மேலும் அறிய

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

’’ஆசிரியர் நல்லவர், அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த புகாரை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து,  மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும்’’

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வரலாறு பாட ஆசிரியராக, மதுக்கூர் தாலுகா நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (52) பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது பள்ளி மாணவி, கடந்த 17 ஆம் தேதி தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது, ஹால் சூப்பர்வைசராக இருந்த ராஜ்குமார் மாணவியின் மேஜை அருகே நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்து, காலால் சீண்டி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.  


போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி வீட்டில் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மாணவி அளித்த புகார் குறித்து, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயா மாணவியிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர் ராஜ்குமார்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.


போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்
இதையடுத்து ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயா,  தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூர் சிறையில் ஆசிரியர் ராஜ்குமார் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜ்குமார் மீது,  சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவிகள், ஆசிரியர் ராஜ்குமாருக்கு ஆதரவாக, பள்ளி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள், ஆசிரியர் நல்லவர், அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த புகாரை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து,  மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர்.   சில மாணவிகள், பள்ளிக்கு செல்லும் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

இதனால் மதுக்கூர் - மன்னார்குடி இடையே போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் மறியலில் ஈடுபட்ட  மாணவிகளிடம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் கணேஷ், போலீஸ் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் மற்றும் தலைமை ஆசிரியர், பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

அப்போது ஆசிரியர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதை ரத்து செய்ய கோரியும், மீண்டும் அதே ஆசிரியர் அதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை கேட்டுக் கொண்ட வட்டாட்சியர் இதுகுறித்து உயர் அலுவலர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை  எடுப்பதாக தெரிவித்தார். அதனையடுத்து மாணவிகள்  கலைந்து சென்றனர். மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், மதுக்கூர் - மன்னார்குடி சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Israel Iron Beam: இஸ்ரேல் களமறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
Trump Vs Iran IRGC: “சரணடையலைன்னா சாவுதான்“; எச்சரித்த ட்ரம்ப்; இறங்கி அடிக்க தயாராகும் ஈரான்.? என்ன நடக்கும்.?
“சரணடையலைன்னா சாவுதான்“; எச்சரித்த ட்ரம்ப்; இறங்கி அடிக்க தயாராகும் ஈரான்.? என்ன நடக்கும்.?
DMK CONGRESS Alliance: 25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
Iran Prez. Masoud Pledge: “தவறு செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி“; சூளுரைத்த ஈரான் அதிபர்; போர் ஓயாது போல இருக்கே.!
“தவறு செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி“; சூளுரைத்த ஈரான் அதிபர்; போர் ஓயாது போல இருக்கே.!
Embed widget