மேலும் அறிய
பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!
பள்ளி வளாகத்திற்குள்ளேயே வைத்து 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

பாதிக்கப்பட்ட மாணவன்
Source : whatsapp
சிவகங்கை அருகே ஆதி திராவிடர் நல பள்ளி வளாகத்திற்குள்ளேயே வைத்து 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் பயிலும் சக மாணவர்களுடன் ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிவகங்கையை அடுத்துள்ள நிரஞ்சான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம், பானுமதி தம்பதியர். ராஜாங்கம் கொத்தனாராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 17 வயதான மகன் சஞ்சய் பிரசாத் மாற்றுதிறனாளியாக உள்ளதுடன் அருகில் உள்ள மல்லல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு அந்த பள்ளியில் பயிலும் சக மாணவர்களுடன் ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சஞ்சய் பிரசாத்தை 4 இடங்களில் குத்தியுள்ளனர்
இந்நிலையில் இன்று பள்ளிக்கு சென்ற சஞ்சய் பிரசாத்தை தாக்க தாயார் நிலையில் இருந்த எதிர் தரப்பு மாணவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சஞ்சய் பிரசாத்தை 4 இடங்களில் குத்தியுள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன் ஒரு மாணவனை மட்டும் பிடித்து போலிசிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடம் வந்த மானாமதுரை போலீசார் அந்த மாணவனை பிடித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு அரசு பள்ளி வளாகத்திற்குள்ளேயே கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















