மேலும் அறிய

Crime: பணம் கொடுக்க மாட்டியா? - சுவற்றில் தலையை மோதி தாயை கொடூரமாக கொன்ற மகன்!

நிலத்தை விற்று தனக்கு பங்கு கொடுக்க வேண்டும் என சந்தவ்வாவுக்கு கெடு விதித்த நிலையில் அவர் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குமார், தனது தாயை கொலை செய்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் பணம் கொடுக்க மறுத்த தாயை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, “உயிரிழந்த பெண்ணின் பெயர் சந்த்வா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதான அந்த பெண்ணுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். 4 மகள்கள் மற்றும் ஒரு மகனுக்கு திருமணமான நிலையில் மற்றொரு மகனான சந்தோஷ் ஜக்கேரு தாண்டாவில் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து, தனது தாயாரோடு வசித்து வந்தார். 

இதனிடையே மூத்த மகனான குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. பின்னர் போதையில் தனது குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாக இருந்துள்ளது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் ஜக்கேரு தாண்டா கிராமத்திற்கு பெங்களூருவில் இருந்து குமார் வந்துள்ளார். 

வந்தவுடன் தனது தாய் சந்தவ்வாவுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளார். அப்படியான நேற்று (ஜனவரி 26) மாலையும் சண்டை நடைபெற்றுள்ளது. இதில் கடும் கோபமடைந்த குமார், தாய் என்றும் பாராமல் சந்தவ்வாவை தரதரவென இழுத்து அடித்து உதைத்தார். தனது வீட்டிற்கு அடுத்துள்ள ஒரு கட்டடத்தின் சுவற்றில் தலையை மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்தவ்வா இரத்த வெள்ளத்தில் மயங்கினார். ஆனாலும் ஆத்திரம் தீராத குமார் அங்கிருந்த கல்லை எடுத்து அவர் மீது வீச சம்பவ இடத்திலேயே சந்தவ்வா உயிரிழந்தார். 

உடனடியாக இந்த சம்பவம் குறித்து ராய்ச்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து குமாரை கைது செய்தனர். சந்தவ்வா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குமாரிடம் நடத்திய விசாரணையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 

அதாவது தந்தையை இழந்த நிலையில் குழந்தைகள் 6 பேரையும் ஒற்றை ஆளாக சந்தவ்வா வளர்த்து ஆளாக்கியுள்ளார். வேலை சென்ற பின் தாயை பராமரிக்கும் பொறுப்புக் கொண்ட மகன் குமார் அதனை செய்யாமல் ரூ.2 லட்சம் கேட்டு தனது தாயாரை துன்புறுத்தி வந்தான். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என சந்தவ்வா மறுத்துள்ளார். இதனால் பெங்களூவில் இருந்து சொந்த கிராமத்துக்கு வந்த குமார், வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தி சண்டையிட்டுள்ளார். 

தன்னிடம் கடைசி மகன் சந்தோஷ் திருமணத்திற்கு கூட தன்னிடம் பணம் இல்லை என தாய் கூறியதை குமார் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குமார், தனது தாயை கொலை செய்துள்ளார். முன்னதாக நிலத்தை விற்று தனக்கு பங்கு கொடுக்க வேண்டும் என சந்தவ்வாவுக்கு கெடு விதித்த நிலையில் அவர் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. குமார் தனது தாயை அடித்ததை தட்டிக் கேட்க உள்ளூர் மக்கள் சென்ற போது அவர்களையும் கொன்று விடுவேன் என குமார் மிரட்டியுள்ளான். இதனைத் தொடர்ந்து முத்கல் போலீசார் குமாரை கைது செய்து சிறையில் அடைத்து சிறையில் அடைத்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
காதல் திருமணம் செய்த சகோதரி.. ஆத்திரத்தில் மச்சானை கத்தியால் குத்திய தம்பி!
காதல் திருமணம் செய்த சகோதரி.. ஆத்திரத்தில் மச்சானை கத்தியால் குத்திய தம்பி!
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Khamenei Dead: “கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
“கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
Embed widget