மேலும் அறிய

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது குழந்தை உயிரிழப்பு - தாய் உள்பட 3 பேர் கைது..!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 19). இவர் மதுரை மாவட்டம் அய்யூரில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்தார். ஜெகனுக்கும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பெண் கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக தனது கணவரை பிரிந்து தனது 3 வயது குழந்தையுடன் கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து மதுரைக்கு வந்தார். அங்கு செங்கல் சூளையில் ஜெகனுடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் ஜெகனை பார்க்க அவருடைய உறவினர் பழனியப்பன் (28) செங்கல்சூளைக்கு வந்தார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குழந்தைக்கு பழனியப்பன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த குழந்தையின் தாயார் ஜெகனிடம் நடந்த விவரங்களை கூறி பழனியப்பனை வீட்டில் இருந்து அனுப்பும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இந்த குழந்தையால்தான் நமக்கு பிரச்சினை என்று கூறிய ஜெகன் குழந்தையை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. பின்னர் 3 பேரும் மதுரையில் இருந்து குழந்தையுடன் ஊருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.


பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது குழந்தை உயிரிழப்பு - தாய் உள்பட 3 பேர் கைது..!

இதைதொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு முதலுதவிசிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந் தேதி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையின் தாய் உள்பட 3 பேரும் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் குழந்தை நல பாதுகாப்பு பிரிவினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தஸ்தகீர் கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது குழந்தை உயிரிழப்பு - தாய் உள்பட 3 பேர் கைது..!

மேலும் இதில் குழந்தையின் தாய் ஈரோட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விராலிமலை போலீசார் அங்கு சென்று குழந்தையின் தாயை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மேலும் குழந்தையின் இறப்பில் தொடர்புடைய ஜெகன் மற்றும் பழனியப்பனை விராலிமலை போலீசார் கைது செய்து விராலிமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget