மேலும் அறிய

குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!

மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை உடைத்து ரகளையில் ஈடுப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அகிலம்பேட்டையை சேர்ந்தவர் பூங்குழலி விஜயகுமார். இவர் கருவுற்றநாளிலிருந்து மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையே ஜுலை மாதம் 19 ம் தேதி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை நடத்தும் மருத்துவர் லண்டன் சென்று திரும்பி ஒரு சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை திரும்பியுள்ளார். 


குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!

இதனையடுத்து நேற்று முன்தினம் வழக்கம்போல் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற பூங்குழலி விஜயகுமார் வந்துள்ளனர்.  இந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் வேறு ஒரு பெண் மருத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும், இல்லை என்றால் குழந்தைக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். அதனையடுத்து நேற்று காலை அறுவை சிகிச்சை செய்து ஆண்குழந்தையை எடுத்துள்ளனர். குறைமாதத்தில் குழந்தை பிறந்ததால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்துள்ளனர். 


குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!


உரிய மருத்துவர் கண்காணிப்பு இல்லாமல் செவிலியரே குழந்தையை தூக்கிச்சென்று தாயிடம் நான்கு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வைத்துள்ளார்.  இரவு 7 மணிக்கு திடீரென்று குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர் கூறவே அதிர்ந்துபோன பெற்றோர் செய்வதறியாது நன்றாக இருந்த குழந்தை எப்படி இறந்தது, மருத்துவர் ஒருவர் அருகில் இருந்து பார்த்திருந்தால் இதுபோல் நடந்திருக்காது, மருத்துவமனையின் அலட்சியத்தால் தன் குழந்தையை இறக்க நேரிட்டது என்று கூறி மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்ணாடியை அடித்து உடைத்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.  


குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறைை காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எப்படி குழந்தை இறந்தது என்றே தெரியவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாகவும், குழந்தை எப்படி  இறந்தது, அடுத்த மாதம் பிரசவ தேதி குறித்தும்  ஏன் திடீரென்று அறுவை சிகிச்சை செய்தனர்? பிரசவம் நடைபெற்ற பிறகு ஏன் மருத்துவரைக் கொண்டு கண்காணிக்கவில்லை என பல்வேறு கேள்விகளை உறவினர்கள் எழுப்பினர். அதனையடுத்து டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் குழந்தையின் உறவினர்கள் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிலர் பணத்திற்காக சுகப்பிரசவத்தைக்கூட அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்து. அறுவை சிகிச்சை செய்து தாய், சேய் ஆகிய இருவரது உயிருடன் விளையாடுவதகாவும், இது போன்ற மருத்துவமனைகளை தமிழ்நாடு அரசு உரிய முறையில் கண்காணித்து தவறான சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை உரிமத்தையும், மருத்துவர்களின் மருத்துவ பயின்ற படிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் இதுபோன்ற தவறுகள் தொடராது என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget