![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கழிவறையில் ஆசிட் டப்பில் இறந்து கிடந்த இளம்பெண்.. கொன்றது கணவரா? தீவிரமெடுக்கும் விசாரணை
இளம் பெண் ஒருவர் கழிவறையில் ஆசிட் நிறைந்த டப்பில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![கழிவறையில் ஆசிட் டப்பில் இறந்து கிடந்த இளம்பெண்.. கொன்றது கணவரா? தீவிரமெடுக்கும் விசாரணை Sydney: 19 year old women found dead in a bath full of acid 'married accused killer just weeks before' கழிவறையில் ஆசிட் டப்பில் இறந்து கிடந்த இளம்பெண்.. கொன்றது கணவரா? தீவிரமெடுக்கும் விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/02/b8fd8058b9ffbed3508611b7401c18a8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நபர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமினா ஹையத்(19) என்ற இளம் பெண் மருத்துவம் படித்து வருகிறார். இவர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கும் மெராஜ் ஸாஃபர் என்பவருக்கும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்தச் சூழலில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக இவர் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று திடீரென அமினா ஹையத் அவருடைய வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: தேர்தலில் போட்டியிட இருந்த திமுக வட்டச் செயலாளர் வெட்டிக்கொலை.. என்ன நடந்தது?
அவர்கள் அமினாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது கழிவறையில் ஒரு ஆசிட் நிரப்பட்ட குளிக்கும் டப்பில் இவர் பிணமாக மிதந்து கிடந்துள்ளார். அவருடைய உடலை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அமினா ஹையத் 24 மணிநேரத்திற்கு மேலாக இறந்து அந்த ஆசிட் டப்பில் கிடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் அறிக்கை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அத்துடன் மெராஜ் ஸாஃபரையும் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.
மெராஜ் ஸாஃபர் ஒரு பகுதியில் லாரி ஓட்டி தப்பி செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மெராஜ் ஸாஃபரை காவலர்கள் சுற்றி வலைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும் அந்த கொலைக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். எனினும் அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமினா ஹையத்தின் இறப்பு குறித்து அவருடைய பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, “எங்களிடம் அமினா முதலில் ஒரு நபரை காதலிக்கிறேன் என்று கூறினார். அது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறினோம். இதன்காரணமாக அமினா எங்களிடம் சில மாதங்களாக பேசவில்லை. தற்போது அவர் இறந்துள்ள செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது. இது எங்களும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. எங்களுக்கு எங்களுடைய மகள் திருப்பி வேண்டும்” என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: ஒரு நியாயம் வேணாமா? முன்னாள் காதலனிடம் பணம் பறிக்க தன்னைத்தானே கடத்தி பெண் போட்ட ட்ராமா..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)