மேலும் அறிய

குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!

மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை உடைத்து ரகளையில் ஈடுப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அகிலம்பேட்டையை சேர்ந்தவர் பூங்குழலி விஜயகுமார். இவர் கருவுற்றநாளிலிருந்து மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையே ஜுலை மாதம் 19 ம் தேதி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை நடத்தும் மருத்துவர் லண்டன் சென்று திரும்பி ஒரு சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை திரும்பியுள்ளார். 


குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!

இதனையடுத்து நேற்று முன்தினம் வழக்கம்போல் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற பூங்குழலி விஜயகுமார் வந்துள்ளனர்.  இந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் வேறு ஒரு பெண் மருத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும், இல்லை என்றால் குழந்தைக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். அதனையடுத்து நேற்று காலை அறுவை சிகிச்சை செய்து ஆண்குழந்தையை எடுத்துள்ளனர். குறைமாதத்தில் குழந்தை பிறந்ததால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்துள்ளனர். 


குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!


உரிய மருத்துவர் கண்காணிப்பு இல்லாமல் செவிலியரே குழந்தையை தூக்கிச்சென்று தாயிடம் நான்கு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வைத்துள்ளார்.  இரவு 7 மணிக்கு திடீரென்று குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர் கூறவே அதிர்ந்துபோன பெற்றோர் செய்வதறியாது நன்றாக இருந்த குழந்தை எப்படி இறந்தது, மருத்துவர் ஒருவர் அருகில் இருந்து பார்த்திருந்தால் இதுபோல் நடந்திருக்காது, மருத்துவமனையின் அலட்சியத்தால் தன் குழந்தையை இறக்க நேரிட்டது என்று கூறி மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்ணாடியை அடித்து உடைத்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.  


குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறைை காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எப்படி குழந்தை இறந்தது என்றே தெரியவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாகவும், குழந்தை எப்படி  இறந்தது, அடுத்த மாதம் பிரசவ தேதி குறித்தும்  ஏன் திடீரென்று அறுவை சிகிச்சை செய்தனர்? பிரசவம் நடைபெற்ற பிறகு ஏன் மருத்துவரைக் கொண்டு கண்காணிக்கவில்லை என பல்வேறு கேள்விகளை உறவினர்கள் எழுப்பினர். அதனையடுத்து டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் குழந்தையின் உறவினர்கள் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிலர் பணத்திற்காக சுகப்பிரசவத்தைக்கூட அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்து. அறுவை சிகிச்சை செய்து தாய், சேய் ஆகிய இருவரது உயிருடன் விளையாடுவதகாவும், இது போன்ற மருத்துவமனைகளை தமிழ்நாடு அரசு உரிய முறையில் கண்காணித்து தவறான சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை உரிமத்தையும், மருத்துவர்களின் மருத்துவ பயின்ற படிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் இதுபோன்ற தவறுகள் தொடராது என கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget