மேலும் அறிய

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

’’ஆசிரியர் நல்லவர், அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த புகாரை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து,  மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும்’’

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வரலாறு பாட ஆசிரியராக, மதுக்கூர் தாலுகா நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (52) பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது பள்ளி மாணவி, கடந்த 17 ஆம் தேதி தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது, ஹால் சூப்பர்வைசராக இருந்த ராஜ்குமார் மாணவியின் மேஜை அருகே நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்து, காலால் சீண்டி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.  


போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி வீட்டில் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மாணவி அளித்த புகார் குறித்து, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயா மாணவியிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர் ராஜ்குமார்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.


போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்
இதையடுத்து ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயா,  தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூர் சிறையில் ஆசிரியர் ராஜ்குமார் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜ்குமார் மீது,  சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவிகள், ஆசிரியர் ராஜ்குமாருக்கு ஆதரவாக, பள்ளி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள், ஆசிரியர் நல்லவர், அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த புகாரை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து,  மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர்.   சில மாணவிகள், பள்ளிக்கு செல்லும் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

இதனால் மதுக்கூர் - மன்னார்குடி இடையே போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் மறியலில் ஈடுபட்ட  மாணவிகளிடம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் கணேஷ், போலீஸ் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் மற்றும் தலைமை ஆசிரியர், பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

அப்போது ஆசிரியர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதை ரத்து செய்ய கோரியும், மீண்டும் அதே ஆசிரியர் அதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை கேட்டுக் கொண்ட வட்டாட்சியர் இதுகுறித்து உயர் அலுவலர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை  எடுப்பதாக தெரிவித்தார். அதனையடுத்து மாணவிகள்  கலைந்து சென்றனர். மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், மதுக்கூர் - மன்னார்குடி சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”வம்புச் சண்டைக்கு வரல..தலைமை போட்டியில் நான் இல்லை” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
”வம்புச் சண்டைக்கு வரல..தலைமை போட்டியில் நான் இல்லை” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
IPL 2025 MI vs LSG: கவலை தரும் ரிஷப் பண்ட் கம்பேக் தருவாரா? மும்பையை மிரள வைப்பாரா?
IPL 2025 MI vs LSG: கவலை தரும் ரிஷப் பண்ட் கம்பேக் தருவாரா? மும்பையை மிரள வைப்பாரா?
தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை: 16 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை: 16 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Murugan Temple Theft CCTV | மருதமலை கோவிலில் திருட்டு!சாமியார் வேடத்தில் வந்த திருடன்TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வம்புச் சண்டைக்கு வரல..தலைமை போட்டியில் நான் இல்லை” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
”வம்புச் சண்டைக்கு வரல..தலைமை போட்டியில் நான் இல்லை” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
IPL 2025 MI vs LSG: கவலை தரும் ரிஷப் பண்ட் கம்பேக் தருவாரா? மும்பையை மிரள வைப்பாரா?
IPL 2025 MI vs LSG: கவலை தரும் ரிஷப் பண்ட் கம்பேக் தருவாரா? மும்பையை மிரள வைப்பாரா?
தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை: 16 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை: 16 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
JEE Mains நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விபரம் இதோ
JEE Mains நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விபரம் இதோ
Karthigai Deepam: முதலிரவுக்கு ஓகே சொல்வாளா ரேவதி? பரம்பரைக் கட்டில் தயார் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முதலிரவுக்கு ஓகே சொல்வாளா ரேவதி? பரம்பரைக் கட்டில் தயார் - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget