மேலும் அறிய

தந்தையின் மரணத்தில் சந்தேகம் - எஸ்.பி அலுவலகத்தில் மகன் புகார்

வேலுசாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டம், க.பரமத்தி வெங்கடரமண சுவாமி புளூ மெட்டல் என்ற கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கரூரில் கல்குவாரியில் வேலை பார்த்து வந்த தந்தையின் மரணத்தில் கல்குவாரி நிர்வாகத்தின் மீது சந்தேகம் இருப்பதாக எஸ்.பி அலுவலகத்தில் புகார் தெரிவித்த இளைஞர், கரூர் மாவட்டம், ஜெகதாபி அடுத்த அல்லாளி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.


தந்தையின் மரணத்தில் சந்தேகம் - எஸ்.பி அலுவலகத்தில் மகன் புகார்

அந்த புகார் மனுவில், எனது தந்தை வேலுசாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டம், க.பரமத்தி வெங்கடரமணசுவாமி புளூ மெட்டல் என்ற கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காலை 9.30 மணியளவில் க.பரமத்தி காவல்நிலைய காவலர் எனக்கு போன் செய்து எனது தந்தை இன்று திருச்சி அரசு, மருத்துவமணையில் இறந்து விட்டதாகவும், தந்தைக்கு கரூர் காருடையாம் பாளையம் அருகில் கடந்த 21/09/2022 அன்று விபத்து ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, இறுதியாக திருச்சி அரசு மருத்துவமணையில் இறந்து விட்டதாக தெரிவித்தார்.


தந்தையின் மரணத்தில் சந்தேகம் - எஸ்.பி அலுவலகத்தில் மகன் புகார்

மேலும், க.பரமத்தி காவல் நிலைய காவலர் வேறு எந்த விதமான விவரங்களையும் தரமறுத்து விட்டார். கடந்த 21/09/2002 அன்று விபத்து ஏற்பட்டு இன்று வரை எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ எத்தவித தகவலும் அளிக்கவில்லை. என் தந்தையின் இறப்பில் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் சந்தேகம் உள்ளது. என் அப்பா பணிபுரிந்த வெங்கடரமண சாமி புளூ மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தின் மீது சந்தேகம் ஏற்படுள்ளது. 


தந்தையின் மரணத்தில் சந்தேகம் - எஸ்.பி அலுவலகத்தில் மகன் புகார்

மேலும், க.பரமத்தி பகுதியில் சுமார் 5 முதல் 6 மர்ம மரணம் ஏற்ப்படுள்ளது. எனது தந்தையின் மரணத்திற்க்கு கரணமான நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்குவாரி ஊழியர் விவசாயி ஜெகநாதன் என்பவரை வாகனம் ஏற்றி கொலை செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் நான்கு நாட்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சித் தலைவரின் வேண்டுகோளை ஏற்று உடலை பெற்றுக் கொண்டனர். கரூர் மாவட்டத்தில் கல்குவாரி சம்பந்தமாக ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் மீண்டும் மற்றொரு கல்குவாரியின் பணியாற்றி வந்த ஒருவர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


தீயில் எரிந்து குடிசை நாசம்

குளித்தலை அருகே உள்ள மேலக்குறப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). இவரது மனைவி செல்லம்மாள் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகளுக்கு திருமணமாகி அவர் கணவருடன் வசித்து வருகிறார். இவரது வீடு மேற்குறை தகரத்தினாலும், கீழ்ப்பகுதி முழுவதும் தென்னங்கீற்றாலும் அமைக்கப்பட்ட வீடாகும். தங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை என்பதால் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துள்ளனர். இந்த நிலையில் காலை இவரது வீட்டின் உட்பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது.


தந்தையின் மரணத்தில் சந்தேகம் - எஸ்.பி அலுவலகத்தில் மகன் புகார்

இதை பார்த்த அப்ப பகுதியில் இருந்தவர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் முயற்சியால் தீ ஓரளவு அணைக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து அங்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தீ விபத்துக்குள்ளான. வீட்டை பார்வையிட்டு விசாரித்த போது வீட்டில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு கீழே விழுந்து தீப்பிடித்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அதுபோல வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget