மேலும் அறிய

Ajithkumar Lockup Death: மிருகமான காவலர்கள் - 50 காயங்கள், சிகரெட் சூடு, கட்டையால் தாக்குதல் - அஜித்குமார் கொடூரக் கொலை

Ajith kumar lock Up Death Post Mortem Report: சிவகங்கையில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன.

Ajith kumar lock Up Death Post Mortem Report: சிவகங்கையில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில், 50 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

50 இடங்களில் காயங்கள்:

சிவகங்கையில் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவரை, நகை திருடிய வழக்கில் காவல்துறையினரே அடித்துக் கொன்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கி எடுத்துள்ளது. இதுதொடர்பாக 6 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை வழக்காகவும் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், அஜித்குமார் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் மூலம், காவல்துறையினர் மனிதத்தன்மையின்றி,எந்த அளவிற்கு குரூரமாக அஜித்குமாரை தாக்கியுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.

காவல்துறையின் இரக்கமற்ற தன்மை:

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அஜித்குமாரின் உடலில் பல்வேறு விதமான 50 காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சிகரெட்டால் சுட்டதாலும், கட்டையால் சரமாரியாக தாக்கியதாலும் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை, வயிறு, கண்கள் என பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு மிகவும் சித்தரவதையான மரணத்தையே அஜித்குமார் எதிர்கொண்டுள்ளார் என்பதையும் பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஈவு இரக்கமன்றி, மனிதத்தன்மை சற்றும் இன்றி காவல்துறையினர் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.

இந்தக் காயங்கள் வெறும் வெளிப்புறக் காயங்கள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன எனவும்,  ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் உடலில் இருந்த காய விவரங்கள்:

  • அஜித்குமாரின் உடலில் இருந்த காயங்களில்  12 சிராய்ப்பு காயங்கள்
  • மீதமிருந்தவை ரத்தக் கட்டு (கன்றிய நிலையில் இருக்கும் காயங்கள்)
  • வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்தி காயப்படுத்தப்பட்டிருக்கிறார்
  • தலையில் கம்பை வைத்து தாக்கியதில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது
  • சிகரெட் சூட்டால் சித்திரவதை செய்யப்பட்டு - இடது கையில் மூன்று இடங்களில் சிகரெட் சூடு
  • மண்டை ஓட்டின் இரண்டு பக்கங்களிலும் நடுமண்டை மற்றும் தலைப்பகுதி  முழுவதும் கட்டையால் அடித்த காயம்
  • நாக்கை கடித்ததை போன்ற நிலை
  • தலையில் அடிபட்டதால் வலிப்பு
  • கண்கள் சிவந்து வீங்கியதோடு, காதுகளில் ரத்தக்கசிவு
  • இதயத்தில் இரு இடங்களில் ரத்தக்கசிவு உள்ளிட்ட காயங்கள் பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளன

இந்த அளவிலான காயங்கள், ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம் என மருத்துவ வல்லுநர்கள் கணிக்கின்றனர். அதாவது, ஒரே நேரத்தில் பலர் சேர்ந்து தொடர்ச்சியாக அடிக்கும்போது உருவாகும் காயங்கள். இது திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடத்திய தீவிரமான காவல் சித்திரவதை என்றே தெரிய வருகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget