மேலும் அறிய

குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!

மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை உடைத்து ரகளையில் ஈடுப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அகிலம்பேட்டையை சேர்ந்தவர் பூங்குழலி விஜயகுமார். இவர் கருவுற்றநாளிலிருந்து மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையே ஜுலை மாதம் 19 ம் தேதி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை நடத்தும் மருத்துவர் லண்டன் சென்று திரும்பி ஒரு சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை திரும்பியுள்ளார். 


குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!

இதனையடுத்து நேற்று முன்தினம் வழக்கம்போல் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற பூங்குழலி விஜயகுமார் வந்துள்ளனர்.  இந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் வேறு ஒரு பெண் மருத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும், இல்லை என்றால் குழந்தைக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். அதனையடுத்து நேற்று காலை அறுவை சிகிச்சை செய்து ஆண்குழந்தையை எடுத்துள்ளனர். குறைமாதத்தில் குழந்தை பிறந்ததால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்துள்ளனர். 


குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!


உரிய மருத்துவர் கண்காணிப்பு இல்லாமல் செவிலியரே குழந்தையை தூக்கிச்சென்று தாயிடம் நான்கு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வைத்துள்ளார்.  இரவு 7 மணிக்கு திடீரென்று குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர் கூறவே அதிர்ந்துபோன பெற்றோர் செய்வதறியாது நன்றாக இருந்த குழந்தை எப்படி இறந்தது, மருத்துவர் ஒருவர் அருகில் இருந்து பார்த்திருந்தால் இதுபோல் நடந்திருக்காது, மருத்துவமனையின் அலட்சியத்தால் தன் குழந்தையை இறக்க நேரிட்டது என்று கூறி மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்ணாடியை அடித்து உடைத்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.  


குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறைை காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எப்படி குழந்தை இறந்தது என்றே தெரியவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாகவும், குழந்தை எப்படி  இறந்தது, அடுத்த மாதம் பிரசவ தேதி குறித்தும்  ஏன் திடீரென்று அறுவை சிகிச்சை செய்தனர்? பிரசவம் நடைபெற்ற பிறகு ஏன் மருத்துவரைக் கொண்டு கண்காணிக்கவில்லை என பல்வேறு கேள்விகளை உறவினர்கள் எழுப்பினர். அதனையடுத்து டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் குழந்தையின் உறவினர்கள் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிலர் பணத்திற்காக சுகப்பிரசவத்தைக்கூட அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்து. அறுவை சிகிச்சை செய்து தாய், சேய் ஆகிய இருவரது உயிருடன் விளையாடுவதகாவும், இது போன்ற மருத்துவமனைகளை தமிழ்நாடு அரசு உரிய முறையில் கண்காணித்து தவறான சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை உரிமத்தையும், மருத்துவர்களின் மருத்துவ பயின்ற படிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் இதுபோன்ற தவறுகள் தொடராது என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் கைது
குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் கைது
இன்ஸ்டா பெண் பிரபலம் கொடூர கொலை! தூக்கில் தொங்கிய கணவன் - சென்னையில் நடந்தது என்ன?
இன்ஸ்டா பெண் பிரபலம் கொடூர கொலை! தூக்கில் தொங்கிய கணவன் - சென்னையில் நடந்தது என்ன?
சிக்கன் கறி தகராறு ; கணவனை கழுத்தறுத்துக் கொன்ற மனைவி !! அரிவாளால் வெட்டிய பயங்கரம்
சிக்கன் கறி தகராறு ; கணவனை கழுத்தறுத்துக் கொன்ற மனைவி !! அரிவாளால் வெட்டிய பயங்கரம்
" நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம் " மகனுக்கு வந்த மெசேஜ் !! தாய் அரிவாளால் வெட்டிக் கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Poll: தமிழ்நாடு முதல் மே. வங்கம் வரை! 2021 சட்டமன்ற தேர்தலில் கணித்ததும், நடந்ததும் என்ன? ஓர் அலசல்
Exit Poll: தமிழ்நாடு முதல் மே. வங்கம் வரை! 2021 சட்டமன்ற தேர்தலில் கணித்ததும், நடந்ததும் என்ன? ஓர் அலசல்
Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?
Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?
Puducherry Exit Poll: 2021-ல் சரியாகக் கணித்த எக்ஸிட் போல்.. ரங்கசாமியின் வெற்றியை உறுதி செய்த தரவுகள்! 2026-ல் எப்படி?
Puducherry Exit Poll: 2021-ல் சரியாகக் கணித்த எக்ஸிட் போல்.. ரங்கசாமியின் வெற்றியை உறுதி செய்த தரவுகள்! 2026-ல் எப்படி?
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
TVK VIJAY : ‘இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக உறுதியளித்தாரா விஜய்?’ போர்க்கொடித் தூக்கும் அமைப்புகள்..!
இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக எழுதிக்கொடுத்தாரா விஜய்?
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
Embed widget