மேலும் அறிய

புதுக்கோட்டையை அதிரவைத்த இரட்டை கொலை; 4 மாதங்களுக்குப் பிறகு இருவர் கைது - துப்புதுலங்கியது எப்படி?

குற்றவாளிகள் யார் என்று 4 மாதங்களாக நடத்திய தீவிர விசாரணையில் கடந்த மே 2ம் தேதி துப்புதுலங்கியது.

புதுக்கோட்டையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு பேர் இறந்துகிடந்த வழக்கில் 4 மாதங்களுக்குப் பிறகு துப்புதுலங்கியது.

இரட்டைக் கொலை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியில் வசித்துவருபவர் சிகப்பி. அவரது கணவர் ஆறுமுகம் உயிரிழந்துவிட்ட நிலையில், பொறியாளரான தன் மகன் பழனியப்பனுடன் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் 23ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவரையும் கொன்றுவிட்டு அவர்கள் அணிந்திருந்த சுமார் மூன்றேகால் பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படையினரை அமைத்து புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவிட்டார். 


புதுக்கோட்டையை அதிரவைத்த இரட்டை கொலை; 4 மாதங்களுக்குப் பிறகு இருவர் கைது - துப்புதுலங்கியது எப்படி?

தீவிர விசாரணை:

இரண்டு பேரை கொலை செய்தது யார், நகைகளை கொள்ளையடிப்பது தான் நோக்கமா? ஏதேனும் முன்விரோதமா? குடும்பப் பிரச்சனையா? என்ற கோணத்தில் விசாரணை செய்துவந்தனர். சிகப்பி மற்றும் பழனியப்பன் ஆகியோருக்கு இரண்டு வீடுகள் உள்ள நிலையில் இரண்டு வீடுகளும் திறந்து கிடந்துள்ளது. அதனால், இருவரையும் தெரிந்த யாரோதான் இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வந்தனர். எனினும் குற்றவாளிகள் யார் என்று 4 மாதங்களாக நடத்திய தீவிர விசாரணையில் கடந்த மே 2ம் தேதி துப்புதுலங்கியது.

துப்பு துலங்கியது எப்படி?

பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபால் இவ்வழக்கு சம்பந்தமாக விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது இடைய புதூர் பேருந்து நிறுத்தம் அருகே  இருவர் நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்ததையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், ஒருவர் சிங்கம்புணரியைச் சேர்ந்த சக்தி என்பதும், மற்றொருவர் தேவக்கோட்டையைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், சிகப்பி மற்றும் பழனியப்பன் கொலையில் இருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.


புதுக்கோட்டையை அதிரவைத்த இரட்டை கொலை; 4 மாதங்களுக்குப் பிறகு இருவர் கைது - துப்புதுலங்கியது எப்படி?

இருவர் கைது:

கொத்தனாரான சக்தி பழனியப்பனிடம் கொத்தனாராக பணிபுரிந்துவந்துள்ளார். பணியில் இருந்து விலகிய நிலையில் நகைக்காக பழனியப்பன் மற்றும் சிகப்பி ஆகியோரை திட்டமிட்டு கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரிடமிருந்து தோடு, மோதிரம் உள்ளிட்ட நகைகள் கைப்பற்றப்பட்டது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.


புதுக்கோட்டையை அதிரவைத்த இரட்டை கொலை; 4 மாதங்களுக்குப் பிறகு இருவர் கைது - துப்புதுலங்கியது எப்படி?

இருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அந்த கிராம மக்கள் பீதியில் இருந்த நிலையில், குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்த காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவை கிராமமக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறையினரை வந்திதா பாண்டே ஐபிஎஸ் நேரில் வரவழைத்து வெகுமதிகள் வழங்கி பாராட்டினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"அரசாங்கமாவது, விதியாவது!" - தனியார் பள்ளி முதல்வர் ஆவேச பேச்சு; சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த RTE கட்டணக் கொள்ளை!
பாம்பு, பூரான் பயம்... கையில் தீப்பந்தம்! சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீதிக்கு வந்த மக்கள்!
பாம்பு, பூரான் பயம்... கையில் தீப்பந்தம்! சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீதிக்கு வந்த மக்கள்!
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Embed widget