மேலும் அறிய

சீசிங் ராஜா முக்கிய கூட்டாளி கைது.. பிரபல ரவுடி சஜித் கைதுக்கு பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் வழக்கா ? 

பிரபல ரவுடி சீசிங் ராஜா கூட்டாளி சஜித் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புறநகர் பகுதிகளில், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் வருகின்றன. சென்னை புறநகர் பகுதிகள் அதிக வளர்ச்சியை நோக்கி ஒரு புறம் பயணித்து வரும் நிலையில்,  மறுபடியும் ரவுடிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. அவப்பொழுது நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால், பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.  தொடர்ந்து ரவுடிகளின் பெருக்கம் அதிகரித்து வருவதால், தொழில் செய்பவர்கள்,  சிறு-குறு தொழிற்சாலை அதிபர்களை மிரட்டி மாமுல் பெறுவதும் அதிகரித்து வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு...


இந்தநிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பலதரப்பட்ட , நபர்கள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீசிங் ராஜா கூட்டாளி


இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்பவ செந்தில் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும், அவரது நண்பருமான பிரபல ரவுடி சஜித், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். சஜித் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு,  கொள்ளை வழக்குகள் ஆகியவை நிலுவையில் உள்ளன. குறிப்பாக  நெடுங்குன்றம் சூர்யாவின் தம்பி உதயா கொலை வழக்கு,  உள்ளிட்ட 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

ரவுடி சஜித், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரவுடி சீசிங் ராஜாவுடன், சஜித் தொடர்பில் உள்ளாரா, சீசிங் ராஜா இருக்கும் இடம் சஜித்துக்கு தெரியுமா என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சீசிங் ராஜா

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் ராதாகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (எ) சீசிங் ராஜா. வழிப்பறி குற்றவாளியாக சிறு குற்றங்களில் துவங்கிய ராஜா, படிப்படியாக வளர்ந்து ஏ (A+) ப்ளஸ் குற்றவாளியாக வளர்ந்தார். ராஜா சென்னை புறநகர் பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதேபோல தொழிலதிபர்களை மிரட்டும் கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

சீசிங் ராஜா மீது தாம்பரம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு, புளியந்தோப்பு, ராஜமங்கலம், அதேபோல தென் சென்னை பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள், தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள காவல் நிலையங்களில், 5 கொலை வழக்குகளும், 5 கொலை முயற்சி வழக்குகளும், ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 33 வழக்குகள், ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜா மீது இதுவரை 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா தொடர்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Modi Vs EPS: காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 30-ம் தேதி புதன் கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னையில ஜூலை 30-ம் தேதி புதன் கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Vs EPS: காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 30-ம் தேதி புதன் கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னையில ஜூலை 30-ம் தேதி புதன் கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
Volkswagen: அறிமுகமான மூன்றே மாதங்களில் ரூ.3 லட்சம் விலை குறைப்பு - ஆல் வீல் ட்ரைவ் SUV மிரட்டுதே...
Volkswagen: அறிமுகமான மூன்றே மாதங்களில் ரூ.3 லட்சம் விலை குறைப்பு - ஆல் வீல் ட்ரைவ் SUV மிரட்டுதே...
Top 10 News Headlines: ஒரே நாளில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு, பிரதமர் மோடி நிறைவுரை, சீனாவை முந்திய இந்தியா - 11 மணி செய்திகள்
ஒரே நாளில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு, பிரதமர் மோடி நிறைவுரை, சீனாவை முந்திய இந்தியா - 11 மணி செய்திகள்
Amit Shah Angry: “நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் - யார் எழுதியது.?
“TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் - யார் எழுதியது.?
Embed widget