![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Crime: காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி.. பள்ளி தோழி உட்பட 3 பேர் கைது..!
காதலுடன் சேர்ந்து நிவேதா தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளார்.
![Crime: காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி.. பள்ளி தோழி உட்பட 3 பேர் கைது..! salem: man killed the boyfriend Dinesh and her school friend Vidya and put them in jail Crime: காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி.. பள்ளி தோழி உட்பட 3 பேர் கைது..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/30/26276173d95055cadfca9bb0a107a6a21690696578949113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தறி தொழிலாளியான இவருக்கு நிவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் வேலை பார்த்த சுந்தர்ராஜ் உடல்நிலை சரியில்லை என்பதால் சொந்த ஊரிலேயே தறி தொழில் செய்து வந்தார். சுந்தர்ராஜ் மனைவி நிவேதா ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு ஆசிரியராக வேலைக்கு சென்று வந்துள்ளார்.
அப்பொழுது அவரின் பள்ளி தோழி வித்யா என்பவர் மூலம் காட்டிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் நண்பராக அறிமுகம் ஆகி உள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நட்பு காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் நிவேதாவின் கணவர் சுந்தர்ராஜ்க்கு தெரிய வரவே மனைவியை செல்போனில் பேசக்கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் மாமனார், மாமியார் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனைப் பயன்படுத்தி காதலன் தினேஷை வீட்டிற்கு வரவழைத்து முன்னதாக கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
அதன் பிறகு காதலுடன் சேர்ந்து நிவேதா தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளார். அதன் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக தூக்கிட்டு இறந்தது போல் நாடகமாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து உறவினர்களுக்கு கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்ததுடன் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த சுந்தர்ராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் உடற்கூறு அறிக்கையில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டதில் பள்ளி தோழி வித்யா மற்றும் காதலன் தினேஷுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து காதலன் தினேஷ் மற்றும் அவரது பள்ளி தோழி வித்யா ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஜலகண்டாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)