மேலும் அறிய

திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து மூதாட்டி பலியான சோகம்..!

சீர்காழியில் திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம் கொடுத்த தூய்மை பணியாளர் அதே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஈசானிய தெருவை சேர்ந்தவர் 68 வயதான அன்பழகி. இவர் சீர்காழி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அன்பழகி கணவர் உயிரிழந்த நிலையில் மகன்கள், மகள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். இந்த சூழலில் திருடர்கள் பயத்தினால் இவர் வீட்டில் வைத்துள்ள பீரோவிற்கு மின்சாரம் கொடுத்து இரவில் தூங்குவது வழக்கமாக கொண்டிருந்தார்.


திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து மூதாட்டி பலியான சோகம்..!

இந்நிலையில் இன்று காலை எழுந்த அன்பழகி மின் இணைப்பை நிறுத்தாமல் வீட்டு வாசலில் கோலமிட்டு, பின்னர்  பீரோவுக்கு அடியில் கோலமாவை வைத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவம் இடத்திற்கு வந்த காவலர்கள் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடனுக்கு பயந்து மின்சாரம் வைத்த மூதாட்டி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சீர்காழி அருகே குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 23 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். ராமசந்திரன் அவரது இரண்டு மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வழிபாடு செய்ய பாதயாத்திரையாக கடந்த 24ஆம் தேதி புறப்பட்டு சென்றுள்ளார்.


திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து மூதாட்டி பலியான சோகம்..!

இந்நிலையில், இன்று காலை ராமசந்திரன் வீட்டிற்கு உறவினர் வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டின் உரிமையாளர் ராமசந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமசந்திரன் உடனடியாக வேளாங்கண்ணியில் இருந்து  புறப்பட்டு வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இரண்டு அறைகள் மற்றும் மாடியில் உள்ள வீட்டிலும் பீரோக்களில் வைத்திருந்த 23 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ராமசந்திரன் அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவலைக்கப்பட்டு கைரேகைகள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றத்திற்க்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் திருவிழா வெகு விமரிசியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு விழாவானது வருகின்ற ஆகஸ்ட்  29ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக சென்று ஆரோக்கிய மாதாவின் அருளை பெருவது வழக்கம்.  


திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து மூதாட்டி பலியான சோகம்..!

சென்னை, பெங்களூர், கர்நாடாக, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டு, வருகின்ற 29 -ம் தேதி கொடியேற்றத்தை பார்ப்பதால் தங்கள் கவலை நீங்கி வாழ்வில் புதுமை நிகழ்வதாகவும், நோய் நொடியின்றி வாழ்வதற்கும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் மாதாவை பாதயாத்திரையாக சென்று வழிபடுவதாக தெரிவிக்கின்றனர். வருகின்ற 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவால் வேளாங்கண்ணி முழுவதும் மக்கள் வெள்ளத்தில் 10 நாட்கள் நிரம்பி காணப்படும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget