மேலும் அறிய

சீசிங் ராஜா முக்கிய கூட்டாளி கைது.. பிரபல ரவுடி சஜித் கைதுக்கு பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் வழக்கா ? 

பிரபல ரவுடி சீசிங் ராஜா கூட்டாளி சஜித் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புறநகர் பகுதிகளில், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் வருகின்றன. சென்னை புறநகர் பகுதிகள் அதிக வளர்ச்சியை நோக்கி ஒரு புறம் பயணித்து வரும் நிலையில்,  மறுபடியும் ரவுடிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. அவப்பொழுது நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால், பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.  தொடர்ந்து ரவுடிகளின் பெருக்கம் அதிகரித்து வருவதால், தொழில் செய்பவர்கள்,  சிறு-குறு தொழிற்சாலை அதிபர்களை மிரட்டி மாமுல் பெறுவதும் அதிகரித்து வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு...


இந்தநிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பலதரப்பட்ட , நபர்கள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீசிங் ராஜா கூட்டாளி


இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்பவ செந்தில் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும், அவரது நண்பருமான பிரபல ரவுடி சஜித், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். சஜித் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு,  கொள்ளை வழக்குகள் ஆகியவை நிலுவையில் உள்ளன. குறிப்பாக  நெடுங்குன்றம் சூர்யாவின் தம்பி உதயா கொலை வழக்கு,  உள்ளிட்ட 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

ரவுடி சஜித், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரவுடி சீசிங் ராஜாவுடன், சஜித் தொடர்பில் உள்ளாரா, சீசிங் ராஜா இருக்கும் இடம் சஜித்துக்கு தெரியுமா என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சீசிங் ராஜா

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் ராதாகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (எ) சீசிங் ராஜா. வழிப்பறி குற்றவாளியாக சிறு குற்றங்களில் துவங்கிய ராஜா, படிப்படியாக வளர்ந்து ஏ (A+) ப்ளஸ் குற்றவாளியாக வளர்ந்தார். ராஜா சென்னை புறநகர் பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதேபோல தொழிலதிபர்களை மிரட்டும் கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

சீசிங் ராஜா மீது தாம்பரம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு, புளியந்தோப்பு, ராஜமங்கலம், அதேபோல தென் சென்னை பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள், தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள காவல் நிலையங்களில், 5 கொலை வழக்குகளும், 5 கொலை முயற்சி வழக்குகளும், ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 33 வழக்குகள், ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜா மீது இதுவரை 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா தொடர்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
தென் மாநிலங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் முதலிடம்.. - ஆர்.பி.உதயகுமார் சொல்வது என்ன !
தென் மாநிலங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் முதலிடம்.. - ஆர்.பி.உதயகுமார் சொல்வது என்ன !
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?
Tamilnadu Roundup: சென்னையில் 120 மின்சார பேருந்துகள்.. பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு விசாரணை - பரபரப்பில் தமிழ்நாடு
Tamilnadu Roundup: சென்னையில் 120 மின்சார பேருந்துகள்.. பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு விசாரணை - பரபரப்பில் தமிழ்நாடு
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
Embed widget