மேலும் அறிய

Ajithkumar Lockup Death: மிருகமான காவலர்கள் - 50 காயங்கள், சிகரெட் சூடு, கட்டையால் தாக்குதல் - அஜித்குமார் கொடூரக் கொலை

Ajith kumar lock Up Death Post Mortem Report: சிவகங்கையில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன.

Ajith kumar lock Up Death Post Mortem Report: சிவகங்கையில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில், 50 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

50 இடங்களில் காயங்கள்:

சிவகங்கையில் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவரை, நகை திருடிய வழக்கில் காவல்துறையினரே அடித்துக் கொன்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கி எடுத்துள்ளது. இதுதொடர்பாக 6 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை வழக்காகவும் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், அஜித்குமார் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் மூலம், காவல்துறையினர் மனிதத்தன்மையின்றி,எந்த அளவிற்கு குரூரமாக அஜித்குமாரை தாக்கியுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.

காவல்துறையின் இரக்கமற்ற தன்மை:

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அஜித்குமாரின் உடலில் பல்வேறு விதமான 50 காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சிகரெட்டால் சுட்டதாலும், கட்டையால் சரமாரியாக தாக்கியதாலும் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை, வயிறு, கண்கள் என பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு மிகவும் சித்தரவதையான மரணத்தையே அஜித்குமார் எதிர்கொண்டுள்ளார் என்பதையும் பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஈவு இரக்கமன்றி, மனிதத்தன்மை சற்றும் இன்றி காவல்துறையினர் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.

இந்தக் காயங்கள் வெறும் வெளிப்புறக் காயங்கள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன எனவும்,  ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் உடலில் இருந்த காய விவரங்கள்:

  • அஜித்குமாரின் உடலில் இருந்த காயங்களில்  12 சிராய்ப்பு காயங்கள்
  • மீதமிருந்தவை ரத்தக் கட்டு (கன்றிய நிலையில் இருக்கும் காயங்கள்)
  • வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்தி காயப்படுத்தப்பட்டிருக்கிறார்
  • தலையில் கம்பை வைத்து தாக்கியதில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது
  • சிகரெட் சூட்டால் சித்திரவதை செய்யப்பட்டு - இடது கையில் மூன்று இடங்களில் சிகரெட் சூடு
  • மண்டை ஓட்டின் இரண்டு பக்கங்களிலும் நடுமண்டை மற்றும் தலைப்பகுதி  முழுவதும் கட்டையால் அடித்த காயம்
  • நாக்கை கடித்ததை போன்ற நிலை
  • தலையில் அடிபட்டதால் வலிப்பு
  • கண்கள் சிவந்து வீங்கியதோடு, காதுகளில் ரத்தக்கசிவு
  • இதயத்தில் இரு இடங்களில் ரத்தக்கசிவு உள்ளிட்ட காயங்கள் பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளன

இந்த அளவிலான காயங்கள், ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம் என மருத்துவ வல்லுநர்கள் கணிக்கின்றனர். அதாவது, ஒரே நேரத்தில் பலர் சேர்ந்து தொடர்ச்சியாக அடிக்கும்போது உருவாகும் காயங்கள். இது திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடத்திய தீவிரமான காவல் சித்திரவதை என்றே தெரிய வருகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget