மேலும் அறிய

திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து மூதாட்டி பலியான சோகம்..!

சீர்காழியில் திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம் கொடுத்த தூய்மை பணியாளர் அதே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஈசானிய தெருவை சேர்ந்தவர் 68 வயதான அன்பழகி. இவர் சீர்காழி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அன்பழகி கணவர் உயிரிழந்த நிலையில் மகன்கள், மகள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். இந்த சூழலில் திருடர்கள் பயத்தினால் இவர் வீட்டில் வைத்துள்ள பீரோவிற்கு மின்சாரம் கொடுத்து இரவில் தூங்குவது வழக்கமாக கொண்டிருந்தார்.


திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து மூதாட்டி பலியான சோகம்..!

இந்நிலையில் இன்று காலை எழுந்த அன்பழகி மின் இணைப்பை நிறுத்தாமல் வீட்டு வாசலில் கோலமிட்டு, பின்னர்  பீரோவுக்கு அடியில் கோலமாவை வைத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவம் இடத்திற்கு வந்த காவலர்கள் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடனுக்கு பயந்து மின்சாரம் வைத்த மூதாட்டி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சீர்காழி அருகே குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 23 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். ராமசந்திரன் அவரது இரண்டு மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வழிபாடு செய்ய பாதயாத்திரையாக கடந்த 24ஆம் தேதி புறப்பட்டு சென்றுள்ளார்.


திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து மூதாட்டி பலியான சோகம்..!

இந்நிலையில், இன்று காலை ராமசந்திரன் வீட்டிற்கு உறவினர் வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டின் உரிமையாளர் ராமசந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமசந்திரன் உடனடியாக வேளாங்கண்ணியில் இருந்து  புறப்பட்டு வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இரண்டு அறைகள் மற்றும் மாடியில் உள்ள வீட்டிலும் பீரோக்களில் வைத்திருந்த 23 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ராமசந்திரன் அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவலைக்கப்பட்டு கைரேகைகள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றத்திற்க்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் திருவிழா வெகு விமரிசியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு விழாவானது வருகின்ற ஆகஸ்ட்  29ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக சென்று ஆரோக்கிய மாதாவின் அருளை பெருவது வழக்கம்.  


திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம்.... ஷாக் அடித்து மூதாட்டி பலியான சோகம்..!

சென்னை, பெங்களூர், கர்நாடாக, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டு, வருகின்ற 29 -ம் தேதி கொடியேற்றத்தை பார்ப்பதால் தங்கள் கவலை நீங்கி வாழ்வில் புதுமை நிகழ்வதாகவும், நோய் நொடியின்றி வாழ்வதற்கும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் மாதாவை பாதயாத்திரையாக சென்று வழிபடுவதாக தெரிவிக்கின்றனர். வருகின்ற 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவால் வேளாங்கண்ணி முழுவதும் மக்கள் வெள்ளத்தில் 10 நாட்கள் நிரம்பி காணப்படும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
"என் உயிருக்கு ஆபத்து... காப்பாற்றுங்கள்"– எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத மனைவி! பரபரப்பு பின்னணி!
" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget