மேலும் அறிய

திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து மூதாட்டி பலியான சோகம்..!

சீர்காழியில் திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம் கொடுத்த தூய்மை பணியாளர் அதே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஈசானிய தெருவை சேர்ந்தவர் 68 வயதான அன்பழகி. இவர் சீர்காழி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அன்பழகி கணவர் உயிரிழந்த நிலையில் மகன்கள், மகள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். இந்த சூழலில் திருடர்கள் பயத்தினால் இவர் வீட்டில் வைத்துள்ள பீரோவிற்கு மின்சாரம் கொடுத்து இரவில் தூங்குவது வழக்கமாக கொண்டிருந்தார்.


திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து  மூதாட்டி பலியான சோகம்..!

இந்நிலையில் இன்று காலை எழுந்த அன்பழகி மின் இணைப்பை நிறுத்தாமல் வீட்டு வாசலில் கோலமிட்டு, பின்னர்  பீரோவுக்கு அடியில் கோலமாவை வைத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவம் இடத்திற்கு வந்த காவலர்கள் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடனுக்கு பயந்து மின்சாரம் வைத்த மூதாட்டி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சீர்காழி அருகே குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 23 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். ராமசந்திரன் அவரது இரண்டு மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வழிபாடு செய்ய பாதயாத்திரையாக கடந்த 24ஆம் தேதி புறப்பட்டு சென்றுள்ளார்.


திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து  மூதாட்டி பலியான சோகம்..!

இந்நிலையில், இன்று காலை ராமசந்திரன் வீட்டிற்கு உறவினர் வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டின் உரிமையாளர் ராமசந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமசந்திரன் உடனடியாக வேளாங்கண்ணியில் இருந்து  புறப்பட்டு வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இரண்டு அறைகள் மற்றும் மாடியில் உள்ள வீட்டிலும் பீரோக்களில் வைத்திருந்த 23 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ராமசந்திரன் அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவலைக்கப்பட்டு கைரேகைகள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றத்திற்க்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் திருவிழா வெகு விமரிசியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு விழாவானது வருகின்ற ஆகஸ்ட்  29ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக சென்று ஆரோக்கிய மாதாவின் அருளை பெருவது வழக்கம்.  


திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து  மூதாட்டி பலியான சோகம்..!

சென்னை, பெங்களூர், கர்நாடாக, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டு, வருகின்ற 29 -ம் தேதி கொடியேற்றத்தை பார்ப்பதால் தங்கள் கவலை நீங்கி வாழ்வில் புதுமை நிகழ்வதாகவும், நோய் நொடியின்றி வாழ்வதற்கும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் மாதாவை பாதயாத்திரையாக சென்று வழிபடுவதாக தெரிவிக்கின்றனர். வருகின்ற 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவால் வேளாங்கண்ணி முழுவதும் மக்கள் வெள்ளத்தில் 10 நாட்கள் நிரம்பி காணப்படும்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
Vikram Sugumaran: முதுகில் குத்திய நடிகர், துரோகம் செய்த நண்பர் - இயக்குனர் விக்ரம் சுகுமாரனை ஏமாற்றியது யார்?
Vikram Sugumaran: முதுகில் குத்திய நடிகர், துரோகம் செய்த நண்பர் - இயக்குனர் விக்ரம் சுகுமாரனை ஏமாற்றியது யார்?
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
Vikram Sugumaran: முதுகில் குத்திய நடிகர், துரோகம் செய்த நண்பர் - இயக்குனர் விக்ரம் சுகுமாரனை ஏமாற்றியது யார்?
Vikram Sugumaran: முதுகில் குத்திய நடிகர், துரோகம் செய்த நண்பர் - இயக்குனர் விக்ரம் சுகுமாரனை ஏமாற்றியது யார்?
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
மாஸ் என்ட்ரி கொடுத்த யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்.. உலகமே ஷாக்
மும்பையில் யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
Embed widget