மேலும் அறிய

மயிலாடுதுறை : கல்லூரி மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் பள்ளி ஆசிரியர் கைது

மயிலாடுதுறையில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது, கல்லூரி மாணவி பாலியல் வன்குற்றப் புகார் அளித்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

மயிலாடுதுறையில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது கல்லூரி மாணவி பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்துள்ளார். உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின்கீழ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


மயிலாடுதுறை : கல்லூரி மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் பள்ளி ஆசிரியர் கைது

சென்னை பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து கராத்தே பயிற்சி மாஸ்டர் கெபிராஜ் மற்றும் பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன்  என தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்துள்ளன. பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று அவரது செல்போன் நம்பர் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப் வாயிலாக 100 புகார்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ளன. 


மயிலாடுதுறை : கல்லூரி மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் பள்ளி ஆசிரியர் கைது

இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் நூற்றாண்டுகள் பழமையான ஒரு பள்ளியில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை 6-ஆம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.  விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவரும் அண்ணாதுரையிடம் பயிற்சி பெற்று பல்வேறு பதக்கங்களைப் வென்றுள்ளதாகவும், பயிற்சி அளித்த ஆசிரியர் அண்ணாதுரை இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், உடல் ரீதியாக சீண்டல்களில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். 


மயிலாடுதுறை : கல்லூரி மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் பள்ளி ஆசிரியர் கைது

2018-ஆம் ஆண்டு அந்த மாணவியை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வதாக கூறி, தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளதாகவும், தற்போது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாலியல் தொந்தரவு குறித்து வெளியில் சொல்ல முடியாமல் இருந்த மாணவி சமீபத்தில் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் அளித்து வருவதும் அதனை அடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்படுவதையும் அறிந்து தைரியம் அடைந்து, தற்போது காவல்நிலயத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பையும், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


மயிலாடுதுறை : கல்லூரி மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் பள்ளி ஆசிரியர் கைது

மயிலாடுதுறை மாணவி அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்த பள்ளியில் படித்த பல மாணவிகளின் பெற்றோர்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். இந்த பாலியல் குற்றச்சாட்டு இந்த ஒரு மாணவியுடன் முடியுமா? அல்லது மேலும் பல மாணவிகளுக்கு  புகார் கொடுக்க வருவார்களா என்றும், கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் நடைபெறும் விசாரணையில், இதில் வேறு ஆசிரிகளும் ஈடுபட்டுள்ளார்களா என்ற கேள்வி பெற்றோர்களிடம் எழுந்துள்ளது. 


மயிலாடுதுறை : கல்லூரி மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் பள்ளி ஆசிரியர் கைது

இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்து, அவருக்கு ஆதரவாக அவரிடம் பயின்ற ஏராளமான மாணவர்கள் காவல்நிலையத்தில் திரண்டனர். புகார் அளித்த மாணவியின் தோழி கூறுகையில், ”அவளுக்கு வேலை வாங்கித் தராமல், தனக்கு உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை வேலை வாங்கி கொடுத்தார் என்னும் காழ்ப்புணர்ச்சியில் பழிவாங்கும் நோக்கத்தில் அவர்மீது அவதூறு புகார்” அளித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget