மேலும் அறிய

தந்தையின் மரணத்தில் சந்தேகம் - எஸ்.பி அலுவலகத்தில் மகன் புகார்

வேலுசாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டம், க.பரமத்தி வெங்கடரமண சுவாமி புளூ மெட்டல் என்ற கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கரூரில் கல்குவாரியில் வேலை பார்த்து வந்த தந்தையின் மரணத்தில் கல்குவாரி நிர்வாகத்தின் மீது சந்தேகம் இருப்பதாக எஸ்.பி அலுவலகத்தில் புகார் தெரிவித்த இளைஞர், கரூர் மாவட்டம், ஜெகதாபி அடுத்த அல்லாளி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.


தந்தையின் மரணத்தில் சந்தேகம் - எஸ்.பி அலுவலகத்தில் மகன் புகார்

அந்த புகார் மனுவில், எனது தந்தை வேலுசாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டம், க.பரமத்தி வெங்கடரமணசுவாமி புளூ மெட்டல் என்ற கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காலை 9.30 மணியளவில் க.பரமத்தி காவல்நிலைய காவலர் எனக்கு போன் செய்து எனது தந்தை இன்று திருச்சி அரசு, மருத்துவமணையில் இறந்து விட்டதாகவும், தந்தைக்கு கரூர் காருடையாம் பாளையம் அருகில் கடந்த 21/09/2022 அன்று விபத்து ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, இறுதியாக திருச்சி அரசு மருத்துவமணையில் இறந்து விட்டதாக தெரிவித்தார்.


தந்தையின் மரணத்தில் சந்தேகம் - எஸ்.பி அலுவலகத்தில் மகன் புகார்

மேலும், க.பரமத்தி காவல் நிலைய காவலர் வேறு எந்த விதமான விவரங்களையும் தரமறுத்து விட்டார். கடந்த 21/09/2002 அன்று விபத்து ஏற்பட்டு இன்று வரை எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ எத்தவித தகவலும் அளிக்கவில்லை. என் தந்தையின் இறப்பில் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் சந்தேகம் உள்ளது. என் அப்பா பணிபுரிந்த வெங்கடரமண சாமி புளூ மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தின் மீது சந்தேகம் ஏற்படுள்ளது. 


தந்தையின் மரணத்தில் சந்தேகம் - எஸ்.பி அலுவலகத்தில் மகன் புகார்

மேலும், க.பரமத்தி பகுதியில் சுமார் 5 முதல் 6 மர்ம மரணம் ஏற்ப்படுள்ளது. எனது தந்தையின் மரணத்திற்க்கு கரணமான நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்குவாரி ஊழியர் விவசாயி ஜெகநாதன் என்பவரை வாகனம் ஏற்றி கொலை செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் நான்கு நாட்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சித் தலைவரின் வேண்டுகோளை ஏற்று உடலை பெற்றுக் கொண்டனர். கரூர் மாவட்டத்தில் கல்குவாரி சம்பந்தமாக ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் மீண்டும் மற்றொரு கல்குவாரியின் பணியாற்றி வந்த ஒருவர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


தீயில் எரிந்து குடிசை நாசம்

குளித்தலை அருகே உள்ள மேலக்குறப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). இவரது மனைவி செல்லம்மாள் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகளுக்கு திருமணமாகி அவர் கணவருடன் வசித்து வருகிறார். இவரது வீடு மேற்குறை தகரத்தினாலும், கீழ்ப்பகுதி முழுவதும் தென்னங்கீற்றாலும் அமைக்கப்பட்ட வீடாகும். தங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை என்பதால் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துள்ளனர். இந்த நிலையில் காலை இவரது வீட்டின் உட்பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது.


தந்தையின் மரணத்தில் சந்தேகம் - எஸ்.பி அலுவலகத்தில் மகன் புகார்

இதை பார்த்த அப்ப பகுதியில் இருந்தவர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் முயற்சியால் தீ ஓரளவு அணைக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து அங்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தீ விபத்துக்குள்ளான. வீட்டை பார்வையிட்டு விசாரித்த போது வீட்டில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு கீழே விழுந்து தீப்பிடித்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அதுபோல வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

தலைப்பு செய்திகள்

" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம் !! 14 மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி
பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம் !! 14 மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
Embed widget