மேலும் அறிய

புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

தமிழக-புதுச்சேரி மாநில எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் பயங்கர மோதலில் ஈடுபட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தேவா (வயது 24). நாட்டு வெடிகுண்டு வெடித்து கை சிதறிய நிலையில் தேவாவை, அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார், உடனே போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவாவிடம் விசாரித்தனர்.


புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில், கீழ்குமாரமங்கலம் மலட்டாறு பகுதிக்கு போலீசார் சென்றனர். அப்போது அந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் கட்டில், பேனர், சூட்கேஸ், உணவு பொருட்கள் உள்ளிட்டவை ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. இந்த சம்பவம் தமிழக எல்லை பகுதியில் நடந்ததால், கடலூர் போலீசார், இதுபற்றி புதுச்சேரி மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் புதுச்சேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கடலூர் மாவட்ட போலீசாரும், புதுச்சேரி மாநில போலீசாரும் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.


புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருடன், தாடி அய்யனார், அருணாசலம், அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். இதில் தாடி அய்யனார் மற்றும் அருணாசலம், அருண்பாண்டியன் ஆகியோருக்கிடையே மோதல் ஏற்பட்டதால், அவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் தனித்தனி கும்பலாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணாசலம் குழுவில் இருந்த தேவாவின் உறவினரை, தாடி அய்யனார் தலைமையிலான கும்பல் தாக்கியுள்ளனர். அதன் பிறகு தாடி அய்யனார் தலைமையிலான கும்பல் கடந்த சில நாட்களாக கீழ்குமாரமங்கலம் மலட்டாறு பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தேவா தனது கூட்டாளிகளுடன் நேற்று அதிகாலை மலட்டாறு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தேவா மற்றும் தாடி அய்யனார் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.


புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

இந்த மோதலில் தாடி அய்யனார், வேல்முருகன் ஆகியோர் வெட்டு காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதும், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தேவாவின் கை சிதைந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா, மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொலை வழக்கு இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் ஜிம்பா உதவியுடன் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.  முதற்கட்ட விசாரணையில், தாடி அய்யனார் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அவர், புதுச்சேரி சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.


புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

மேலும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு தாடி அய்யனார் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளதும், அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தாடி அய்யனார் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழக எல்லைப்பகுதியான ரெட்டிச்சாவடி கீழ்குமாரமங்கலம் பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், இரு ரவுடி கும்பலுக்கும் இடையே எதற்காக மோதல் ஏற்பட்டது?, நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்?, நாட்டு வெடிகுண்டை வீசும்போது எதிர்பாராதவிதமாக வெடித்து தேவாவின் கை சிதைந்ததா? அல்லது தாடி அய்யனார் தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசியதில் அவரது கை சிதைந்ததா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கணவரின் நண்பருடன் காதல் உறவு.. தலை துண்டித்து பெண் கொலை!
கணவரின் நண்பருடன் காதல் உறவு.. தலை துண்டித்து பெண் கொலை!
கணவன் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி உயிரிழப்பு - மயிலாடுதுறை பேருந்து நிலைய மாற்றமே விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு..!
கணவன் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி உயிரிழப்பு - மயிலாடுதுறை பேருந்து நிலைய மாற்றமே விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு..!
ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம்.. என ஜெயராஜ் - பென்னிக்கிஸ் - கடுமையாக தாக்கியுள்ளனர் !
ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம்.. என ஜெயராஜ் - பென்னிக்கிஸ் - கடுமையாக தாக்கியுள்ளனர் !
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு, அடுத்த கட்டம் என்ன? முழு விவரம் !
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு, அடுத்த கட்டம் என்ன? முழு விவரம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Campaign Date : நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்...
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
TASMAC Liquor Bottles : டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
Embed widget