
Exam tips: தேர்வு பயம் வேண்டாம்; மாணவர்கள் செய்யும் பொதுவான 7 தவறுகள்- தவிர்ப்பது எப்படி? டிப்ஸ்!
Tesla Flying Car: இனி கார்ல பறக்கலாம்; அட நிஜமாவேதாங்க.! இந்த ஆண்டு இறுதியில் டெமோ; எலானின் எக்சைட்டிங் அறிவிப்பு
இனி கார்ல பறக்கலாம்; அட நிஜமாவேதாங்க.! இந்த ஆண்டு இறுதியில் டெமோ; எலானின் எக்சைட்டிங் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gingee Masthan| கோரிக்கை வைத்த நரிக்குறவர்கள்பாதியில் எழுந்து சென்றமஸ்தான் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Women forced to prove Menstruation|’’PERIODS-னு ஏமாத்துறீங்களா?PHOTOகாட்டுங்க’’அத்துமீறிய அதிகாரிகள்
கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
CMS 03 Satellite: இன்னும் சில மணி நேரத்தில் விண்ணில் பாயவுள்ள CMS 03 செயற்கைக்கோள்; இது இவ்வளவு சிறப்பானதா.?
இன்னும் சில மணி நேரத்தில் விண்ணில் பாயவுள்ள CMS 03 செயற்கைக்கோள்; இது இவ்வளவு சிறப்பானதா.?
Exam tips: தேர்வு பயம் வேண்டாம்; மாணவர்கள் செய்யும் பொதுவான 7 தவறுகள்- தவிர்ப்பது எப்படி? டிப்ஸ்!
Exam tips: தேர்வு பயம் வேண்டாம்; மாணவர்கள் செய்யும் பொதுவான 7 தவறுகள்- தவிர்ப்பது எப்படி? டிப்ஸ்!
Tesla Flying Car: இனி கார்ல பறக்கலாம்; அட நிஜமாவேதாங்க.! இந்த ஆண்டு இறுதியில் டெமோ; எலானின் எக்சைட்டிங் அறிவிப்பு
இனி கார்ல பறக்கலாம்; அட நிஜமாவேதாங்க.! இந்த ஆண்டு இறுதியில் டெமோ; எலானின் எக்சைட்டிங் அறிவிப்பு
TVK: விஜய்க்கே தெரியாமல் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை.. யாருடன் யார் நடத்தியது?
TVK: விஜய்க்கே தெரியாமல் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை.. யாருடன் யார் நடத்தியது?
வரப்போது Skoda Kushaq Facelift.. கிரெட்டா, செல்டோஸ், டைகன்-க்கு சவால் - என்ன சிறப்பம்சங்கள்?
வரப்போது Skoda Kushaq Facelift.. கிரெட்டா, செல்டோஸ், டைகன்-க்கு சவால் - என்ன சிறப்பம்சங்கள்?
பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூல்; ஆசிரியர்கள், அதிகாரிகளை கையேந்த வைப்பதா?- அன்புமணி கண்டனம்
பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூல்; ஆசிரியர்கள், அதிகாரிகளை கையேந்த வைப்பதா?- அன்புமணி கண்டனம்
Top 10 News Headlines: “‘SIR‘-எதிர்க்க வேண்டியது தேவை“, இன்று ஏவப்படும் CMS 03 செயற்கைக்கோள், ட்ரம்ப்பிடம் கனடா பிரதமர் மன்னிப்பு - 11 மணி செய்திகள்
“‘SIR‘-எதிர்க்க வேண்டியது தேவை“, இன்று ஏவப்படும் CMS 03 செயற்கைக்கோள், ட்ரம்ப்பிடம் கனடா பிரதமர் மன்னிப்பு - 11 மணி செய்திகள்
Embed widget