மேலும் அறிய

புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

தமிழக-புதுச்சேரி மாநில எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் பயங்கர மோதலில் ஈடுபட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தேவா (வயது 24). நாட்டு வெடிகுண்டு வெடித்து கை சிதறிய நிலையில் தேவாவை, அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார், உடனே போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவாவிடம் விசாரித்தனர்.


புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில், கீழ்குமாரமங்கலம் மலட்டாறு பகுதிக்கு போலீசார் சென்றனர். அப்போது அந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் கட்டில், பேனர், சூட்கேஸ், உணவு பொருட்கள் உள்ளிட்டவை ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. இந்த சம்பவம் தமிழக எல்லை பகுதியில் நடந்ததால், கடலூர் போலீசார், இதுபற்றி புதுச்சேரி மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் புதுச்சேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கடலூர் மாவட்ட போலீசாரும், புதுச்சேரி மாநில போலீசாரும் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.


புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருடன், தாடி அய்யனார், அருணாசலம், அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். இதில் தாடி அய்யனார் மற்றும் அருணாசலம், அருண்பாண்டியன் ஆகியோருக்கிடையே மோதல் ஏற்பட்டதால், அவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் தனித்தனி கும்பலாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணாசலம் குழுவில் இருந்த தேவாவின் உறவினரை, தாடி அய்யனார் தலைமையிலான கும்பல் தாக்கியுள்ளனர். அதன் பிறகு தாடி அய்யனார் தலைமையிலான கும்பல் கடந்த சில நாட்களாக கீழ்குமாரமங்கலம் மலட்டாறு பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தேவா தனது கூட்டாளிகளுடன் நேற்று அதிகாலை மலட்டாறு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தேவா மற்றும் தாடி அய்யனார் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.


புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

இந்த மோதலில் தாடி அய்யனார், வேல்முருகன் ஆகியோர் வெட்டு காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதும், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தேவாவின் கை சிதைந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா, மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொலை வழக்கு இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் ஜிம்பா உதவியுடன் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.  முதற்கட்ட விசாரணையில், தாடி அய்யனார் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அவர், புதுச்சேரி சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.


புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் மோதல்! 3 பேர் படுகாயம்..!

மேலும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு தாடி அய்யனார் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளதும், அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தாடி அய்யனார் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழக எல்லைப்பகுதியான ரெட்டிச்சாவடி கீழ்குமாரமங்கலம் பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், இரு ரவுடி கும்பலுக்கும் இடையே எதற்காக மோதல் ஏற்பட்டது?, நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்?, நாட்டு வெடிகுண்டை வீசும்போது எதிர்பாராதவிதமாக வெடித்து தேவாவின் கை சிதைந்ததா? அல்லது தாடி அய்யனார் தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசியதில் அவரது கை சிதைந்ததா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
சென்னையில் அதிர்ச்சி ; 76 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - 57 வயது பிளம்பர் கைது
சென்னையில் அதிர்ச்சி ; 76 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - 57 வயது பிளம்பர் கைது
முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்
முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN DMK : 3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
Edappadi Palanisamy: “திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
“திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
May Day 2026: உழைப்பாளர் தினம் இன்று.. உலகை இயக்கும் கரங்களுக்கான வாழ்த்துகள்..
May Day 2026: உழைப்பாளர் தினம் இன்று.. உலகை இயக்கும் கரங்களுக்கான வாழ்த்துகள்..
Selvaperunthagai Congress : தொங்கு சட்டசபை வந்தால் ஆட்சியில் பங்கா.?? காங்கிரஸ் நிலை என்ன.? செல்வப்பெருந்தகை பதில்
தொங்கு சட்டசபை வந்தால் ஆட்சியில் பங்கா.?? காங்கிரஸ் நிலை என்ன.? செல்வப்பெருந்தகை பதில்
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TN Exit Polls 2026: அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
Embed widget