மேலும் அறிய

Crime : அதிர்ச்சி.. போதையில் வெடிகுண்டு மிரட்டல் ..! தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன..?

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்மநபர் ஒருவர் காவல் கட்டுப்பாடு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்

காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு நேற்று மாலை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்து கொண்டிருக்கும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் செய்யப்பட்டது. இந்த தகவல் கிடைத்தவுடன் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் ரயில் நிலையத்திற்கு செல்வதற்குள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை ரயில் கடந்து சிங்கப்பெருமாள் கோயில் சென்று விட்டதால் உடனடியாக இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Crime : அதிர்ச்சி.. போதையில் வெடிகுண்டு மிரட்டல் ..! தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன..?
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் தாம்பரம் காவல் நிலைய போலீசார், தாம்பரம் ரயில்வே காவல் நிலைய போலீசார், தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் என 20க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் குவிய தொடங்கினர். தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த டயானா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டிருந்தது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் இருந்து இரண்டு வெடிகுண்டு நிபுணர்கள் வந்திருந்தனர். அனைவரும் தாம்பரம் ரயில் நிலையத்தில் தயார் நிலையில் காத்துக் கொண்டிருந்தனர். இரவு 7.45 மணி அளவில் தாம்பரம் ரயில் நிலைய 5வது நடை மேடைக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது.

Crime : அதிர்ச்சி.. போதையில் வெடிகுண்டு மிரட்டல் ..! தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன..?
இதனை அடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்த போலீசார் ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு பெட்டிகளிலும் இருந்த பயணிகளின் பைகளை மோப்ப நாய் டயானா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையிட்டனர். இந்த திடீர் சோதனையினால் பயணிகள் என்ன, ஏது என்று தெரியாமல் குழப்பத்தில் திகைத்து நின்றனர். ரயில் புறப்பட தாமதமாகும் என போலீசார் தெரிவித்ததையடுத்து எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் பெரும்பாலான பயணிகள் தங்களது பைகளை எடுத்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே இறங்கி மின்சார ரயில் மூலம் செல்வதற்காக சென்றனர்.
 
ரயிலில் முழுமையாக சோதனை நடைபெற்று முடிந்த பின், எந்த வெடி பொருளும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. மர்ம மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து இரவு 8.57 மணியளவில் ரயில் மீதம் இருந்த பயணிகளுடன் எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றது. இதையடுத்து யார் இந்த தகவலை சொன்னது என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில், வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் எனபவர் தனது மனைவி சாந்தியை பிரிந்து வாழ்ந்து வருவதும் , போதையில்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget